news

News August 1, 2024

All Time Record: புதிய உச்சத்தை தொட்டது பங்குச்சந்தை

image

பல வருடங்களாக காத்திருந்த தருணம் வந்துவிட்டது. இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் இன்று புதிய சாதனைகளை புரிந்தன. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 127.15 புள்ளிகள் உயர்ந்து முதன்முறையாக 25,078.30 புள்ளிகளைக் கடந்தது. அதேபோல, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 388 புள்ளிகள் உயர்ந்து, முதன்முறையாக 82,000 புள்ளிகளைத்தாண்டியது. அதிகபட்சமாக இன்ட்ராடே 82,129.49 புள்ளிகளைத் தொட்டது. இது ஆல் டைம் ரெக்கார்டு.

News August 1, 2024

வங்கி செயலிகள் பயன்படுத்துவோருக்கு..

image

வங்கிகள் என்னென்ன பெயரில் செயலிகள் வைத்துள்ளன? என்பதை இங்கு காண்போம். *SBI வங்கி – YONO Lite * Indian bank வங்கி- IndOASIS *Axis வங்கி – Axis Mobile * ICICI வங்கி – iMobile Pay *Canara வங்கி – Canara ai1* Bank of India – BOI Mobile * Punjab National வங்கி – PNB ONE * Bank of Baroda – M-Connect Plus app *Kotak வங்கி – Kotak-811 * HDFC வங்கி – PayZapp

News August 1, 2024

SC/ST பிரிவில் உள்ஒதுக்கீடு: வழக்கு பின்னணி

image

பஞ்சாப் மாநில 2006 எஸ்சி மற்றும் பிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு சட்டத்தின் 4(5) பிரிவின் கீழ் வால்மிகி, மஜாபி சீக்கியர்களுக்கு 5% உள்ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதனால் அந்த 2 பிரிவினருக்கு முதலில் முன்னுரிமை கிடைக்க வழி ஏற்பட்டது. இதை எதிர்த்த வழக்கை விசாரித்த பஞ்சாப் உயர்நீதிமன்றம், 4(5) பிரிவை ரத்து செய்தது. இதையடுத்து தாக்கலான மேல்முறையீடு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

News August 1, 2024

வயநாட்டில் ஏர்டெல் சேவை 3 நாட்கள் இலவசம்

image

நிலச்சரிவால் பேரழிவை சந்தித்துள்ள வயநாட்டு மக்களுக்கு உதவும் வகையில், 3 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்படுமென ஏர்டெல் அறிவித்துள்ளது. வேலிடிட்டி முடிந்த வாடிக்கையாளர்களுக்கு 3 நாள் கூடுதல் வேலிடிட்டி, 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுமென ஏர்டெல் தெரிவித்துள்ளது. போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தையும் 30 நாட்கள் நீட்டித்துள்ளது.

News August 1, 2024

அருந்ததியர் உள் ஒதுக்கீடு எப்படி வந்தது?

image

SC/ST-க்கான 18% ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கலாம் என ஜனார்த்தனம் குழு பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில், 2009ஆம் ஆண்டு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் உள் ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்து, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதை கிருஷ்ணசாமி போன்றோர் கடுமையாக எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், இன்று உள் ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வந்துள்ளது.

News August 1, 2024

ஜாமின் கிடைத்ததும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி?

image

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு இந்த மாதம் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாகவும், அதற்கு முன்னதாக அமைச்சரவையை மாற்ற திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதானதால் அமைச்சர் பதவியை இழந்த செந்தில் பாலாஜிக்கு விரைவில் ஜாமின் கிடைக்கக்கூடும் என திமுக எதிர்பார்க்கிறது. அப்படி கிடைத்து வெளியே வந்ததும் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

News August 1, 2024

உள்ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பு விவரம்

image

SC-ST பிரிவில் உள்ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வில், 6 பேர் ஒரே மாதிரியாகவும், ஒரு நீதிபதி பெலா திரிவேதி அதற்கு எதிராகவும் தீர்ப்பு எழுதினர். முடிவில் பெரும்பான்மை அடிப்படையில் 6:1 என்ற கணக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டது. பஞ்சாப்பில் 2006இல் உள்ஒதுக்கீடு அளிக்க கொண்டு வரப்பட்ட சட்டம் செல்லும் என அறிவித்தனர்.

News August 1, 2024

ஒரே நாளில் 50 லட்சம் பேர் ITR தாக்கல்

image

ITR தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று மட்டும், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்ததாக நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 7 கோடிக்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்த எந்த அறிவிப்பையும் நிதியமைச்சகம் வெளியிடவில்லை. இதனால், இன்று முதல் ITR தாக்கல் செய்வோர் ₹5,000 அபராதம் செலுத்த வேண்டும்.

News August 1, 2024

இலங்கை கடற்படை படகு மோதி தமிழக மீனவர் உயிரிழப்பு!

image

இலங்கை கடற்படை ரோந்து படகு மோதி தமிழக மீனவர் கடல்நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை அரசின் படகு மோதி, ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் சேதமடைந்து, நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. அதில், பயணித்த மீனவர் மலைச்சாமி என்பவர் உயிரிழந்த நிலையில், ராமச்சந்திரன் என்ற மற்றொருவர் நிலை என்னவானது என்றே தெரியவில்லை.

News August 1, 2024

நாய்கள் கடித்து 286 பேர் பலி: மத்திய அரசு

image

இந்தியாவில் 2023இல் நாய்கள் கடித்து 286 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாய்க்கடி தொடர்பாக 30,43,339 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் மத்திய கால்நடைத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் கூறியுள்ளார். விலங்குகளால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு போதிய நிதியுதவி வழங்குவதாக கூறிய அவர், இந்த நிதியை ரேபிஸ் தடுப்பூசிக்கும் மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

error: Content is protected !!