India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் பரத் நடிப்பில் 2019இல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘காளிதாஸ்’ படத்தின் அடுத்த பாகம் ‘காளிதாஸ் 2’ என்ற பெயரில் உருவாகவுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய செந்தில்குமாரே இந்தப் படத்தையும் இயக்கவிருக்கிறார். ஸ்கை பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இதில், பரத் & அஜய் கார்த்தி முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்குமென படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை – இந்தியா இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்த பின் ரோஹித், கோலி களமிறங்க உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், ஸ்ரேயஸ், கே.எல்.ராகுல் அணியில் மீண்டும் இணைந்துள்ளனர். முன்னதாக, இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
விசிக தலைவர் திருமாவளவனிடம், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரிடம் பிடித்தது என்ன என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கலைஞரிடம் அவருடைய அளப்பறிய சகிப்புத் தன்மையும், 24 மணி நேரமும் விழிப்பாக இருந்து அரசியல் கட்சியை வழிநடத்தும் திறனும் பிடிக்கும் என்றார். ஜெயலலிதாவின் துணிச்சலான செயல்பாடும், ஆட்சி நிர்வாகத்திறனும் மிகவும் பிடிக்கும் என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ஆக.4 வரை 1,140 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வார விடுமுறை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும், திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்யலாம்.
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் 2 நாள்களுக்கு மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதேபோல், மத்திய அரபிக்கடல் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டுமென்று மதிமுக எம்பி துரை வைகோ வலியுறுத்தியுள்ளார். மதுவிலக்கு குறித்த மதிமுகவின் நிலைப்பாடு குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த துரை வைகோ, தமிழக அரசின் நிதிச்சூழல் அனுமதிக்காத காரணத்தால்தான், படிப்படியாக மதுக்கடைகளை குறைக்க வேண்டுமென கூறியதாகவும், ஆனால் மதுவிலக்கு என்பதுதான் மதிமுகவின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இன்று நடைபெறும் கோல்ப், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை,பேட்மிண்டன், பாய்மரப்படகு, ஹாக்கி & தடகளம் பெண்களுக்கான 5,000 மீட்டர் ஒட்டம் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். ஜூடோ பெண்கள் பிரிவில் பெண்கள் (78 கிலோவுக்கு மேல் எடை) முதல் சுற்றில் துலிகா மான் களமிறங்கவுள்ளார். பாய்மரப்படகு ஆண்கள் டிங்கி பிரிவில் விஷ்ணு சரவணன் வெல்ல வாய்ப்புள்ளது. <<-se>>#Olympics<<>>
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களை காணலாம். * மதுரை மீனாட்சியம்மன் கோயில் * காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் * ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் * சமயபுரம் மாரியம்மன் கோயில் *இருக்கன்குடி மாரியம்மன் கோயில் *திருவேற்காடு மாரியம்மன் கோயில் * தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் * பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயில் * மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் * தேனி கெளமாரியம்மன் கோயில்
மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளையொட்டி, அரியலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆடி திருவாதிரை நாள், ராஜேந்திர சோழனின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதை ஈடுசெய்ய 17ஆம் தேதி (சனி) வேலைநாளாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை வெற்றியில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும் என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். அடுத்து ஒரு பெரிய போட்டி வர இருப்பதால், அணியாக எதிர்கொள்ள வேண்டியது என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டும் எனவும், கம்பீர் வீரர்களிடம் இருந்து எதை எதிர்பார்ப்பார் என்பது தனக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தொடர்ந்து தரமான கிரிக்கெட்டை விளையாடவே தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.