India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் உள்ள நேரு மைதானத்தில் அக்னிவீர் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் நாளை (ஆக.1) தொடங்கி, ஆக.5 வரை நடைபெறுகிறது. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர், கோவை ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், முகாமில் கலந்துகொள்வதற்கான அனுமதி சீட்டை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
10ஆம் வகுப்பு படித்தோர் மற்றும் அதற்கும் குறைவாக படித்தோருக்கு மலேசியாவில் கட்டுமானப்பணியாளர், ஹெல்பர், வெல்டர் வேலைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வயது வரம்பு 22 – 50 வரை ஆகும். மாத ஊதியம் ₹27,746 – ₹49,547 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு <
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் வில்வித்தை போட்டியில், இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நெதர்லாந்து வீராங்கனை ரோஃப்பென்னை எதிர்கொண்ட அவர், 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அடுத்த சுற்றுப்போட்டிகள் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற உள்ளன. <<-se>>#Olympics2024<<>>
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்டவை தரம் குறைந்ததாகவோ அல்லது எடை குறைவாகவோ இருந்தால், அதுகுறித்து பொது விநியோகத்துறைக்கு புகார் தெரிவித்து தீர்வு காண முடியும். இதற்கான பொது விநியோகத்துறையின் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரியை இங்கு காணலாம்.
* தொலைபேசி எண்கள் – 1967 ( அல்லது ) 1800-425-5901
* மின்னஞ்சல் முகவரி – support@tnpds.com
அதிரடி காட்சிக்கு பெயர் போன ஹாலிவுட்டில் எந்த அதிரடியும், சத்தமும் இல்லாமல் 3 பாகங்களாக ஒரு படம் எடுக்கப்பட்டு, பெரும் வெற்றி பெற்றது. 2018இல் வெளியான A QUIET PLACE வெற்றி பெற்றதையடுத்து, 2ஆவது பாகம் 2020லிலும், 3ஆவது பாகம் இந்தாண்டு ஜூலையிலும் வெளியானது. இதில், புது சப்ஜெக்டாக சத்தம் கேட்டு வந்து கொல்லும் வேற்றுகிரக ஜந்து அறிமுகப்படுத்தப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர், ஐஏஎஸ் தேர்வில் பெற்ற தேர்ச்சியை ரத்து செய்து UPSC உத்தரவிட்டுள்ளது. போலி சான்றிதழ் மூலம், இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்திய புகாரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் குடிமைப் பணிகள் தேர்வு எழுதுவதற்கும், பூஜா கேட்கருக்கு நிரந்தர தடை விதித்துள்ளதாகவும் UPSC அறிவித்துள்ளது.
தபால் துறையில் காலியாகவுள்ள 44,228 தபால் அதிகாரி, உதவி தபால் அதிகாரி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், தமிழகத்தில் மட்டும் 3,789 பணியிடங்கள். விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், கம்ப்யூட்டர் கையாளும் திறனும், சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள்<
மாணவர்களின் புகைப்படத்தை (EMIS) பதிவேற்றும் பணியை ஆசிரியர்கள் செய்யத் தேவையில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாணவர்களின் அனைத்து தகவல்களையும் EMIS தளத்தில் பதிவிட வேண்டும் என்பதால், ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்து, பாடம் கற்றுத்தர முடியவில்லை என புகார் எழுந்த நிலையில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தினால் மட்டும் போதும், வேறு பணி செய்யத் தேவையில்லை என கூறியுள்ளார்.
தனது கைதுக்கு அமைச்சர் உதயநிதிதான் காரணம் என யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம் சுமத்தியுள்ளார். சவுக்கு சங்கர் உதகையில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டபோது, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், உதயநிதியின் தூண்டுதலின் பேரிலேயே, தன் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது என்றார்.
பாஜகவினர் மக்கள் நலனை பற்றி சிந்திக்க மாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார். ஹிட்லர் தளபதி கோயபல்ஸ் பற்றி அனைவரும் கேள்வி பட்டிருப்போம் என்ற அவர், முதல் முறையாக பாஜக தலைவர்களை அந்த வடிவில் தற்போது பார்த்துக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார். பாஜகவின் 10 ஆண்டு ஆட்சியில், தமிழகத்திற்கென்று இதுவரை எதுவும் செய்யவில்லை என்றும் சாடினார்.
Sorry, no posts matched your criteria.