India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*சீனா: கெமி புயல் & வெள்ளப்பெருக்கால் ஹுனான் மாகாணத்தில் ₹7,000 கோடி மதிப்பிலான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. *இந்தோனேசியா: வடக்கு கலிமந்தனில் அரசு சார்பில் பசுமைத் தொழில் நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. *உக்ரைன்: நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நெதர்லாந்திடம் இருந்து உக்ரைன் 6 போர் விமானங்களைப் பெற்றுள்ளது. *அமீரகம்: விசா காலாவதியானவர்கள் அபராதமின்றி நாட்டைவிட்டு வெளியேற அமீரகம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வரும் 7ஆம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. ஸ்டாலின் தலைமையில் அன்றைய தினம் காலை 7 மணிக்கு ஓமந்தூரார் வளாகத்தில் பேரணி தொடங்கி கலைஞர் நினைவிடத்தில் முடிவடைய உள்ளது. பேரணியில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் ஆளுநர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இதில் குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துதல், உயர் கல்வியில் சீர்திருத்தங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது. இம்மாநாட்டில், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸின் நேற்றைய நாள் இந்தியாவின் நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்தது என்றே சொல்லலாம். பதக்கங்களை வென்று தாயகம் திரும்புவார்கள் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் நட்சத்திரங்களான P.V.சிந்து, H.S.பிரனாய், சாத்விக் – சிராக் ஜோடி தோல்வியடைந்து வெளியேறினார். அதே போல, குத்துச்சண்டை வீரர் நிகத் ஜரீனும், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சிஃப்ட் கவுரும் தோல்வியோடு வெளியேறினர்.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் இந்த மாதம் அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது. இந்நிலையில், எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், புதுத்தொழில் ஈர்க்க அமெரிக்கா செல்வதை விட இருக்கும் பாரம்பரிய தொழில்களை பாதுகாப்பதே அறம் என தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய போவதாக INTEL அறிவித்துள்ளது. முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான INTEL, ஏப்ரல் – ஜூனில் தனது வருமானத்தில் 1.6 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்தது. இதனால் ஒட்டுமொத்த வருவாய் 12.8 பில்லியன் டாலராக சரிந்தது. பங்குச்சந்தையிலும் அதன் பங்குகள் சரிவை சந்தித்தன. இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் தனது ஊழியர்களில் 15% பேரை பணி நீக்கம் செய்ய போவதாக INTEL அறிவித்துள்ளது.
சேலம் தொகுதியில் அதிமுக தோற்கும் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை இபிஎஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக சேலம் மாவட்ட நிர்வாகிகளிடம் பேசிய அவர், கட்சிக்கு எதிராக சிலர் வேலை செய்ததே தோல்விக்கு முக்கிய காரணம் என்றார். யார் என்று சொன்னால் வருத்தப்படுவீர்கள் என்று தெரிவித்த அவர், சட்டமன்ற தேர்தலில் குறைகளை களைந்து வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுநாள், ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும், வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திலும், கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சேலம் மாவட்டத்திலும் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவும், இலங்கையும் இதுவரை 168 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 99 போட்டிகளில் வென்றுள்ளது. 57 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 11 போட்டிகளில் முடிவு தெரியவில்லை. கடைசியாக நடந்த 6 போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணியே வென்றுள்ளது. இன்றைய போட்டியில் இலங்கையை இந்திய அணி வென்றால் 100வது போட்டியில் வென்று புதிய சாதனை படைக்கும்.
2ஆம் தேதி பிறந்தவர்கள் குணநலன், வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து நியூமராலஜியில் தெரிவிக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம். 2ஆம் தேதியில் பிறந்தவர்கள், மன வலிமை மிக்கவர்களாக இருப்பார்கள். கலைகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பர். புதுமையை புகுத்தி வெற்றி பெறுவார்கள். நல்லவற்றுக்காகப் போராடும் குணம் கொண்டவர்கள். கண்முன்னே யாரும் துன்பப்படுவதைப் பொறுக்க மாட்டார்கள்.
Sorry, no posts matched your criteria.