news

News August 1, 2024

துஷாரா விஜயன் நெகிழ்ச்சி பதிவு

image

‘ராயன்’ படத்தில் ‘துர்கா’ கதாபாத்திரத்திற்கு கிடைத்த அங்கீகாரமும், அன்பும், வெற்றியும் மக்களால் சாத்தியமானது என்றால் அது மிகையில்லை என துஷாரா விஜயன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ஆதரவளித்த அனைவரையும் மகிழ்விக்க தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் எனவும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் கருத்தில் கொண்டு தன் பயணத்தை செழுமைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News August 1, 2024

3 மடங்கு அதிக விலையில் விற்கும் Zomato!

image

அதிக உணவு விலை காரணமாக உணவு டெலிவரி நிறுவனமான Zomato கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. உணவக விலையைவிட ஆன்லைனில் காட்டப்படும் விலையானது 3 மடங்கு உயர்வாக இருப்பதை ஆதாரத்துடன் நெட்டிசன் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். அதில் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் ₹40-க்கு விற்கப்படும் உப்புமா, Zomatoவில் ₹120-க்கு விற்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான உங்கள் கருத்தை இங்கே தெரிவிக்கவும்.

News August 1, 2024

ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வி

image

பாரிஸ் ஒம்பிக்ஸின் ஆடவர் ஹாக்கி போட்டியில், பெல்ஜியம் அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது. லீக் போட்டியில் நடப்பு ஒலிம்பிக்ஸ் சாம்பியனான பெல்ஜியம் அணியுடன் மோதிய இந்திய அணி, 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, இடைவேளைக்கு பிறகு வெற்றிக்கான வாய்ப்பை தவறவிட்டது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் அடுத்த போட்டி நாளை மாலை 4.45 மணிக்கு நடைபெறவுள்ளது.

News August 1, 2024

Olympics 2024: வில் வித்தைவில் இந்தியா தோல்வி

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் பிரவின் ஜாதவ் தோல்வி அடைந்துள்ளார். இன்று நடைபெற்ற 64ஆவது சுற்று ஆட்டத்தில், சீனாவின் வென்சாவ் காவோவிடம் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியில் இருந்து வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News August 1, 2024

டெல்லி புறப்பட்டார் ஆர்.என்.ரவி

image

குடியரசுத் தலைவர் தலைமையில் டெல்லியில் நடைபெறும் 2 நாள் மாநில ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்த மாநாடு குடியரசுத் தலைவர் மாளிகையில், ஆகஸ்ட் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநில ஆளுநர்களும் பங்கேற்க உள்ள நிலையில், குடியரசு துணைத்தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

News August 1, 2024

குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது!

image

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கவுள்ளார். கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மறைந்த சங்கரய்யா, தோழர் நல்லக்கண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோரை தொடர்ந்து குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படவுள்ளது.

News August 1, 2024

நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலையில் ராகுல் ஆய்வு

image

நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் சூரல்மலையில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அங்கு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 1, 2024

இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் அதிர்ச்சி தோல்வி

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸின் குத்துச்சண்டைப் போட்டியில், பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில், இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் அதிர்ச்சி தோல்வியடைந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீனாவை சேர்ந்த முதல்நிலை வீராங்கனையான வி யூ, அவரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். ஹைதராபாத்தை சேர்ந்த நிகத் ஜரீன் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News August 1, 2024

யார் தலைசிறந்த கேப்டன்? ரவி சாஸ்திரி பதில்

image

தந்திரமான வியூகங்களை வகுப்பதில் ரோஹித் ஷர்மா கொஞ்சமும் குறைந்தவர் அல்ல என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். டி20 உலகக் கோப்பையை வென்றதன் மூலம், தோனியைப் போல தானும் ஒரு சிறந்த கேப்டன் என்பதை ரோஹித் நிரூபித்துள்ளதாக கூறிய அவர், குறிப்பாக ஹர்திக் பாண்டியா போன்றவர்களை ரோஹித் சரியான நேரத்தில் பயன்படுத்தியது சிறப்பாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

News August 1, 2024

இதனால்தான் மத்திய அரசு அலட்சியம் காட்டுகிறதா?

image

பாஜக கூட்டணிக்கு ஒரு இடத்தைக் கூட தமிழ்நாடு வழங்காததால் தான் மத்திய அரசு அலட்சியப் போக்கை காட்டுகிறதா? என்று துரை வைகோ எம்.பி., கேள்வி எழுப்பியுள்ளார். ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற அவர், உ.பி.,க்கு ₹19,848 கோடி ஒதுக்கிய மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு ₹6,362 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது தமிழகம் மீதான பாஜகவின் மாற்றாந்தாய் மனப்பான்மையை தெளிவாக காட்டுகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!