India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமையல் சிலிண்டரில் கியாஸ் கசிந்து வெடித்தால் பெரிய இழப்பு ஏற்படும். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் இலவச உதவி எண்கள் நடைமுறையில் உள்ளன. 1800-2333-555 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், அது பதிவு செய்யப்பட்டு கசிவை சரி செய்ய எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கும். 24 மணி நேர உதவி எண் 1906-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
IPL உரிமையாளர்கள் கூட்டத்தில் SRH உரிமையாளர் காவ்யா மாறன் BCCIக்கு பல முக்கிய பரிந்துரைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு உரிமையாளரும் 7 வீரர்களை தக்கவைக்க அனுமதித்தல், அவர்களை தக்கவைத்து கொள்வதில் வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்கள் என எந்த வரம்பும் கூடாது, ஏலத்தின் போது வீரர்களுடன் கலந்துரையாட வாய்ப்பளித்தல், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் நடத்தவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
கமல்ஹாசனுடன் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை அபிராமி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ‘தக் லைஃப்’ படம் குறித்து பேசிய அவர், மணிரத்னம் இயக்கத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் கமல்ஹாசனுடன் நடிப்பது ஒரு கனவுபோலவே இருக்கிறது. கனவு காண்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். ஏனென்றால் அது என்றாவது ஒருநாள் நிஜமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
பூமியை அன்றாடம் 50 விண்கற்கள் தாக்குகின்றன. அவை சிறிய அளவுடையவையாக இருப்பதால் நமக்கு ஆபத்தில்லை. பெரியவையாக இருந்தால் பேரழிவு நிச்சயம் ஏற்படும். இதை மனதில் கொண்டு, விண்கற்களை திசை திருப்பும் வழியை சீன விண்வெளி நிறுவனம் தீவிரமாக அறிந்து வருகிறது. இதற்கான தொழில்நுட்பத்தை 2030-க்குள் உருவாக்க திட்டமிட்டுள்ளது. டியான்ஹி விண்வெளி ஆய்வு மையத்திற்காக கணிசமானத் தொகையை சீனா செலவிட்டது குறிப்பிடத்தக்கது.
வன்னியர்கள் மீதான வன்மத்தால் உள் இடஒதுக்கீடு வழங்க திமுக மறுப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சாதிவாரி மக்கள்தொகை பற்றி விவரங்கள் தமிழக அரசிடம் இல்லாத போது, எந்த அடிப்படையில் வன்னியர் உள் ஒதுக்கீடு நிறைவேற்றப்படும் என கேள்வி எழுப்பியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக விரும்பாவிட்டாலும், பாமக அதனை ஏற்றுக் கொள்ளாது என்று அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மக்களவையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மோதி கொண்டது திட்டமிட்ட நாடகம் என மாயாவதி விமர்சித்துள்ளார். இரண்டு கட்சிகளுமே ஒரு காலத்தில் ஓபிசிக்களின் இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக விமர்சித்த அவர், இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாக இரு கட்சிகளும் கூறுவதை நம்ப முடியாது என்று சாடினார். மக்களவையில் ராகுல் சாதி குறித்து அனுராக் தாக்கூர் பேசியது சர்ச்சையானது.
ஹமாஸ் இயக்கத் தலைவரின் கொலையால் இஸ்ரேல், ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், 2 நாடுகளின் படைபலம் குறித்து இங்கு காணலாம். ஈரான் ராணுவத்தில் 5.87 லட்சம் பேர் பணியிலும், 2 லட்சம் பேர் காத்திருப்பிலும் உள்ளனர். இஸ்ரேல் ராணுவத்தில் 1.69 லட்சம் பேர் பணியிலும், 4.65 லட்சம் பேர் காத்திருப்பிலும் உள்ளனர். ஈரானிடம் 2,842 டாங்கிகளும், இஸ்ரேலிடம் 1,650 டாங்கிகளும் உள்ளன.
ஈரானிடம் 3,555 கவச வாகனங்களும், இஸ்ரேலிடம் 6,135 கவச வாகனங்களும் உள்ளன. ஈரான் கடற்படையிடம் 272 போர் கப்பல்களும், இஸ்ரேலிடம் 74 போர் கப்பல்களும் உள்ளன. ஈரானிடம் 19 நீர்மூழ்கி கப்பல்களும், இஸ்ரேலிடம் 6 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. ஈரான் விமானப்படையிடம் 973 விமானங்களும், இஸ்ரேலிடம் 618 விமானங்களும் உள்ளன. ஈரான் விமானப்படையிடம் 519 ஹெலிகாப்டர்களும், இஸ்ரேலிடம் 128 ஹெலிகாப்டர்களும் உள்ளன.
ஈரான், இஸ்ரேலிடம் அதிநவீன ஏவுகணைகள், டிரோன்கள் உள்ளன. ஈரான் அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இஸ்ரேலிடம் அணுஆயுதம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை அந்த நாடு மறுக்கவோ, உறுதி செய்யவோ இல்லை. இந்நிலையில் 2 நாடுகளுக்கும் நேரடி போர் மூண்டு, நட்பு நாடுகள் தலையிட்டால், அது 3ஆம் உலகப் போராக மாறி பேரழிவு ஏற்படும். இதனை இந்த உலகம் நிச்சயம் தாங்காது.
சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமி பாய் நினைவாக, ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு பெயர் சூட்டியதாக அவரது பாட்டி தயா கவுர் தெரிவித்துள்ளார். மனு பாக்கரின் தாயார் ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, ஜான்சி ராணி லட்சுமி பாய் கதைகளால் அதிகம் ஈர்க்கப்பட்டதாகவும், அதனால் அவரது செல்ல பெயரான மனு என்பதை தனது பேத்திக்கு சூடியதாகவும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.