India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய செயல் தலைவராக ஸ்மிருதி இரானியையும், தமிழக செயல் தலைவராக குஷ்புவையும் நியமிப்பது குறித்து பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் முக்கிய பதவி தர வேண்டும் என சில மாதங்களாக மேலிடத்தை வலியுறுத்திய குஷ்பு , அதற்காக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் தமிழக செயல் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இயற்கை மூலிகை அதிமதுரம் குறித்து சித்த மருத்துவம் கூறுவதைக் காணலாம். அதிமதுரம், தலைவலி, நெஞ்சு சளியை கட்டுப்படுத்தும். இதில் மஞ்சள் காமாலையை தடுக்கும் மருத்துவ குணம் உள்ளது. தினமும் காலை, மாலை அதிமதுரத்தை பொடியாக்கி நீரில் கலந்து குடித்தால், மஞ்சள் காமாலை எட்டி பார்க்காது என சித்த மருத்துவம் கூறுகிறது. இந்த தகவல் உங்களுக்கு பயனுடையதாக இருந்திருக்கும். இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே.
இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களிலும், நாளை தென்காசி, குமரி, நெல்லை மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்றும், தூத்துக்குடி , விருதுநகர், மதுரை, கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சிகளில் திமுகவும் ஒன்று. அதேபோல், திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினும் மோடி அரசையும், அதன் கொள்கைகளையும் எதிர்ப்பவர் ஆவார். பதிலுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக மேலிடத் தலைவர்கள், அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பாஜகவினர் திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், தேசிய அளவில் 2 கட்சிகளும் எதிரும் புதிருமாக பார்க்கப்பட்டன.
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநரின் விருந்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுக அமைச்சர் எ.வ. வேலுவுடன் அண்ணாமலை நீண்ட நேரம் பேசினார். இந்நிலையில், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்காக அறிவித்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இதை வைத்து பார்க்கும்போது திமுக-பாஜக சமரசமாகி விட்டனவா? என அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்த உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ள தமிழ்நாடு அரசு, மகளிர் உரிமை தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறவில்லை என விளக்கமளித்துள்ளது. மேலும், வாட்ஸ்ஆப் உள்ளிட்டவற்றில் வெளியாகும் இதுபோன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கார் விலை DISCOUNT சலுகைகள் டிச. வரை நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விற்பனை குறைந்து வந்த நிலையில், அதை ஈடு கட்ட 2 மாதங்களாக விலை தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை மாருதி சுசூகி, ஹியூன்டாய், டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் அளிக்கின்றன. கடந்தாண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஆகஸ்டில் இது 2 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சலுகை விழாக்காலம் முழுவதும் அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
INDO-TIBET படையில் காவலர் நிலை (டெய்லர், காப்லர்) பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 51 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாளாகும். இந்த வேலைக்கு <
அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்காக 20ஆம் தேதி முதல் பாஜக நடத்துவதாக அறிவித்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அத்திட்டத்தை CM ஸ்டாலின் நாளை தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதை, பாஜக வரவேற்கிறது என்று அவர் கூறியுள்ளார். குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை தொடக்க விழாவில் அறிவிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் 3 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் அண்மையில் அரபு நாடுகளில் இருந்து வந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பரவி வந்த இந்த தொற்று, முதன் முதலாக ஐரோப்பா நாடான ஸ்வீடனில் நேற்று பரவியது. அங்கு ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்தது.
Sorry, no posts matched your criteria.