India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கல்வி நிறுவனங்கள் அதிகமுள்ள மாநிலம் தமிழ்நாடு என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், காமராஜர் காலம் பள்ளிக் கல்விக்கும், கருணாநிதி காலம் கல்லூரி கல்விக்கும் பொற்காலம் எனக் கூறினார். மேலும், சென்னையில் எத்தனையோ கல்லூரிகள் இருந்தாலும், கல்வி, விளையாட்டு என அனைத்திலும் லயோலா கல்லூரி தனித்து நிற்பதாகவும் அவர் பாராட்டினார்.
வயநாட்டில் யாரென்றே தெரியாத குழந்தையை காப்பற்றிவிட்டு, சொந்த மகளை தாய் பறிகொடுத்த செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. சூரல்மலையில் வெள்ளப்பெருக்கில் சிக்கி, தனது 10 வயது மகள் அஹன்யாவுடன் மரக்கிளையை பிடித்து கொண்டு உயிருக்குப் போராடிய பிரஜிதா, வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வேறு குழந்தையை காப்பாற்ற முயன்றார். அப்போது பிரஜிதாவின் பிடியில் இருந்த அவரது மகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் ₹25 லட்சம் வழங்கியுள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் 2 நாள்களுக்கு முன் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நிலைமை அங்கு மிக மோசமாக உள்ளதால் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகிறது. பல்வேறு தரப்பினரும், கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி வருகின்றனர்.
இதுவரை 97.92 சதவீத ₹2,000 நோட்டுகளை திரும்ப பெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ₹73.56 லட்சம் கோடி மதிப்பிலான 72,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்தாண்டு மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பலரும் தங்களிடம் இருந்த ₹2,000 நோட்டுகளை வங்கிகள், ரிசர்வ் வங்கி அலுவலங்களில் கொடுத்து மாற்றி வந்தனர். தற்போது, ₹27,409 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் UPSC தேர்வர்களுக்கு வழங்கப்படும் ₹7,500ஐ பெறுவதற்கான மதிப்பீட்டுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக.2-17 வரை ஆன்லைன் விண்ணப்பம். செப்.9 ஹால் டிக்கெட் வெளியீடு. செப்டம்பர் 15 காலை 10-12 மணி வரை தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சிபெறும் 1000 பேருக்கு, UPSC முதல்நிலைத்தேர்வு-2025க்கு தயாராகும் வகையில் மாதம் ₹7,500 என 10 மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள்(3 நிலை) இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப்பதக்கம் வென்றார். அவருக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்திருப்பது, குறிப்பிடத்தக்கது.
வெற்று காகிதத்தில் தன்னிடம் கையெழுத்து பெற்றதாக, உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் சாட்சியம் அளித்துள்ளார். லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, லைகா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அவர் பதிலளித்தார்.
புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி இந்த மாதம் முதல் தொடங்கப்படும் என கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதிதாக ரேஷன் கார்டு கேட்டு இதுவரை 2.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அனைத்துவித பரிசீலனையும் முடிந்ததால் விரைவில் புதிய அட்டை வழங்கப்படும் என்றார். மேலும், தமிழகத்தில் 3.63 லட்சம் டன் அரிசி கையிருப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை ஆகஸ்ட் மாதமும் பெற்றுக்கொள்ளலாம் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் முழுமையாக விநியோகம் செய்ய முடியவில்லை. இதனால், பல குடும்ப அட்டைதாரர்கள், பொருட்களை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, குடும்ப அட்டைதாரர்கள் இம்மாத கடைசி வரை பருப்பு, பாமாயிலை பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர்கள் லக்சயா சென் மற்றும் பிரணாய் ஆகியோர் மோதினர். முதல் செட்டை 21-12 என்ற கணக்கில் கைப்பற்றிய அவர், அடுத்த செட்டிலும் சிறப்பாக விளையாடி 21-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் 2-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
Sorry, no posts matched your criteria.