India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மனிதர்களிடையே பிறப்பால் ஏற்றத் தாழ்வுகளை வளர்க்கும் சாதியை ஒழிக்க முடியுமா என கேட்டால், இல்லை என்றுதான் பதில் வருமென, விசிக தலைவர் திருமாவளவன் வேதனையுடன் கூறினார். இருப்பினும், சாதியை ஒழிப்பதற்கான களப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டே தீர வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், சிந்தனையாளர்கள் அம்பேத்கர், பெரியார் போல பல இளைஞர்கள் சமூக பணியாற்ற முன்வர வேண்டும் என்றார்.
ODI கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக முதலில் யார் சதமடித்தது என்பது தெரியுமா என்றால் கேள்விக்குறியே. அந்தப் பெருமை உலக கோப்பையை வென்று தந்த முன்னாள் கேப்டன் கபில் தேவ்வையே சேரும். 1983 உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக 175 ரன்கள் ( 138 பந்துகள்) குவித்ததே முதல் சதமாகும். அதுவும் இந்தியாவின் 45ஆவது போட்டியில் அதை பதிவு செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அமர்நாத் 1933இல் முதல் சதமடித்தார்.
பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் விபின் குப்தா (34) என்பவர் திடீரென மாயமானார். இதையடுத்து, விபின் குப்தாவை போலீஸார் நொய்டாவில் கண்டுபிடித்தனர். விசாரணையில், தன்னை யாரும் கடத்தவில்லை எனக் கூறிய அவர், மனைவியின் டார்ச்சரால்தான் ஓடியதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னை ஜெயிலில் போடுமாறு மன்றாடிய அவர், தயவுசெய்து மனைவியிடம் மட்டும் மீண்டும் அனுப்பிறாதீங்க எனக் கெஞ்சினார்.
வரும் 22ம் தேதி விஜய் தனது கட்சிக்கொடியை அறிமுகம் செய்ய இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. தவெக முதல் மாநாடு செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டு வரும் நிலையில், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்கூட்டியே கொடியை அவர் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. அந்த கொடியில், 2 வண்ண நிறங்களுக்கு மத்தியில் வாகை மலர் இடம்பெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகை என்றால் வெற்றி என்பது அர்த்தமாகும்.
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் & ஒலிம்பிக்ஸ் பதக்க மங்கை மனு பாகர் தங்களது கையெழுத்திட்ட ஜெர்சியை பரிமாறிக்கொண்டனர். ஒலிம்பிக்ஸில் இந்திய அணி பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்து கொண்டனர். அப்போது தோழமையை பாராட்டும் வகையில், மனுவுக்கு கைஃப் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அதிநவீன அடுத்த தலைமுறை பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ₹7,000 கோடி மதிப்பிலான டெண்டரை வெளியிட்டுள்ளது. L&T, பாரத் ஃபோர்ஜ் & டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் போன்ற தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க ஆர்வமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் மேம்பட்ட தானியங்கி ஆயுதங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.
உலக அமைப்புகள் செயல்படாத அமைப்புகளாகி விட்டதாக PM மோடி விமர்சித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய அவர், கடந்த நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக, நிதி அமைப்புகளால் தீவிரவாதம், கொரோனா, பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்ள முடியவில்லை என்றார். எனவே, சவால்களை எதிர்கொள்ள குளோபல் சவுத் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பல வதந்திகள் பரவுவதாக போலீஸார் கூறியுள்ளனர். அவை என்னென்ன என்று பார்க்கலாம். 1. பெண் மருத்துவரின் கழுத்து முதல் கால் வரை அனைத்து எலும்புகளும் முறிந்ததாக தகவல் பரவியது. ஆனால் இதனை முற்றிலும் பொய் என போலீஸ் மறுத்துள்ளது. 2. அவரது மர்ம உறுப்பில் 150 கிராம் விந்து இருந்ததாக தகவல் பரவி வருகிறது. இதையும் பொய் என போலீஸார் மறுத்துள்ளனர்.
தேசிய விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனன் வென்றது தெரிந்ததே. இருப்பினும், இந்த விருது கார்கி படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு கிடைத்திருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தன் தந்தையை விடுவிக்க போராடும் ஆசிரியையாக அவர் அபாரமாக நடித்திருந்தது நினைவிருக்கலாம். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.