India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேப்பாக் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சேப்பாக் அணி நிர்ணயித்த 159 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய திண்டுக்கல் அணி 19.5 ஓவரில் 161/6 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய சிவம் சிங் 64, அஸ்வின் 57 ரன்கள் எடுத்தனர். இந்த தோல்வி மூலம் நடப்பு TNPL தொடரில் இருந்து சேப்பாக் அணி வெளியேறியுள்ளது.
லோகோ பைலட்டுகளுக்கு பணி நேரம் முடிந்தும் 16 மணி நேர ஓய்வு, வார இறுதி ஓய்வு ஆகியவை முறையாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாள்களாகவே உள்ளது. இந்நிலையில், இது குறித்து ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஒரு குழுவை நியமிக்கவும், அவர்கள் லோகோ பைலட்டுகளின் பணி நேரம், ஓய்வு, விடுமுறை குறித்து ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி, தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள்பட 250க்கும் அதிகமானோர் பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நேற்று அதிகாலை நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில், 3 கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இதனால் பலர் தங்களது வீடு, உடைமைகளை இழந்து பரிதவித்து வருகின்றன. நிலச்சரிவு நிகழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் 872 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். கேன் வில்லியம்சன் (NZ), பாபர் அசாம் (PAK), மிட்செல் (NZ), ஸ்மித் (AUS) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மா 6, ஹாரி புரூக் (ENG) 7, ஜெய்ஸ்வால் 8, கருணாரத்னே (SL) 9, கோலி 10 ஆகிய இடங்களில் உள்ளனர்.
தமிழகத்தில் இரவு 1 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஷூ, செருப்பு போன்ற காலணிகளின் விலை நாளை முதல் உயரவுள்ளது. சந்தைகளில் விற்பனையாகும் காலணிகளுக்கு, இந்திய தரநிலை பணியகம் (BIS) சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை அறிவித்தது. அதன்படி, நாளைமுதல் IS 6721 & IS 10702 வழிகாட்டுதல்கள் அமலுக்கு வருவதால், விலை உயரவுள்ளது. தயாரிப்புப் பணிகளுக்கு அதிக செலவு ஏற்படும் என்பதால், விலை உயர்த்தப்படுவதாக காலணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தோல்வியை தழுவியுள்ளார். ரவுண்ட் ஆஃப் 16இல் ஜப்பான் வீராங்கனை ஹிரானோவை மணிகா எதிர்கொண்டார். பரபரப்பான இந்தப் போட்டியில் 4-1 என்ற புள்ளி கணக்கில் மணிகாவை வீழ்த்தி ஹிரானோ வெற்றி பெற்றார். ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வரலாற்றில், ரவுண்ட் ஆஃப் 16க்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா.
+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) அசல் மதிப்பெண் சான்றிதழ்கள்/மதிப்பெண் பட்டியல் நாளை (ஆக.1) முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு <
வயநாட்டில் நடந்தது இயற்கை பேரழிவு அல்ல, மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், வயநாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய 4,000 குடும்பங்களை அகற்றுமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேரள அரசிடம் கூறியது. ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கவில்லை என்ற அவர், அங்கு வணிகமயமாக்கல் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது என்றார்.
வயநாடு நிலச்சரிவால் பாதித்த மக்களுக்கு உதவும் வகையில், தொழிலதிபர் அதானி ₹5 கோடி வழங்கியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவு, மிகப்பெரிய பேரழிவாக கருதப்படுகிறது. இதனால், வீடு, உடைமை, உறவினர்களை இழந்து பலர் தவிக்கின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அதானி குழுமம் சார்பில் ₹5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.