India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ள முறைகேடுகள் நடந்த விவகாரத்தில் CBI முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. 4 மாணவர்கள், 2 முக்கிய குற்றவாளிகள் உட்பட 13 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஆதாரங்களை சேகரிக்க மேம்பட்ட தடயவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை கையாண்டதாகவும், சிசிடிவி, செல்போன் டவர் லொகேஷன்களை பெற்றதாகவும் CBI தெரிவித்துள்ளது.
*1790 – அமெரிக்காவில் முதல் முறையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. *1858 – இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்து பிரித்தானிய ஆட்சி நடைமுறைக்கு வந்தது. *1922 – சீனாவில் சூறாவளி தாக்கியதில் 50,000 பேர் உயிரிழந்தனர். *1939 – அணு ஆயுதத்தை தயாரிக்க மன்காட்டன் திட்டத்தை முன்னெடுக்குமாறு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டிற்குக் கடிதம் எழுதினார்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 296 ஆக உயிரிழந்துள்ளது. மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 3ஆவது நாளாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. முண்டக்கை மற்றும் சூரல்மலா கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி 2 பள்ளிகளைச் சேர்ந்த 27 மாணவர்கள் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த அமர் சவான் என்பவர், அமேசான் தளத்தில் ₹54,999 மதிப்புள்ள 5ஜி செல்போனை ஆர்டர் செய்த நிலையில், அவருக்கு டீ கப்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பல முறை முறையிட்டும், அமேசான் நிறுவனம் விசாரணை செய்யாததால் அவர் போலீசிடம் புகார் அளித்துள்ளார். முன்னதாக, அமேசானில் கடந்த மாதம் Microsoft Xbox Controller பெங்களூரு பெண்ணுக்கு, பாம்பு டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் நடந்தது.
கதைக்கு தேவைப்பட்டால் ஆடையின்றி கூட நடிப்பேன் என ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி தெரிவித்துள்ளார். படங்களில் வரும் நிர்வாண காட்சிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தான் எப்போதும் தன்னுடைய இயக்குநர்களை நம்புவதாகவும், கதைக்கு தேவைப்பட்டால் தான் அப்படிப்பட்ட காட்சிகளை படத்தில் இயக்குநர்கள் வைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், ஆடையின்றி நடிக்க வெட்கமில்லை என தெரிவித்துள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 10 ▶குறள்: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். ▶பொருள்: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
வியட்நாம் பிரதமர் பாம் மின் சின்னுடன் ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வியட்நாம் உடனான நீண்ட கால நட்பை இந்தியா போற்றுவதாகவும், பாதுகாப்பு, கடல் சார்ந்த வர்த்தகம், பசுமை பொருளாதாரம் குறித்து வியட்நாம் பிரதமருடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வலுவடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்திய அணியில் பிடித்த பேட்ஸ்மேனை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம் என எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் நம்மிடம் நிறைய நல்ல பேட்ஸ்மேன்கள் இருப்பதாகவும், ஆனால் அதற்காக நல்ல பவுலர்கள் இல்லை என்று அர்த்தமில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், இந்திய அணி நன்றாக செயல்படும் வரை சிறந்த பேட்ஸ்மேனை தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
இப்படி கடுமையாக சிதைந்த உடல்களை தன் வாழ்நாளில் பார்த்ததில்லை என வயநாட்டில் பிரேதபரிசோதனை செய்து வரும் பெண் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். இதை தன்னால் கையாள முடியாது என நினைத்ததாகவும், நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களுக்கு மருத்துவம் பார்க்க ஓடிவிடலாம் என முடிவு செய்ததாகவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு உடலை இரண்டு முறை கூட தன்னால் பார்க்க முடியவில்லை என கூறியுள்ளார்.
ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் ‘வேட்டயன்’, அஜித்தின் ‘விடாமுயற்சி’ தீபாவளிக்கு வெளியாவதாக கூறப்படும் நிலையில், சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ‘பிரதர்’ வெளியானால், குறைவான திரையரங்குகளே கிடைக்கும் என கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.