India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரான் அதிபர் மசூத் பெஜஷ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தலைநகர் டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். ஹனியே சிந்திய ரத்தத்திற்கு பழிக்கு பழி வாங்குவது தங்கள் கடமை என்றும், கடும் தண்டனை பெற இஸ்ரேல் களம் அமைத்து விட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
தமிழகத்தில் கள்ளு கடையை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார். கள் குடிப்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்த அவர், கள் இறக்க அனுமதிப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான பனை விவசாயிகள் பலனடைவார்கள் என்றார். தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க அண்ணாமலையும் வலியுறுத்தியிருந்தார்.
மேட்டூர் அணைக்கு பொதுமக்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என சேலம் ஆட்சியர் பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார். அணையில் இருந்து வினாடிக்கு 1.7 லட்சம் கனஅடி நீர் வெளியேறுவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அணைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய அவர், ஆடிப்பெருக்கு அன்று அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இந்த மாதம் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறையாகும். அதாவது, 4 ஞாயிறு மற்றும் 2&4ஆவது சனிக்கிழமை வழக்கம் போல விடுமுறையாகும். இதுதவிர்த்து, ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், 26 கிருஷ்ண ஜெயந்தி பொது விடுமுறையாகும். இதுபோல், ஆகஸ்ட் 3 (அகர்தலா), 8 (கேங்டாக்), 13 (இம்பால்), 19 (திரிபுரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள்) 20 (கொச்சி) ஆகிய தேதிகளில் சில பகுதிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து விநாடிக்கு 2 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. 10 மணி நிலவரப்படி 1.80 லட்சம் கன அடியாக இருந்த நிலையில், தற்போது 2 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் மாலைக்குள் 2 லட்சம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரம் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இந்தோ திபெத்திய படைப்பிரிவில் கான்ஸ்டபிள் (பிளம்பர், மேசன் & எலக்ட்ரீஷியன்) நிலையிலான 202 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு ஆன்லைனில் <
தொழில் நிறுவனங்களில் ஊழியரில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது. இதற்காக மீட்டர் பொருத்தப்பட்ட நிலையில், சிம் கார்டு வாங்குவது, மென்பொருள் தயாரிக்கும் பணி நடக்கிறது. இந்த வகை மீட்டர் மின் பயன்பாட்டை தானாக கணக்கெடுத்து நுகர்வோருக்கு கட்டணத்தை அனுப்பும். தொழில் நிறுவனங்களை தொடர்ந்து இத்திட்டம் வீடுகளிலும் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
ஏழு மாத கர்ப்பத்துடன் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற வாள்வீச்சு வீராங்கனை நடா ஹஃபீஸுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், கர்ப்பிணிகள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது புதிதல்ல. 2017இல் கருவுற்றிருந்த செரீனா வில்லியம்ஸ் ATP ஓபனை வென்றார். 2014இல் அலிசியா மொன்டானோ 800 மீ., ஓட்டத்திலும் 2010இல் இந்தியாவின் சுமா ஷிரூர் இன்டர் ஷூட் போட்டியிலும் பங்கேற்று வென்றுள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்தின் தண்டனை காலத்தை சென்னை உயர் நீதிமன்றம் குறைத்துள்ளது. கடந்த 2021இல் விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.33 லட்சம் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தண்டனைக் காலத்தை 2 ஆண்டுகளாகவும், அபராதத்தை ரூ.27 லட்சமாகவும் குறைத்துள்ளது.
ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளும் பாடுபட்ட காரணத்தால், நாட்டிலேயே அதிக சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. குறிப்பாக, 1994இல் ஜெ., ஆட்சியில் இந்திய அரசமைப்புச் சட்டம் ஒன்பதாம் அட்டவணைப் பாதுகாப்புடன் (76வது சட்டத்திருத்தம்) மேற்கொள்ளப்பட்டதால், BC -26.5%, BC (இஸ்லாமியர்) -3.5%, MBC -20%, SC/18, SC (A) அருந்ததியர் – 3%, ST -1 என 69% இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.