news

News August 1, 2024

அதிமுக ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு

image

ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து, தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசித்து வருகிறார். இந்நிலையில், கரூர், புதுச்சேரி தொகுதி நிர்வாகிகளுடன் ஆக.5இல் நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 1, 2024

வயநாட்டுக்கு நடிகை ரஷ்மிகா ₹10 லட்சம் உதவி

image

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டிருக்கும் பேரழிவிலிருந்து மீள்வதற்காக நடிகை ரஷ்மிகா ரூ.10 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். ஏற்கெனவே நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ₹50 லட்சம், விக்ரம் ₹20 லட்சம், ஃபகத் ஃபாசில் – நஸ்ரியா தம்பதி ₹25 லட்சம் வழங்கியுள்ளனர். நீங்களும் நிதியளிக்க, <>KCMDRF<<>> லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

News August 1, 2024

சிவகார்த்திகேயனுக்கு அம்மா ஆகும் ரம்யா கிருஷ்ணன்?

image

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தை தொடர்ந்து, வெங்கட் பிரபு, சிபி சக்கரவர்த்தி ஆகியோரது படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ‘டான்’ பட வெற்றியைத் தொடர்ந்து, அந்த கூட்டணியில் உருவாகும் புதிய படம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 1, 2024

இரவில் மழை பெய்யவிருக்கும் மாவட்டங்கள்

image

தமிழகத்தில் இரவு 1 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புண்டு.

News August 1, 2024

அரியலூரில் நாளை உள்ளூர் விடுமுறை

image

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளையொட்டி, அரியலூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வரும் ஆடி திருவாதிரை நாள், ராஜேந்திர சோழனின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை ஒருநாள், அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஆக.17 வேலைநாள்.

News August 1, 2024

SC பிரிவிலும் க்ரீமி லேயர் தேவை: உச்சநீதிமன்றம்

image

OBCயில் இருப்பது போல பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்று இன்று உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. அப்போது, “எஸ்.சி பிரிவிலும் க்ரீமி லேயர் வரையறை வேண்டும். முதல் தலைமுறையினர் இட ஒதுக்கீட்டின் மூலம் உயர்ந்த இடத்திற்கு வந்துவிட்டால் இரண்டாம் தலைமுறையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது.” என்று 4 நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

News August 1, 2024

Olympics: விபத்தில் சிக்கிய கோல்ஃப் வீராங்கனை தீக்‌ஷா

image

ஒலிம்பிக்கில் பங்கேற்க பாரிஸ் சென்றுள்ள இந்திய வீராங்கனை தீக்‌ஷா, விபத்தில் சிக்கினார். ஜூலை 30இல் நிகழ்ந்த விபத்தில், தீக்‌ஷா அவரது தந்தை உயிர்தப்பிய நிலையில், தாயார், சகோதரர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோல்ஃப் வீராங்கனையான அவர் ஆக.7இல் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளார். DeFlympics, வழக்கமான ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரே காது கேளாத கோல்ஃப் வீராங்கனை தீக்‌ஷா ஆவார்.

News August 1, 2024

உலகளவில் அதிகம் பேசப்படும் மொழிகள்

image

உலகளவில் ஆங்கிலம் பேசுபவர்களின் எண்ணிக்கை 145.6 கோடியாக இருப்பதால், பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மாண்டரின் சைனீஸ் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 113.8 கோடியாகவும், ஹிந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 60.95 கோடியாகவும், ஸ்பானிஷ் பேசுபவர்களின் எண்ணிக்கை 55.91 கோடியாகவும், பிரென்சு பேசுபவர்களின் எண்ணிக்கை 30.98 கோடியாகவும் உள்ளது. அரபிக் 27.4 கோடி பேரும், பெங்காலி 27.2 கோடி பேரும் பேசுகின்றனர்.

News August 1, 2024

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

image

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சென்னை-நாகர்கோவில், சென்னை-திருச்சி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூர்-நாகர்கோவிலுக்கு நாளை இரவு 10.45க்கும், தாம்பரம்-திருச்சிக்கு நாளை இரவு 11 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். நாளை முதல் 2 நாள்களுக்கு வார விடுமுறை என்பதால் நெரிசலை தவிர்ப்பதற்காக, முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News August 1, 2024

இனி ரயில்களில் 4 முன்பதிவு இல்லா பெட்டிகள்

image

அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் இனி 4 முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும் என, நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்தார். இதற்காக 2,500 பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறினார். முன்பதிவு செய்த பெட்டிகளை, முன்பதிவு செய்யாதவர்கள் ஆக்கிரமிக்கும் போக்கு அதிகரித்துவருவதாக தொடர் புகார்கள் எழுவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!