India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நடிகர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து ₹50 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். முன்னதாக, தமிழ்நாட்டில் இருந்து முதல் நபராக நடிகர் விக்ரம் நேற்று ₹20 லட்சம் நிவாரண நிதி வழங்கியிருந்தார். தொடர்ந்து, 3ஆவது நாளாக அங்கு மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை 300-ஐ நெருங்கி வருகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதியை அங்கீகரிக்கும் வகையில், அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் 3% உள்ஒதுக்கீட்டு வழங்கப்பட்டது. இதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவால் இந்தியா முழுவதும் சோகம் சூழ்ந்துள்ள நிலையில், இதேபோல் கடந்த காலங்களில் ஏராளமான நிலச்சரிவுகள் நமது நாட்டில் பெரும் உயிரிழப்பு, பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. அவற்றை காணலாம். *1948 அசாம் கவுகாத்தி நிலச்சரிவு – 500க்கும் மேற்பட்டோர் பலி, 1 கிராமம் அழிந்தது * 1968 மேற்குவங்கம் டார்ஜிலிங் நிலச்சரிவு – ஆயிரக்கணக்கானோர் பலி * 1998 உத்தராகண்ட் மல்பா நிலச்சரிவு – 380 பேர் உயிரிழப்பு
*2000ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நிலச்சரிவு – 67 பேர் உயிரிழப்பு *2001ம் ஆண்டு கேரளாவின் அம்பூரியில் நிலச்சரிவு – 40 பேர் பலியாகினர் *2013ம் ஆண்டு உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத்தில் நிலச்சரிவு – 5,700 பேர் உயிரிழப்பு, 4,200 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன * 2014ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மலினில் நிலச்சரிவு – 151 பேர் உயிரிழப்பு, 100 பேரைக் காணவில்லை.
நடிகைகளை AI தொழில் நுட்பத்தில் ஆபாசமாக சித்தரிக்கும் போலி டீப் ஃபேக் வீடியோக்கள் வலைதளத்தில் சில விஷமிகளால் வெளியிடப்பட்டு வருகின்றன. நடிகைகள் ரஷ்மிகா, கஜோல், கத்ரினா கைஃப் உள்ளிட்டோரின் ஃபேக் வீடியோக்களைத் தொடர்ந்து தற்போது ‘அன்பே ஆருயிரே’ பட நடிகை நிலாவின் AI டீப் ஃபேக் வீடியோ இணையத்தில் வெளியாகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு நடிகர், நடிகைகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சூழல் சரியில்லாததால் உதவி செய்வதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக வர வேண்டாம் என கேரளா CM பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் விவரங்களை அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இறந்தோரின் உடல்களை பெறுவதற்கு குடும்பத்தில் ஓரிருவர் மட்டும் வந்தால் போதும் என்றும் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், இது குறித்து கேள்வி எழுப்பினால் அமைச்சர்கள் பொறுப்பற்ற வகையில் பதிலளிப்பதாகவும் சாடியுள்ளார். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகியே கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையின் படகு மோதி சேதமடைய செய்து, மூழ்கடித்துள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அராஜக செயலால் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை தூதர் க்ஷேனுகா செனவிரத்னயை நேரில் அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் முதல் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின், 50 மீட்டர் (3P) துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில், வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியா இதுவரை துப்பாக்கிச் சுடுதலில் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை நகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும், மத்தியமேற்கு, வங்கக்கடல், மத்திய கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு வங்கக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.