India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், ₹23,230 கோடி செலவில் 625.80 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 457 புதிய சுங்கச்சாவடிகள் கட்டப்பட்டன. தமிழ்நாட்டில் 15 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன எனப் பதிலளித்துள்ளார்.
*ஈரான்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளது. *மியான்மா்: ராணுவ ஆட்சியைத் தொடர அவசர நிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. *வெனிசூலா: அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். *சூடான்: ராணுவ தளபதி பதா புர்கான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரேஷன் கடைகளில் இனி பாக்கெட்டுகளில் பொருள்களை விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அரிசி, சர்க்கரை உள்ளிட்டவை சரியான எடையில் பாக்கெட்டுகளில் வழங்கப்பட உள்ளது. சோதனை அடிப்படையில் தொகுதிக்கு ஒரு கடையில் இத்திட்டத்தை தொடங்கவும், மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து விரிவுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எடை குறைவாக பொருள்கள் வழங்குவதாக புகார் எழுவதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற உள்ள காலிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா- வூ யிக் சோ இணையுடன் மோத உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக பேட்மிண்டன் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி காலிறுதிக்குள் நுழைந்துள்ள நிலையில், காலிறுதியில் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உலகிலேயே இந்தியாவில்தான் மிகக் குறைந்த தொலைபேசி அழைப்புக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், “முன்பு நிமிடத்திற்கு 53 பைசாவாக இருந்த கட்டணம், தற்போது 3 பைசாவாக குறைந்துள்ளது. நாட்டில் தற்போது 117 கோடி மொபைல் & 93 கோடி இணைய இணைப்புகள் உள்ளன. ஏப்ரல் 2024 கணக்கின்படி, நாட்டில் உள்ள 95.15% கிராமங்களில்இணைய வசதி உள்ளது” என்றார்.
10ஆம் வகுப்பு படித்தோர் மற்றும் அதற்கும் குறைவாக படித்தோருக்கு மலேசியாவில் கட்டுமானப்பணியாளர், ஹெல்பர், வெல்டர் வேலைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வயது வரம்பு 22 – 50 வரை ஆகும். மாத ஊதியம் ₹27,746 – ₹49,547 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://www.omcmanpower.tn.gov.in/ தளத்தில் இன்றைக்குள் (ஆக.1) விண்ணப்பிக்க தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், சாலையோரம் சைன் போர்டுகள் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். அதில், ஏர் ஹாரன் படத்துடன் போர்டு வைக்கப்பட்டிருப்பதற்கு என்ன அர்த்தம் என இங்கு நாம் பார்க்கலாம். ஆபத்தான சாலைகள், வளைவுகளில் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு நாம் அடிக்கும் ஹாரன் கேட்காது. ஆதலால் ஏர் ஹாரனை ஒலிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே, அந்தப் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான T20 தொடரில் சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷிப் வியப்பூட்டும் வகையில் இருந்ததாக வாஷிங்டன் சுந்தர் பாராட்டியுள்ளார். அணியின் மற்ற வீரர்களுக்கு பேட்டிங்கில் வாய்ப்பளிப்பதில் சூர்யகுமார் பெரிய மனதுக்காரர் என அறிவோம் என்று குறிப்பிட்ட அவர், இன்று கேப்டன்ஷிப்பிலும் அதை நிருபித்துவிட்டாரெனக் கூறியுள்ளார். அத்துடன், கடைசி ஓவரை அவரே வீசி அணியை வெற்றி பெற செய்ததாகவும் புகழ்ந்துள்ளார்.
பாரிஸில் நடக்கும் 33ஆவது ஒலிம்பிக்ஸ் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் 7ஆவது நாளாக கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இதில், ஆமைகள் வாயில் இருந்து நீரூற்றும் வடிவிலான தடாகத்தில் இலை மேல் குருவியொன்று நின்றுகொண்டு அலைச் சறுக்கலில் ஈடுபடுவது போன்ற குறியீடு இடம்பெற்றுள்ளது. Surfing போட்டி டீஹுபோ கடற்பகுதியில் இன்று நடைபெறவுள்ளது. அதனை பிரதிபலிக்கும் வகையில் இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளிடம் இபிஎஸ் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த ஜூலை 10 தேதி முதல் தொகுதி வாரியாக மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகிகளிடம் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இதுவரை 25க்கும் மேற்பட்ட தொகுதிகளை சேர்ந்தவர்களிடம் ஆலோசனை நிறைவடைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.