India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள் குறித்து நியூமராலஜியில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இங்கு நாம் பார்க்கலாம். 1ஆம் தேதி பிறந்தவர்கள் இயல்பாகவே மரியாதைக்குரிய ஆளுமைகளாக இருப்பார்கள் என்றும், புத்திசாலிகள், கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. புத்திசாலித்தனம், பேச்சுத் திறனால், அரசியலில் வெற்றி பெறுவர் என்றும் சாெல்லப்படுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இன்று நடைபெறும் கோல்ப், துப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை, ஹாக்கி, வில்வித்தை, பாய்மரப்படகு & தடகளம் 20 கிலோ மீ., நடைபந்தயம் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். வில்வித்தையில் பிரவீன் ஜாதவும், பாய்மரப்படகு நேத்ரா குமணனும் களமிறங்க உள்ளனர். துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் ஸ்வப்னில் குசாலே சிறப்பாக செயல்பட்டால் தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. <<-se>>#Olympics<<>>
வைகோவிடம் அறிவுரை கேட்பதில்லை என்று அவரின் மகனும் எம்பியுமான துரை வைகோ தெரிவித்துள்ளார். தாம் நேரடி அரசியலுக்கு வந்து 4 ஆண்டுகளாகி விட்டதாகவும், தாமே சொந்தமாக முடிவெடுத்து அரசியலில் செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். வைகோவின் மகன் என்பதால் அவர் சொல்வதை எழுதி வைத்து தாம் வாசிப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை என்றும், அது சுத்தப் பொய் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வலுவான தரைக்காற்று 30 – 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் கூறியுள்ளது.
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹7.50 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ₹1,817 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ₹1,809க்கு விற்பனையானது. கடந்த நான்கு மாதங்களாக ₹151 வரை குறைந்த நிலையில், இம்மாதம் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 கிலோ சிலிண்டரின் விலை மாற்றமின்றி ₹818.50ஆக உள்ளது.
ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்தில் இருந்த இந்தியா, காந்தியடிகள் தலைமையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி 1947இல் சுதந்திரம் பெற்றது. அந்தப் போராட்டங்களில் மிக முக்கியமானது, ஒத்துழையாமை இயக்கம் ஆகும். அந்தப் போராட்டத்தை 1920 ஆகஸ்ட் 1ஆம் தேதி காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி தொடங்கியது. இந்தப் போராட்டம்தான் ஆங்கிலேயர்களின் திமிரை அடக்கி சமரசப் பேச்சுக்கு வரவழைத்தது.
தானாக முன்னேற வேண்டும் என்பதால், தனது அக்கா தேவயானி தன்னை எங்கும் சிபாரிசு செய்ததில்லை என நடிகர் நகுல் தெரிவித்துள்ளார். ‘பாய்ஸ்’ படத்திற்கு பிறகு நல்ல கதைகள் அமையாததால் சினிமாவில் இருந்து விலக நினைத்ததாகவும், ராணுவத்தில் சேர பயிற்சி எடுத்து கொண்டிருந்த போது ‘காதலில் விழுந்தேன்’ வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தான் சினிமாவிற்கு வந்தது எதிர்பாராமல் நடந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்க கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார். சீன பிளாஸ்டிக் லைட்டர்களின் மூலப்பொருட்களை வடநாட்டு நிறுவனங்கள் இறக்குமதி செய்து லைட்டர்களை தயாரித்து வருவதாகவும், இதனால் தீப்பெட்டி உற்பத்தி தொழில் பாதித்துள்ளதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர்களின் நலனை பரிசீலித்து அறிவிப்பாணை வெளியிட வலியுறுத்தியுள்ளார்.
வாகனங்களுக்கான ‘பாஸ்டேக்’ தொடர்பான சில நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இவை, நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, பாஸ்டேக் பயன்படுத்துவோர், KYC எனப்படும் தங்களுடைய சுயவிவரக் குறிப்புகளை தெரிவிக்க வேண்டும். வரும் அக்.31க்குள் இந்த விபரங்களை, பாஸ்டேக் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெற வேண்டும். இல்லாதபட்சத்தில், அந்த பாஸ்டேக் செல்லாததாகிவிடும்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது வல்லக்கோட்டை முருகன் கோயில். சுமார் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்காேயிலில் முருகன், வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளிக்கிறார். இந்திரனால் அமைக்கப்பட்ட வஜ்ர தீர்த்தம் இங்கு உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. 7 வெள்ளி விரதம் இருந்து முருகனை வழிபட்டால் இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
Sorry, no posts matched your criteria.