India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய அரசியலில் விரைவில் மாற்றம் வரும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உறுதிபடத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய அவர், மக்களின் மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளது எனத் தெரிவித்தார். இந்த நிலையை காங்கிரஸ் கட்சி தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், இதனை முழுமையான வெற்றியாக கருதி அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்திய வீரர் லக்சயா சென் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற குரூப் சுற்றில் இந்தோனேசிய வீரர் ஜோனதனை எதிர்கொண்ட அவர், 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த சுற்றில் வெற்றி பெற்றால் அவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. <<-se>>#Olympics2024<<>>
வயநாடு மாவட்டம் சூரல்மலை கிராமமே நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்துவிட்டது. தொடர் மழையால் முண்டக்கையில் நிலச்சரிவு நேரிட்டு, மண்ணும், பாறைகளும் கீழ்நோக்கி சூரல்மலையில் வந்துவிழுந்து வீடுகள், கார்களை மூடியுள்ளன. இருவாஞ்சி ஆற்றின் போக்கு திசைமாறி, சூரல்மலைக்குள் புகுந்து அனைத்தையும் அடித்துச்சென்றுள்ளது. ஏராளமானோர் நீரில் பல கி.மீ. தூரம் அடித்து செல்லப்பட்டு சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.
மொபைலுக்கு மர்ம எண்களில் இருந்து வரும் அழைப்பு, தேவையில்லாத அழைப்புகளை எளிதில் தவிர்க்க முடியும். இதற்கு அனைத்து போன்களிலும் வசதியுள்ளது. SETTINGS வசதிக்குள் சென்று, அதனுள் BLOCK LIST பிரிவை அழுத்த வேண்டும். அப்படி அழுத்தியதும் திறக்கும் பக்கத்தில், உங்களுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகளின் எண்களை குறிப்பிட்டு சேமித்தால், அந்த எண்ணிலிருந்து இனி எந்த அழைப்பும், குறுஞ்செய்தியும் உங்களுக்கு வராது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசும், கர்நாடக அரசும் பேசி தீர்வு காண பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். ஆனால், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயாராக இல்லை என டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் அவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசிய வழக்கில், ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சேனலின் நிறுவனர் ரெட் பிக்ஸ் ஜெரால்ட் ஜாமின் கேட்டிருந்தார். அதனை விசாரித்த நீதிபதி, “வெளியே யாருக்கும் பேட்டி கொடுக்கக் கூடாது. ரெட் பிக்ஸ் சேனலை மூட வேண்டும்” என்ற நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
சாப்பாட்டில் தயிர் சேர்ப்பது நல்லதா? கெட்டதா? என பலருக்கும் சந்தேகம் இருப்பதுண்டு. அதற்கு மருத்துவ ஆலோசகர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளை காணலாம். தயிரை உணவில் சேர்ப்பதால் பல நன்மைகள் கிடைப்பதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தயிரை சரியான முறையில் உணவில் சேர்த்தால், உடல் எடை குறையும் என்றும், பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றை குறைக்கும் என்றும் கூறுகின்றனர்.
முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அதிமுகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்த நிலையில், ஓபிஎஸ் அணியில் வெல்லமண்டி நடராஜன் செயல்பட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக ஓபிஎஸ் மீது அவர் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இபிஎஸ் முன்னிலையில் தாய் கட்சியான அதிமுகவில் விரைவில் இணைவார் என்று அவரது வட்டாரங்கள் கூறுகின்றன
நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு வாரம் முன்னதாக ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வயநாடு நிலச்சரிவில் காணாமல் போனோர் பற்றிய தகவல் தெரிவிக்க அவசர உதவி எண் வெளியிடப்பட்டுள்ளது. வயநாடு மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் 807 840 9770 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, காணாமல் போனோர் மற்றும் மருத்துவமனையில் உள்ளோர் பற்றி தகவல் தெரிவிக்கலாம். அங்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 170ஐ கடந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.