India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கல்வி செயல்பாடுகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நியமிக்கப்பட்ட தனி எழுத்தரின் பணி விவரங்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், மாவட்ட ஆட்சியர்கள்-பள்ளிக் கல்வித்துறை இடையே பாலமாக செயல்படுவது, மாநில அளவிலான திட்டங்கள் பள்ளிகளுக்கு செல்வதை உறுதி செய்வது, கல்வித்துறை சார்ந்த அலுவலர்களை மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டங்களுக்கு ஒருங்கிணைப்பது போன்ற பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவில் இருக்கும் இப்புகைப்படம் இணையத்தை கலங்க வைத்துள்ளது. இடிந்து சிதிலமடைந்திருக்கும் வீட்டிற்குள் மகிழ்ச்சியான குடும்ப புகைப்படம் சேதமடையாமல் நிற்கிறது. ஆனால், இந்தக் குடும்பத்தினர் தற்போது எங்கிருக்கின்றனர் என்பது தெரியவில்லை. வாழ்க்கை என்பது நொடிப்பொழுதில் மாறக்கூடியது என்பதை இந்தப் படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் கிஷோர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ள அவர், சிறுவனின் பெற்றோருக்கு ₹3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்த கிஷோர், பள்ளி மைதானத்தில் விளையாடியபோது, தலையில் ஈட்டி பாய்ந்து பலியானார்.
ஒடிஷாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான எம்பி மம்தா மொஹந்தா தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும், பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. இனி என்னுடைய சேவை உங்களுக்கு தேவைப்படாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கிய 1,386 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுவரை மீட்கப்பட்ட 144 சடலங்களில் 76 ஆண்களும், 64 பெண்களும் உள்ளதாக கூறியுள்ள அவர், மேலும் 191 பேரை காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மழையால் சிறிது தாமதமாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், மாளவிகா மோகனன் இன்று தனது x பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடும் போது, பல சுவாரஷ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். இப்படத்திற்காக மேக்கப் கட்சிகளுக்கு மட்டும் 4 மணி நேரம் செலவிட்டதாக கூறிய அவர், முதன் முறையாக சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக புஞ்சரிமட்டம் என்ற கிராமமே மொத்தமாக அழிந்துள்ளது. முண்டக்கை அருகே உள்ள அக்கிராமத்தில் 26 குடும்பங்கள் வசித்து வந்தன. நிலச்சரிவின் போது அனைத்து வீடுகளும் சேதமடைந்ததால், அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரைக் கூட இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பெரிய பெரிய வீடுகள் கூட சுக்கு நூறாக நொறுங்கிக் கிடப்பதால் மீட்புப்படையினர் திணறி வருகின்றனர்.
விதை பூண்டு விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் நடவு செய்யப்பட்ட பூண்டுகள் தற்போது அறுவடை செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகரித்ததால் கடந்த ஆண்டு ₹600 வரை விற்பனையான விதை பூண்டு, தற்போது ₹300 முதல் ₹350 வரை விற்கப்படுகிறது. இதேபோல, ஆடி மாதம் என்பதால் முட்டை விலையும் வெகுவாக குறைந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன் ₹7 வரை விற்பனையான முட்டை தற்போது ₹5.20க்கு விற்கப்படுகிறது.
இரண்டு ஆண்டு முதுகலை சட்டம் (LLB), மூன்று ஆண்டு LLB மற்றும் LLB ஹான்ஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இன்று மாலையுடன் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், இரண்டு ஆண்டு LLB படிப்பிற்கு ஆக.5 வரையும், 3 ஆண்டு முதுகலை படிப்பிற்கு ஆக.10 ஆம் தேதி வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணை குறித்து தமிழ்நாட்டுடன் பேச தயாராக இல்லை என, கர்நாடகா கூறுவதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக காங்கிரஸ், திமுகவை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அவமதித்துள்ளதாக கூறிய அவர், INDIA கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகளின் நலனை திமுக தாரை வார்த்து விட்டதாகவும் சாடினார். காங்.தலைமையிடம் திமுக பேசி, மேகதாது அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
Sorry, no posts matched your criteria.