news

News August 1, 2024

வயநாடு சம்பவம் குறித்து சிம்பு உருக்கம்

image

வயநாடு நிலச்சரிவில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சிலம்பரசன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய X பக்கத்தில், “வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு குறித்து கேள்விப்பட்டு மனம் உடைந்தது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நினைத்துப் பார்க்க முடியாத சோகம் இது. என் பிரார்த்தனைகள் உங்களுடன்” என்று பதிவிட்டுள்ளார்.

News August 1, 2024

பத்திரப்பதிவு செய்வோர் கவனத்திற்கு..!

image

ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையில், அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாள்களில் மேற்கொள்ள மக்கள் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக, ஆடிப்பெருக்கு நாளான வரும் 3ஆம் தேதி பதிவு அலுவலகங்கள் காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

News August 1, 2024

மீனவர் உடலை மீட்க மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

image

தமிழக மீனவர் மலைச்சாமியின் உடலை மீட்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படை படகு மோதியதில் பலியான மலைச்சாமி உடல் மற்றும் காயமடைந்த 2 மீனவர்கள், இலங்கையில் உள்ளதாகவும் கூறியுள்ளார். அவர்களை மீட்கவும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News August 1, 2024

தோனியின் மனம் உடைந்த தருணம்

image

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. அதுவே, அப்போதைய கேப்டன் தோனிக்கும் கடைசி போட்டியாகவும் அமைந்தது. தற்போது, அதுகுறித்து பேசிய தோனி, “அதுவே எனது கடைசி உலகக் கோப்பை தொடர் என்பது எனக்குத் தெரியும். அதில் வெற்றி பெற்றிருந்தால் நன்றாக இருக்கும். எனது மனம் உடைந்த தருணம் அது” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

News August 1, 2024

ராகுல் தைத்த செருப்பு விலை ரூ.5 லட்சம்

image

கடந்த மாதம் உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூருக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு சாலையோரம் செருப்பு தைத்துக் கொண்டிருந்தவரிடம் பேசினார். பின்னர், அவருக்கு செருப்பு தைக்கும் இயந்திரத்தை பரிசளித்த ராகுல், செருப்பு தைக்கவும் கற்றுக் கொண்டார். இப்போது ராகுல் தைத்த செருப்பை ரூ.5 லட்சத்திற்கு சிலர் கேட்பதாகவும் அதை யாருக்கும் கொடுக்கப் போவதில்லை என்றும் தொழிலாளி கூறியுள்ளார்.

News August 1, 2024

₹1.82 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்

image

ஜூலை மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ₹1.82 லட்சம் கோடியாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, 10.3% அதிகமாகும். CGST பொறுத்தமட்டில் 8.7% அதிகரித்து ₹32,400 கோடியாகவும், SGST 7.2% அதிகரித்து ₹40,300 கோடியாகவும் இருந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ₹28,970 கோடி, கர்நாடகாவில் ₹13,025 கோடி, குஜராத்தில் ₹11,015 கோடி, தமிழ்நாட்டில் ₹10,490 கோடி வசூலாகியுள்ளது.

News August 1, 2024

அரசுப் பள்ளிகளில் நாளை விழிப்புணர்வு கூட்டம்

image

அரசுப் பள்ளிகளில் நாளை விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் நலனுக்காக நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில், பெற்றோர் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 1, 2024

பணத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசுவதா?: HC

image

யூடியூபில் பணம் சம்பாதிக்க எதை வேண்டுமானாலும் பேசலாமா? என யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். பட்டியலின மக்களுக்கு எதிராக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமின் கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் அவதூறாக பேசமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

News August 1, 2024

ரசிகர்களை உற்சாகப்படுத்திய மஞ்சு வாரியர்

image

‘வேட்டையன்’ திரைப்படம் முழுக்க முழுக்க ரஜினிக்கான படமாக உருவாகியுள்ளதாக, மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், அவர் ரஜினிக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் மற்றும் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். மேலும், தனது டப்பிங் பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்றார்.

News August 1, 2024

பணக்காரர்களை ஈர்க்கும் ஐக்கிய அரபு நாடுகள்

image

இந்தியாவில் வருமான வரி அதிகமாக இருப்பதால், பெரும் பணக்காரர்கள் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றனர். குறிப்பாக, வரி இல்லாததால் ஐக்கிய அரபு நாடுகள் அவர்களை வெகுவாக ஈர்க்கிறது. சமீபத்தில் பல விலையுயர்ந்த பங்களாக்களை தனது மகன் ஆனந்த் அம்பானிக்கு, முகேஷ் அம்பானி துபாயில் வாங்கி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தியாவில் வரியை குறைக்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!