India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கமலா ஹாரிஸ் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா என டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். எப்போதும் இந்திய பாரம்பரியத்தையே தூக்கிபிடிப்பவர், தற்போது திடீரென கருப்பினத்தவராக தன்னை அடையாளப்படுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார். ஏதாவது ஒன்றை ஏற்றுக் கொண்டால் மதிப்பதாக கூறிய டிரம்புக்கு, ஒருவர் தன்னை எப்படி அடையாளப்படுத்த வேண்டும் என இன்னொருவர் கூறுவதற்கு உரிமை இல்லை என வெள்ளை மாளிகை பதிலடி கொடுத்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய லவ்லினா போர்கோஹைன், இன்னும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும் என அவரது தந்தை டிகென் போர்கோஹைன் அறிவுறுத்தியுள்ளார். அடுத்த சுற்று கடினமாக இருக்கும் எனவும், அதில் முழுத் திறனையும் லவ்லினா வெளிக்காட்டுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆக.4ல் நடைபெறும் காலிறுதி போட்டியில் சீன வீராங்கனை லி குயனை லவ்லினா எதிர்கொள்ள உள்ளார்.
சத்தீஸ்கரில் தண்ணீர் என்று நினைத்து மதுவை குடித்த சரிதா (3) என்ற பெண் குழந்தை பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, தாகம் எடுக்கவே பாட்டியின் அறையில் இருந்த மதுவை குடித்தது. சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்து தரையில் சரியவே, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
*1834 – பிரிட்டன் பேரரசில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. * ஆங்கிலேயே ஆட்சியில், இலங்கையில் கண்டி- கொழும்பு இடையே ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. *1936 – 11-வது ஒலிம்பிக் போட்டிகளை ஹிட்லர் தொடங்கி வைத்தார். *1952 – ரயில் நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் துவக்கி வைத்தார். *2006 – திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
‘கவுண்டம் பாளையம்’ படத்தை திரையிடும் திரையரங்களுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால், போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 5ஆம் தேதியே இப்படம் வெளியாக இருந்ததாகவும், ஆனால் படம் திரையிடப்பட்டால், திரையரங்குகள் முன் போராட்டம் நடத்துவோம் என குறிப்பிட்ட பிரிவினர் மிரட்டுவதாக படத்தின் தயாரிப்பாளர் பழனிசாமி நீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று நடந்த பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் வியட்நாம் வீரம் டுக் பாட் லியை வீழ்த்திய இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். லியை 16-21, 21-11, 21-12 என்ற செட் கணக்கில் பிரனாய் வீழ்த்தியுள்ளார். அனைத்து இந்திய காலிறுதிக்கு முந்தைய போட்டியில் பிரனாயும், லக்சயா சென்னும் மோத உள்ளனர். இதில் தோற்பவர் வெளியேற்றப்படுவார்.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் ஸ்நேஹில் குமார் சிங், நிலச்சரிவில் சிக்கியதால் கயிறு கட்டி மீட்கப்பட்டார். விளாங்காடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமை பார்வையிடச் சென்றபோது, திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சிக்கிக் கொண்டனர். பின்னர் மீட்பு படையினரின் உதவியுடன் அவர்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர். கடந்த 2 நாள்களில் நடந்த 11ஆவது நிலச்சரிவு இதுவாகும்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 9 ▶குறள்: கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. ▶பொருள்: உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் ₹32,403 கோடி வரி ஏய்ப்பு ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 2017 ஜூலை முதல் 2022 மார்ச் வரையில், அந்நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைகளில் இருந்து பெற்ற ஐடி சேவைகளுக்காக வரி செலுத்தவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்திய நிறுவனத்திற்கு வெளிநாட்டு கிளைகள் வழங்கும் சேவைகள் ஜிஎஸ்டிக்குள் வராது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உருக்குவதாக, நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கு தலை வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவில் இதுவரை 250க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.