India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும், பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு (₹20,000, ₹15,000, ₹10,000 ) ஊக்கத்தொகை வழங்கப்படும். பாடங்கள் வாரியாக 100/100 மார்க் எடுக்கும் மாணவர்களுக்கு ₹5,000 வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
வயநாடு பேரழிவை போன்று இந்திய ராணுவம் இதற்கு முன் பார்த்ததில்லை என கேரள மேஜர் ஜெனரல் வினோத் மேத்யூ தெரிவித்துள்ளார். இந்தளவு பெரும் நிலப்பரப்பு மண்ணில் புதைந்தது இதுவரை வேறு எங்குமே நடந்ததில்லை என்றும் கூறினார். புஞ்சிரி மட்டம், சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமங்கள் மண்ணில் புதைந்து விட்டதாகக் கூறிய அவர், பலியானவர்கள் எண்ணிக்கை நாம் நினைப்பதை விட அதிகமாக இருக்கும் என்றார்.
சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடித்துள்ள போட் உள்ளிட்ட 4 படங்கள் இன்று ரிலீஸ் ஆகியுள்ளன. இசைஞானி இளையராஜா இசையமைத்து, பாரி இயக்கியுள்ள ‘ஜமா’ படமும், விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. மேலும், நடிகை காயத்ரி, பாலா சரவணன் நடிப்பில் பேச்சி படமும் இன்று ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.
இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் இன்று 25மீ ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வெல்வாரா? எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே ஏர் ரைபிள் பிரிவில், ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர் இந்த போட்டியில் வெற்றி பெற்றால், ஒலிம்பிக் போட்டியில் 3 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைப்பார். அவர் பதக்கம் பெறுவாரா என்பதை கமெண்டில் கூறுங்கள்.
லா நினா பருவநிலை தாக்கத்தால், செப்டம்பரில் நகர்புறங்களில் வெள்ளப்பெருக்கும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகளும் நேரிடலாம் என IMD எச்சரித்துள்ளது. பருவமழையின் 2ஆவது பாதியான ஆகஸ்ட்- செப்டம்பரில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் லா நினா உருவாக அதிக சாத்தியக்கூறு உள்ளதால், செப்டம்பரில் நிலச்சரிவுகள், வெள்ளங்கள் ஏற்படக்கூடும் என்றும் IMD குறிப்பிட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தேர்தல் நேரத்தில் துருப்பு சீட்டாக பயன்படுத்த திமுக நினைப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளியை 7 நாளில் என்கவுண்டர் செய்த காவல்துறையினர், 7 ஆண்டுகளாக கொடநாடு வழக்கில் அமைதி காப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் உண்மைகள் இதுவரை வெளிவரவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியன் ஆயில் (IOC) நிறுவனத்தின் தெற்குப் பிராந்திய மார்க்கெட்டிங் பிரிவுக்கு அப்ரண்டிஸ் அடிப்படையில் 400 பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு இன்று காலை 10 மணிக்கு <
மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் விமர்சித்திருந்தனர். பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு புறக்கணித்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் அக்கட்சியின் மூத்த எம்பி தம்பிதுரையோ, மாநிலங்களவையில் பட்ஜெட்டுக்கு ஆதரவாக பேசினார். இதைப் பார்த்த அதிமுகத் தொண்டர்கள், இது என்ன நிலைப்பாடு எனத் குழப்பத்தில் உள்ளனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், வெள்ளி விலை கணிசமாக குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ₹91க்கும், கிலோ வெள்ளி ₹700 குறைந்து ₹91,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதால், வெள்ளியை வாங்க மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இயக்குநர் பா.ரஞ்சித் – நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து மாளவிகா மோகனன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். விக்ரமை முதன்முதலில் சந்திக்க கொஞ்சம் பயமாக இருந்ததெனக் கூறிய அவர், ஸ்டார் என்ற எண்ணம் கொஞ்சம்கூட இல்லாமல் அனைவரிடமும் நட்பாக பழகுவதோடு, சக பணியாளர்களுக்கு இறங்கிவந்து உதவுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.