India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெற்கு & மத்திய ஆசியாவில் இஸ்லாமிய அரசை நிறுவுவதை லட்சியமாகக் கொண்ட ISIS தீவிரவாத அமைப்பின் கிளைதான் ‘ISIL-K’. இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்த அமைப்புக்கு தலிபான் பாகிஸ்தான், அல்-கொய்தா போன்றவை ஆதரவாகவுள்ளன. இந்த அமைப்புகள் இணைந்து ஆப்கனில் தீவிரவாதப் பயிற்சி மையங்களையும் நடத்துகின்றன. ISIL-K அமைப்பில் 6,000 தீவிரவாதிகள் வரை இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலை இரண்டாவது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் உயர்ந்து ₹91.70க்கும், கிலோ வெள்ளி ₹700 உயர்ந்து ₹91,700க்கும் விற்பனையாகிறது. மத்திய பட்ஜெட்டையொட்டி கடந்த 25ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளி ₹89,000 வரை குறைந்த நிலையில், தற்போது படிப்படியாக மீண்டும் உயர்ந்து வருகிறது. அதன்படி, 2 நாள்களில் மட்டும் ₹2,700 அதிகரித்துள்ளது.
வயதைக் காரணம் காட்டி, கனவுகளை கைவிடுபவர்களுக்கு ஜியிங் ஜெங் உத்வேகத்தை அளிக்கிறார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். 58 வயதான டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஜியிங் ஜெங், சுமார் 41 ஆண்டுகள் கழித்து, பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மூலம் மீண்டும் ஆடுகளத்திற்குள் காலடி எடுத்துவைத்துள்ளார். அவரது வருகையை Real Comeback என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
வேலை தேடும் பெண்களை குறிவைத்து சில கும்பல் மோசடியில் ஈடுபடுவதால், கவனமுடன் இருக்கும்படி போலீஸ் எச்சரித்துள்ளது. உரிமம் வைத்துள்ள வேலைவாய்ப்பு ஏஜென்சிகளை மட்டுமே வேலைக்கு அணுக வேண்டும். ஆன்லைனில் செல் எண், முகவரி, வங்கி பரிவர்த்தனை விவரத்தை பகிர வேண்டாமென்றும் போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. வேலை குறித்த முடிவை எடுக்கும் முன்பு உறவினர்களுடன் ஆலோசிக்கவும் பரிந்துரைத்துள்ளது.
வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படும் பெண்களில் சிலர், அங்கு ஏற்கெனவே அளித்த வாக்குறுதிப்படி வேலை அளிக்கப்படாமல் கொடுமைப்படுத்தப்படும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இதனால் தமிழக பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், அவர்களுக்கு போதிய ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கவும் 181 இலவச உதவி எண் நடைமுறையில் உள்ளது. இதில் அனைத்து பிரச்னை குறித்தும் ஆலோசனை பெறலாம்.
இறக்குமதி வரிக்குறைப்பு காரணமாக, கடந்த சில நாள்களாக இறங்குமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, 2 நாள்களாக விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 உயர்ந்து, ஒரு சவரன் ₹51,440க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து ஒரு கிராம் ₹6,430க்கும் விற்பனையாகிறது. இதனால், விலை குறையும் என 2 நாள்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 3ஆவது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அரசின் நடவடிக்கைகள் தொடர்பாகவும், மத்திய அரசிடம் கூடுதல் நிதி கோரும் பொருட்டும் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக ஜோதிட விதிப்படி மேஷம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ராசிக்காரர்கள் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் யோகம் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் பெரும்பான்மையாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதைப் பார்க்கலாம். அப்படியானால் மற்ற ராசிக்காரர்கள் செல்ல முடியாதா? என்ற கேள்வி எழும். மற்ற ராசிக்காரர்களின் கிரக நிலைகளின் அடிப்படையில் அதை கணித்து அறிந்துகொள்ளலாம்.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இந்த தொகை ராகுல் காந்தி மூலம் கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு காசோலையாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 80 பேர் கொண்ட மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தனுஷுக்கு எதிரான தயாரிப்பாளர் சங்க தீர்மானத்துக்கு, நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தயாரிப்பாளர் சங்க அவசரக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தனுஷ் புதிய படங்களை நடிக்கும் முன் தயாரிப்பாளர் சங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் எனவும், நவ.1 முதல் தமிழ் சினிமாவின் படப்பிடிப்பு பணிகளையும் நிறுத்தப்போவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருப்பதற்கும் நடிகர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.