India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் தீரஜ் – அங்கீத் இணை அபாரமாக செயல்பட்டு, இந்தோனேசிய அணியை 5 -1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
எல்ஐசி திட்டங்களில் ஓய்வுக்கு பிறகும் வருமானம் தரும் பென்ஷன் திட்டங்களும் அடங்கும். எல்ஐசி ஜீவன் தாரா 2, எல்ஐசி சாரல் பென்ஷன், எல்ஐசி ஜீவன் அக்ஷய் -7, எல்ஐசி நியூ ஜீவன் சாந்தி ஆகியவையே அத்திட்டங்கள் ஆகும். இதில் நீங்கள் செலுத்தும் பணத்திற்கேற்ப ஓய்வுக்குபிறகு குறிப்பிட்ட தொகை இறப்பு வரை வழங்கப்படும். பாலிசிதாரரின் இறப்புக்கு பிறகு மிகப்பெரிய தொகை அவரது குடும்பத்தினருக்கு அளிக்கப்படும்.
செந்தில்பாலாஜி வழக்கில், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரிய மனு மீது, இன்று மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதால், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதிதாக 17 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறக்க பிரதமர் மோடி முயற்சிப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், மக்கள் அனைவரும் உயர் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸுக்கு வர வேண்டிய நிலையை மாற்றுவதே அரசின் திட்டமென்றும், இதற்காக உலகின் சிறந்த மருத்துவ அமைப்பு கொண்ட எய்ம்ஸை நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் திறக்க பிரதமர் முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
ஜாமின் மனு தள்ளுபடியானதால் புனே பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கெட்கர் வெளிநாடு தப்பிச் சென்றார். போலி ஆவணங்கள், போலிச் சான்றிதழ்கள் மூலம் அவர், ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றது உறுதியானது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தகுதி நீக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், ஜாமின் மனு தள்ளுபடியானதால் கைது நடவடிக்கைக்கு அஞ்சி அவர் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார்.
ஜியோ நிறுவனம் புதிதாக மாதாந்திர திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ₹319 ரீசார்ஜ் செய்தால், தினமும் 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ் அளிக்கிறது. இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக, மாதத்துக்கு ஒரு முறை மட்டும் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் போதுமானது. அதாவது, இம்மாதம் 5ஆம் தேதி ரீசார்ஜ் செய்தால், அடுத்த மாதம் 5ஆம் தேதியே ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
குட்கா வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடையை மீறி குட்கா விற்பனைக்கு அனுமதி கொடுத்ததாக லஞ்சம் பெற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிடோர் செப்டம்பர் 9இல் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா ‘ஆடுஜீவிதம்’ படத்தை பாராட்டியுள்ளார். பிருத்வி ராஜ் நடிப்பு சிறப்பாக இருந்ததாகக் கூறிய அவர், இப்படம் நிச்சயம் சர்வதேச அங்கீகாரம் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். இயக்குனர் பிளஸ்சி தனது வேலையை சிறப்பாக செய்துள்ளார் என்றார். ஏ.ஆர்.ஆர் இசையில் மார்ச் 28ஆம் தேதி வெளியான இந்த படம் உலகம் முழுவதும் ரூ.157 கோடி வசூலித்துள்ளது. தற்போது ஓடிடிகளிலும் இந்த படத்தை காணலாம்.
பேங்க் ஆஃப் இங்கிலாந்து தனது பிரதான வட்டி விகிதத்தை 5% ஆகக் குறைத்துள்ளது. 9 உறுப்பினர்களைக் கொண்ட Monetary Policy Committee, வட்டி விகிதத்தை குறைக்க ஒப்புக்கொண்டது. இதையடுத்து, 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இருந்த 5.25% வட்டி தற்போது மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இது, இங்கிலாந்தில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தப்பட உதவுமென பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆடி 18 விழாவையொட்டி, மலர் சந்தைகளில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக தேனியில் மல்லிகைப் பூ ஒரு கிலோ ₹800, கனகாம்பரம் ₹700க்கும், மதுரையில் மல்லிகை ₹700, பிச்சிப்பூ ₹700க்கும், திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை ₹250லிருந்து ₹900க்கும், முல்லை ₹100லிருந்து ₹500க்கும் விற்பனையாகிறது. நாளையும், நாளை மறுநாளும் பூக்களின் விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.