India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் தமிழ்நாட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறது. இரவு 8 மணி நிலவரப்படி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் விநாடிக்கு 1.48 லட்சம் கன அடி திறந்து விடப்படுவதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம், கரூர், ஈரோடு, திருச்சி, நாகை, தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் காவிரி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அபாயகரமான பகுதிகளில் வசிப்பவர்கள் அரசு முகாம்கள் அல்லது மாற்று இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
TNPLல் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி 20 ஓவரில் 158/6 ரன்கள் எடுத்துள்ளது. CSG கேப்டன் பாபா அபராஜித் மட்டும் 72 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். இதையடுத்து DD அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?.
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை கிராமத்தில் 500 வீடுகள் இருந்த நிலையில், தற்போது 34 -49 வீடுகள் மட்டுமே உள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை அங்கு மண்ணில் புதைந்த 163 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 200க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும், அங்கு சுற்றுலா வந்தவர்களின் விவரங்களும் தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில், அதிமுக சார்பில் ₹1 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில், நேற்று முன்தினம் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், 200க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். இந்த துயர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள சூழலில், அதிமுக நிதியுதவி அறிவித்துள்ளது.
மக்களவையில் ரயில்வே துறைக்கான வரவு செலவு அறிக்கையின் மீது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசினார். அப்போது, “ஒரு காலத்தில் ரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் இருந்தது. நாடும், நாடாளுமன்றமும் அதைப்பற்றி விவாதித்தன. அரசாங்கங்கள் பட்ஜெட்டில் சில துறைகளுக்கான நிதியை ஒழித்துக்கட்டும். ஆனால், ஒரு பட்ஜெட்டையே ஒழித்துக்கட்டிய பெருமை பாஜகவையே சாரும்.” என்று சாடினார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. சூர்யகுமார் தலைமையிலான டி20 அணி 3 – 0 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டிகள் தொடங்கவுள்ளன. இதற்காக, டி20 போட்டிகளில் விளையாடாத ரோஹித், கோலி, ராகுல் ஆகியோர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில், ₹5 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு ₹5 கோடி அறிவித்தது. அதைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ₹5 கோடிக்கான காசோலையை அவரிடம் வழங்கினார்.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியல். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும். இதனால், சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று இரவு நடைபெற்ற ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அணி பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்தது. இதையடுத்து இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதுவரை ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் 12 முறை பதக்கம் வென்றுள்ள இந்திய அணி 13ஆவது முறையாக பதக்கத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி பதக்கத்தை வெல்லுமா?
Sorry, no posts matched your criteria.