India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீனா தலைநகர் பீஜிங்கில் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் கொள்கை வகுப்புக் குழுவின் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய சீன அதிபர் ஜின்பிங், “எல்லை, கடல் & வான் பாதுகாப்பில் நிலவி வரும் சவால்களை சமாளிக்க அறிவார்ந்த மேலாண்மை கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க AI உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்” என பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா, விளையாட்டை மையப்படுத்திய நாடு இல்லை என டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பல நிறுவனங்களை அணுகி தனக்கு ஸ்பான்சர் செய்யுமாறு வெட்கம்விட்டு கேட்டதாக தெரிவித்த அவர், இருப்பினும் இந்த விளையாட்டுக்கு நாட்டில் ஆதரவு இல்லை எனக் கூறி ஸ்பான்சர் செய்ய மறுத்துவிட்டதாக வேதனையுடன் கூறியுள்ளார். அத்துடன், தான் தினமும் கிண்டலுக்கு ஆளாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கூத்து கலைஞர்களின் வாழ்க்கை, அவர்கள் அந்த தொழிலுக்கு தரும் மரியாதை, அவர்களை வெளியார் அணுகும் விதம் என மிக நேர்த்தியான படைப்பாக ‘ஜமா’ வெளிவந்திருக்கிறது. அர்ஜுனன் வேடம் கேட்டு கெஞ்சும் கதையின் நாயகன் பாரி இளவழகனும், தனித்துவ நடிப்பால் அம்மு அபிராமியும் தடம் பதிக்கிறார்கள். இளையராஜாவின் இசையும், கோபால் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் படம் முழுவதும் ஆளுமை செய்வது படத்துக்கான மாபெரும் பலம். (W2N: 3.5/5)
கொள்ளிடம் ஆற்றில் திமுக ஆட்சியில் 6.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணையை காணவில்லை எனக்கூறி, வடிவேல் படத்தை பதிவிட்டு அண்ணாமலை கிண்டல் செய்துள்ளார். திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நேப்பியர் பாலம் அருகே மண் அரிப்பைத் தடுக்க, சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம், தற்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனை விமர்சித்து அண்ணாமலை X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், மடிக்கணினி வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, உயர்க்கல்வி படிக்க வெளிநாடு செல்லும் மாணவர்களின் பயணச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்த அவர், படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு கவனச் சிதறல்கள் இருக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். வரும் திங்கள்கிழமை முதல் அனைத்துப்பள்ளிகளிலும் மடிக்கணினி வழங்கப்படும் என தெரிகிறது.
தமிழ்நாட்டில் பாஜகவே திமுகவுக்கு மாற்றாக உள்ளதாக பாஜக மூத்தத்தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். இதுவரை தமிழகம் கண்டிராத அளவிற்கு, கஞ்சா புழக்கமும், வன்முறையும் இருப்பதாக விமர்சித்த அவர், ஆளுநர் மட்டும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால், தமிழக அரசு டிஸ்மிஸ் செய்யப்படும் என்றார்.
திமுக அரசு ஏற்கெனவே 2 முறை டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற முடியாத குஜராத் மாணவி, நீட் தேர்வில் 98% மதிப்பெண் எடுத்தது எப்படி எனக் கேள்வி எழுப்பிய அவர், நீட் தேர்வு மாணவர்களின் உண்மையான திறமையை பிரதிபலிக்கவில்லை எனவும் குறை கூறியுள்ளார். நீட் தேர்வில் 705 மதிப்பெண் எடுத்த அந்த மாணவி, பிளஸ் 2 மறுதேர்விலும் தோல்வி அடைந்தது, குறிப்பிடத்தக்கது.
மானிய விலையில் கோதுமை, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ₹6,500இல் இருந்து ₹8,000ஆக உயர்த்தப்படும். மழைக்கால நிவாரணம் ₹3,000 லிருந்து ₹6,000ஆக உயர்த்தப்படும். பிரதமரின் காப்பீடு திட்ட வரம்பில் வராத எஸ்சி, எஸ்டி மக்களுக்கு ₹5 லட்சம் வரை சுகாதார காப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2026இல் பாஜக கூட்டணியை சேர்ந்தவர் முதல்வராக இருப்பார் என அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார். ஸ்டாலின் மக்களுக்காக பணியாற்றாமல், குடும்பத்துக்காக செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் ஸ்டாலின், பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலை செய்பவர்களுக்காக அதனை ரத்து செய்வாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, சென்னையின் பிரபல ஏ பிளஸ் பிரிவு ரவுடி தேவா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். தேவாவின் தந்தை சேகர், அண்ணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.