India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் போர்கோஹைன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ரவுண்ட் ஆஃப் 16இல், நார்வே வீராங்கனை சுனிவாவை எதிர்கொண்ட அவர் 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். ஆக.4இல் நடைபெறும் காலிறுதிச் சுற்றில் சீன வீராங்கனை லி கியூவை அவர் எதிர்கொள்கிறார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில், போர்கோஹைன் வெண்கலம் வென்றார். <<-se>>#Olympics<<>>
வயநாடு தொகுதி முன்னாள் எம்பி ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் நாளை பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவுள்ளனர். தொடர் மழை காரணமாக விமானம் தரையிரங்க முடியாததால் அவர் இன்னும் அங்கு செல்லவில்லை. ராகுல் நேரில் சென்று மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும் என்று பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனையடுத்து அவர் நாளை செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களில் 58 ஆண்கள், 55 பெண்கள் என மொத்தம் 113 பேரின் உடல்கள் மேப்பாடி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், 113 பேரில் 79 பேரின் உடல் அடையாளம் காணப்பட்ட நிலையில் 5 பேரின் உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. உடல்கள் உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. மேலும், அடையாளம் தெரியாத உடல்கள் பாதுகாக்கப்படுகிறது.
சென்னையில் தொழில்வரி உயர்த்தப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாத வருமானம் ரூ.21 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை உள்ளவர்களுக்கு தொழில் வரி 35% வரை மாநகராட்சி உயர்த்தியுள்ளதாக விமர்சித்துள்ள அவர், பெரிய நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஏழை, எளிய மக்களிடம் மேற்கொள்ளப்படும் இந்த கட்டணக் கொள்ளையை ஏற்க முடியாது என்றார்.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிக்கு, தமிழ்நாட்டில் இருந்து முதல் நபராக நடிகர் விக்ரம் ₹20 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார். வயநாடு துயரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்க முன்வர வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று காலை வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹20 லட்சம் தொகையை வழங்கியுள்ளார்.
கேரளாவிற்கு முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்தும் கேரள அரசு என்ன செய்துகொண்டிருந்தது என உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் கடிந்துள்ளார். குஜராத்திற்கு புயல் எச்சரிக்கை கொடுத்தபோது, அவர்கள் மத்திய அரசின் பேச்சுக்கு செவிசாய்த்ததால் அங்கு ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்றார். மேலும், மத்திய அரசு கொடுக்கும் எச்சரிக்கையை தயவு செய்து மாநில அரசுகள் படித்துப் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
வயநாட்டில் நேற்று நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், சுமார் 200 பேரை காணவில்லை. 1,000 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும், மேலும் 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.
*ஐடிஆர் (வருமான வரி) தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.
*HDFC கிரெடிட் கார்டு பயன்படுத்தி PayTM, CRED, MobiKwik போன்ற 3ஆம் தரப்பு செயலிகள் மூலம் வாடகை செலுத்தினால் 1% கட்டணம்.
₹50,000க்கு மேல் Utility Bills செலுத்தினாலும், பெட்ரோல், டீசல் போன்ற எரிப்பொருள் நிரப்ப ₹15,000க்கு மேல் பயன்படுத்தினாலும் 1% கட்டணம்.
*வீட்டு உபயோகம், வணிக சிலிண்டர்கள் விலை குறைய வாய்ப்புள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் புதிய தலைவராக பாகிஸ்தானின் மொசின் நக்வி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அதன் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா செயல்பட்டுவருகிறார். அவரது பதவிக்காலம் இந்தாண்டுடன் முடிகிறது. சமீபத்தில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.