India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக, துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 3 பதக்கங்கள் வென்று சாதித்துள்ளது. பெண்களுக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். தொடர்ந்து, கலப்பு இரட்டையர் பிரிவில் மனு, சரப்ஜோத் சிங் இணை 2ஆவது வெண்கலப் பதக்கம் வென்றனர். தற்போது ஆடவருக்கான 50 மீ. ரைபில் பிரிவில் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார். அடுத்த பதக்கம் யாருக்கு?
மதிய உணவுத்திட்ட நிதியை மத்திய அரசு குறைத்தது ஏன்? என்று, கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், “பள்ளிகளில் மதிய உணவுத்திட்டத்தை கொண்டுவந்த முதல் மாநிலம்தான் தமிழ்நாடு. தற்போது காலை உணவுத்திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் அமல்படுத்தியுள்ளார். இதுபோன்ற சூழலில், குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் நோக்கில், மதிய உணவுத்திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டதா” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
STCG, LTCG வரிஉயர்வு, குறியீட்டு பலன்கள் நீக்கம் போன்ற காரணங்களால், பங்குச்சந்தையை விட்டு முதலீட்டாளர்கள் விலகி நிற்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. பட்ஜெட் எதிர்வினையாக சில நாட்களாக ₹ மதிப்பு சரிந்ததுடன், முதலீடுகளும் குறைந்தன. இந்நிலையில், சூழலை தலைகீழாக மாற்றும் வகையில், பங்குச்சந்தை வர்த்தகம் அதிரடியாக உயர்ந்தது. இதற்கு பொருளாதாரம் முறைப்படுத்தப்பட்டு வருவதே காரணமென வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எம்ஜிஆர் மாளிகையில் நாடாளுமன்றத்தேர்தல் தோல்வி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வரும் சூழலில், மறுபக்கம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வும் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உசிலம்பட்டி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரனின் பெயரை உதயகுமார் சிபாரிசு செய்ததாக தெரிகிறது. ஆனால், அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த நபர் ஓபிஎஸ் பக்கம் தாவியதை தலைமையிடம் போட்டு கொடுத்துவிட்டார்களாம்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழக தினக்கூலி தொழிலாளர்களின் ஊதியத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் ₹535ஆக இருந்த நிலையில், தற்போது டிசிசி பணியாளர்களுக்கு ₹882ஆகவும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ₹872ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
வயநாடு நிலச்சரிவுகளை கடுமையான இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டுமென, திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு பல மரணங்களையும், சோகத்தையும் இந்த பேரழிவு ஏற்படுத்தியுள்ளது. எனவே, வயநாட்டு மக்களுக்கு அனைத்து விதமான ஆதரவையும் வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
துருக்கி நாட்டைச் சேர்ந்த யூசுஃப், அசால்ட்டாக பாக்கெட்டுக்குள் கைவிட்டுக் கொண்டு பதக்கம் வென்றது அனைவரையும் கவர்ந்துள்ளது. 51 வயதாகும் அவர், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறார். மற்றவர்களை போல கண்களில் லென்ஸ், காதுகளில் செவிப்பொறி என எதுவும் அணியாமல் ஜாலியாக வந்து பாக்கெட்டுக்குள் கைவிட்டுக் கொண்டு பதக்கம் வென்றிருக்கிறார். இவரை வாழ்த்தலாமே.
ஊழலின் மொத்த உருவம் பாஜக என ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் விமர்சித்துள்ளார். நாட்டில் விமான நிலையம், ரயில் நிலையம் என எங்கு பார்த்தாலும் நீர் கசிவு தொடர்கதையாகி வந்த நிலையில், தற்போது பாராளுமன்றத்திற்கே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, புதிய பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று மழை நீர் உள்ளே வடிந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
ஆதாரை அடிப்படையாகக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. இதற்கு ஆதார், வங்கிக் கணக்கை இணைத்திருப்பது அவசியம். இல்லையெனில் அரசு உதவித் தொகை வங்கிக் கணக்கிற்கு வராது. அதேபோல ஆதார், வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டுள்ளதா என நாமே சரி பார்க்கலாம். <
புதிதாக திறக்கும் பக்கத்தில் ஆதார் எண், கேப்ட்சாவை உள்ளிட்டு உறுதி செய்ய வேண்டும். இதையடுத்து, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அந்த ஓடிபியை உள்ளிட வேண்டும். அதுபோல உள்ளிட்டதும், இன்னாெரு பக்கம் திறக்கும். அதில், Bank Seeding status என்ற பகுதியை அழுத்தி உறுதி செய்ததும், ஆதார், வங்கிக்கணக்கு இணைக்கப்பட்டுள்ளதா, எத்தனை கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது என திரையில் தோன்றும்.
Sorry, no posts matched your criteria.