news

News July 31, 2024

ஆடிப்பெருக்கின் தனிச்சிறப்பு

image

ஆடிப்பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என 3 நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்த ஆடி 18 அன்று, பூசம் நட்சத்திரத்தை விட்டுவிட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும்போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும். அதனால்தான் இந்த நாள்களில் தாலி மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகளை செய்யும் பழக்கத்தை நம் மூதாதையர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

News July 31, 2024

முதல்வருக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

image

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசை மீண்டும் விசாரிக்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் நடந்த இந்த சம்பவத்தை, அப்போதைய சபாநாயகர் உரிமைக்குழுவுக்கு அனுப்பினார். இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், சபாநாயகரின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற தனி நீதிபதி தடைவிதித்தார். தற்போது அவரது உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News July 31, 2024

இலங்கைக்கு எதிராக புதிய சாதனை படைப்பாரா கோலி?

image

இலங்கை அணிக்கு எதிராக விரைவில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில், கோலி 116 ரன்கள் எடுத்தால் 27 ஆயிரம் ரன்களை எட்டிய 4ஆவது சர்வதேச வீரர்
என்ற சாதனை படைப்பார். இதற்கு முன்னதாக, சச்சின், சங்ககாரா, ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட மூவர் மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர். தற்போது வரை கோலி, டெஸ்ட், ஒருநாள், T20 என 530 போட்டிகளில் விளையாடி 26,884 ரன்கள் எடுத்துள்ளார்.

News July 31, 2024

கேரளா: நிலச்சரிவு அபாயத்தில் 17,000 சதுர கி.மீ. நிலம்

image

கேரளாவில் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி உள்ள 17,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலப்பகுதியும் நிலச்சரிவு அபாயம் கொண்டதென பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய பிரபல புவி அறிவியல் ஆய்வு மைய முன்னாள் விஞ்ஞானி ஜி.சங்கர், 17,000 சதுர கி.மீ. பகுதியை விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. இதுபோல பிற நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டுமென்றார்.

News July 31, 2024

பேரிடர்களை தடுக்க முடியாது; தற்காக்கலாம்

image

நிலச்சரிவு, இயற்கை பேரிடர் என்பதால் அதனைத் தடுக்க முடியாது, ஆனால் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என காலநிலை ஆய்வாளர் ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்களை வேறு இடத்தில் குடியமர்த்த வேண்டும் என அறிவுறுத்திய அவர், நிலச்சரிவு நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News July 31, 2024

BREAKING: திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

image

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு மதமாற்ற தடைச்சட்டத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இதனைக் கண்டித்து நடந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது தொடர்பாக திருமா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News July 31, 2024

UPSC தலைவராக பிரீத்தி சுதன் நியமனம்

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) புதிய தலைவராக பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த தேர்வில் சர்ச்சை எழுந்ததால், யுபிஎஸ்சி தலைவர் பொறுப்பில் இருந்து மனோஜ் சோனி விலகிய நிலையில், அவருக்கு பதில் பிரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். 1983ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், மத்திய சுகாதாரத்துறை செயலாளராகவும், பாதுகாப்புத்துறை இணை செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

News July 31, 2024

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவுக்கு வாய்ப்பு: NDRF

image

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மழை தொடர்ந்து பொழியும் பட்சத்தில், இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். தற்போது வரை அங்கு மிதமான மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே நேற்று அதிகாலை நேர்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.

News July 31, 2024

தமிழக மக்களின் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது: இபிஎஸ்

image

சொந்த வீடு கட்டுவோம் என்ற தமிழக மக்களின் எண்ணத்தில், திமுக அரசு மண் அள்ளி போட்டுள்ளதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி கட்டண அளவு உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், மாநகராட்சி முதல் பேரூராட்சி வரை இந்த கட்டண உயர்வு நடைமுறையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஏழை மக்களின் நலன் கருதி, மீண்டும் பழைய கட்டணத்தை நடைமுறை படுத்த வலியுறுத்தியுள்ளார்.

News July 31, 2024

தமிழ் புதல்வன் திட்டம் ஆக.9ல் தொடக்கம்

image

கோவையில் ஆக.9 ஆம் தேதி தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், 6-12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் மாதம் ₹1000 வழங்கப்பட உள்ளது. ஏற்கெனவே கலை & அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

error: Content is protected !!