news

News August 1, 2024

சபரிமலை செல்லும் பக்தர்களை பாதுகாக்க உத்தரவு

image

சபரிமலை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேரள காவல்துறை மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகளுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோசமான வானிலையை கருத்தில் கொண்டு வரும் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் சபரிமலை செல்லும் பக்தர்களை பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் பல பகுதிகளில் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 1, 2024

469 பேரை காப்பாற்றிய அற்புத மனிதர்

image

சீனாவில் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற 469 பேரை ஒருவர் காப்பாற்றியுள்ளார். நான்ஜிங்கில் உள்ள யங்சே ஆற்று பாலத்தில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர் சென் சீ கண்காணிப்பு பணியில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார். தினமும் 10 முறை ரோந்து வரும் அவர், விரக்தி உள்ளிட்ட காரணங்களால் தற்கொலைக்கு முயன்ற 469 பேரை பல்வேறு சமயங்களில் காப்பாற்றி பல உதவிகளும் செய்துள்ளார்.

News August 1, 2024

சமஸ்கிருதத்தை திணிக்கும் மத்திய அரசு: கனிமொழி

image

இந்தியுடன் சேர்த்து சமஸ்கிருதத்தையும் மத்திய பாஜக அரசு திணித்து வருகிறது என்று கனிமொழி கடுமையாக சாடினார். குலக் கல்வி முறையை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் எனக் கூறிய அவர், நீட் தேர்வின் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை ஒன்றிய அரசு சிதைக்கிறது. மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு என்பது தேவையில்லை எனத் தெரிவித்தார்.

News August 1, 2024

18 வயதிலேயே முதலீட்டை தொடங்குங்கள்

image

முதலீட்டை பொறுத்தவரை எவ்வளவு செய்கிறோம் என்பதை விட, எவ்வளவு காலத்திற்கு செய்கிறோம் என்பதே முக்கியம். நாம் முதலீடு செய்யும் ரூ.10,000, ஒரு ஆண்டில் (ஆண்டுக்கு 10% வளர்ச்சி) ரூ.11,000ஆக வளரும். அதே தொகை, 10 ஆண்டுகளில் ரூ.25,000ஆக வளர்ந்துவிடும். ஆகவே, 18 வயது முதல் முதலீடு செய்யத் தொடங்குவோர், 40 அல்லது 50 வயதில் கணிசமான வளர்ச்சியை பெறுகின்றனர். நீங்களும் முயற்சித்துப்பாருங்கள்.

News August 1, 2024

நாற்காலி யாருக்கு? தமிழிசை Vs நயினார் நாகேந்திரன்

image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்படிப்பிற்காக விரைவில் அமெரிக்க செல்லவுள்ளார். இந்நிலையில், அவரது பதவியை கைப்பற்ற, பாஜக மூத்த தலைவர்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் தமிழிசை செளந்தரராஜன் இடையே போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத்தேர்தலில் நெல்லை தொகுதியை இழந்ததை போல, தலைவர் நாற்காலியை விட்டுவிட வேண்டாம் என தமிழிசையை, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

News August 1, 2024

வெளிநாட்டு வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும்?

image

ஐபிஎல்லில் இருந்து நியாயமான காரணங்கள் ஏதுமின்றி, அணியின் சமநிலை பாதிக்கப்படும் வகையில் வெளியேறும் வெளிநாட்டு வீரர்களை தடை செய்ய வேண்டுமென BCCI-யிடம் அணிகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். BCCI நிர்வாகத்துடனான நேற்றைய கூட்டத்தில், உரிமையாளர்கள் மெகா ஏலத்தை எதிர்த்ததாகவும், மினி ஏலத்திற்கு விருப்பம் தெரிவித்ததாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

News August 1, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News August 1, 2024

புகைப்பிடிப்பதை உடனே நிறுத்தலாமா?

image

புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து மீண்டுவர விரும்புவோர் புகைப்பதை உடனடியாக நிறுத்தினால் பாதிப்பு ஏற்படுமெனக் கூறுவதை மருத்துவர்கள் முழுமையாக மறுக்கின்றனர். அதாவது, 100இல் 10 பேருக்கு Nicotine Withdrawal Symptoms எனப்படும் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். அதனை மருந்துகள் மூலமாக கட்டுப்படுத்தலாம். ஆகவே, புகைபிடிப்பதை படிப்படியாக நிறுத்தவேண்டும் என்பதில்லை, உடனடியாகவே நிறுத்தலாம் என்று கூறுகின்றனர்.

News August 1, 2024

இன்று முதல் 7 நாள்களுக்கு மழை பெய்யக்கூடும்

image

மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை, மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை உள்பட மலைப்பகுதிகள் சார்ந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. மேலும், மணிக்கு 30-40 கி.மீ. வரை வலுவான தரைக்காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News August 1, 2024

இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்

image

இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு மோதி உயிரிழந்த தமிழக மீனவர் மலைச்சாமியின் (59) குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த அவர், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவருடைய விசைப்படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியது. அவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!