India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
IBPS தேர்வாணையத்தில் காலியாகவுள்ள 4, 455 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Probationary Officers பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: Any Degree, கணினியை இயக்கும் அறிவு, ஆங்கில மொழியறிவு. வயது வரம்பு: 20-30. ஊதியம்: ₹25,000 – ₹30,000/-. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 21. கூடுதல் தகவல்களுக்கு<
பாரிசில் நடைபெறும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ரஷ்யா, பெலாரஸ் நாடுகளின் வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கவில்லை. 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டி முடிந்த சில நாட்களில் உக்ரைன் மீது பெலாரஸ் ஆதரவுடன் ரஷ்யா பாேர் தொடுத்தது. ஒலிம்பிக் விதிகளுக்கு இது எதிரானது என்பதால் 2 நாடுகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனாலேயே ரஷ்யா, பெலாரஸ் ஆகிய 2 நாடுகளும் கலந்து கொள்ளவில்லை.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் கட்டடத்தில் அமமுக அலுவலகம் செயல்படுகிறது. அதற்கு வாடகை பாக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கட்டடத்தை காலி செய்யும்படி அதன் உரிமையாளர் நெருக்கடி கொடுப்பதாகவும், இதனால் புதிய இடத்தை டிடிவி தினகரன் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அடையாறுக்கு அமமுக அலுவலகத்தை மாற்ற டிடிவி தினகரன் ஆலோசிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி 1.70 லட்சம் கனஅடி நீர் வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் தொடர் மழை பெய்து வருவதால் கேஎஸ்ஆர் மற்றும் கபினி அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் உபரி நீர் முழுவதும் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணை முழுவதும் நிரம்பியுள்ளதால், கூடுதல் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடிக்கு எதிராக சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ராகுல் சாதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக எம்பி அனுராக் தாக்கூரின் நீக்கப்பட்ட பேச்சு அடங்கிய வீடியோவை மோடி சமூக ஊடகத்தில் பகிர்ந்திருந்தார். அனுராக் தாக்கூர் மன்னிப்பு கேட்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், சபைக்கு வெளியே அதை பகிர்ந்ததால் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி பிரமுகர் சித்திக் வீட்டிலும், திருவாரூர் முத்துப்பேட்டையில் வழக்கறிஞர் ராஜ்முகமது வீட்டிலும் சோதனை நடக்கிறது. தஞ்சை ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றில் விளையாட இந்திய வீரர் பிரனாய் தகுதி பெற்றுள்ளார். பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரரான எச்.எஸ். பிரனாய், வியட்நாம் நாட்டை சேர்ந்த டுக் பாட் லி ஆகியோர் விளையாடினர். இந்த போட்டியில், 16-21, 21-11, 21-12 என்ற செட் கணக்கில் லியை வீழ்த்திய பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சேவல் சண்டையை மையமாகக் கொண்டு தனுஷ் நடிப்பில் 2011இல் வெளியாகி சக்கைப் போடு போட்ட படம் ஆடுகளம். அப்படத்தில் ஆங்கிலோ-இந்திய பெண்ணாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார் டாப்சி. விளம்பரங்களில் நடித்த அவருக்கு இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று தந்தது. இதையடுத்து, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், ஹிந்தியில் தற்போது கவனம் செலுத்துகிறார். இன்று அவரின் 37ஆவது பிறந்தநாள் ஆகும்.
2023-2024ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் (ஜூலை 31) முடிந்தது. எனினும், அபராதத்துடன் டிச.31 வரை தாக்கல் செய்யலாம். அதனால், ITR தாக்கல் செய்யாதவர்கள் இன்று முதல் ₹5,000 அபராதம் செலுத்தி (ஆண்டு வருமானம் ₹5 லட்சத்துக்கும் கீழ் இருப்போருக்கு ₹1,000 அபராதம்) தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன், வரித் தொகைக்கு வட்டியும் செலுத்த வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்னையே தம்மை அரசியலுக்கு அழைத்து வந்ததாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். 1980களில் கல்லூரியில் படித்தபோது, இலங்கையில் இருந்து ஈழத்தமிழர்கள் படகுகள் மூலம் தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாகவும், அவர்களின் கண்ணீர் கதைகள், வலிகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்போது மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் தாம் கலந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.