India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய வீரர் லக்சயா சென் புதிய சாதனை படைக்கவுள்ளார். இன்று நடக்கும் ஆட்டத்தில் தைவானின் சவ் தியென்-ஐ எதிர்கொள்ளவிருக்கும் அவர், இதில் வென்றால் அரையிறுதிக்கு செல்லும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இதுவரை, இருவரும் மோதிக்கொண்ட 4 போட்டிகளில் சென் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளதால், இந்த ஆட்டம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 83 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்களின் 169 படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், திமுக எம்பி வில்சன் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
டேபிள் டென்னிஸ் (TT) மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா & மனிகா பத்ரா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போராடி வீழ்ந்தனர். இதனால், ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதே போல, ஆடவர் பிரிவிலும் இந்திய வீரர்கள் வெளியேறிவிட்டனர். இந்நிலையில், TT பிரிவில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள கடைசி போட்டியாக அணிகள் பிரிவுப் போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது.
நாடு முழுவதும் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 5,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பதிலளித்துள்ளார். உயர் நீதிமன்றங்களில் 359 நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் 12 நீதிபதி பதவி, மாவட்ட கீழமை நீதிமன்றங்களில் 339 பதவிகள் காலியாக உள்ளன எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.
திராவிட மாடலின் முன்னோடி ராமர் என அமைச்சர் ரகுபதி கூறிய நிலையில், அதற்கு நேரெதிரான கருத்தை அமைச்சர் சிவசங்கர் கூறியிருப்பது பேசு பொருளாகியுள்ளது. திராவிட அரசியலின் அடிநாதமாக கருணாநிதி முன்வைத்த, ஆரிய எதிர்ப்பில் இருந்து திமுக விலகியதாக விமர்சனங்கள் அண்மையில் எழுந்தன. அதற்கு பதிலளிக்கும் வகையில், ராமருக்கு வரலாறு இல்லை என்ற சிவசங்கரின் கூற்று அமைந்திருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. IND அணியில் ரிஷப் பந்த் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதில் ராகுலுக்கு கீப்பர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. IND அணி: ரோஹித், கில், கோலி, ஷ்ரேயாஸ், சுந்தர், துபே, குல்தீப், அர்ஷ்தீப், சிராஜ் இடம்பெற்றுள்ளனர். SL அணி: நிஸ்ஸங்கா, குஷால், சமரவிக்ரம, அசலங்கா, லியனகே, ஹசரங்க உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், மன்னார் வளைகுடா, மத்தியமேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, திரைத்துறைக்கு வந்தார். பிறகு, ரஜினி முருகன் உள்ளிட்ட ஹிட் படங்களைக் கொடுத்து நிரந்தர இடத்தை பிடித்தார். பிஇ பட்டதாரியான அவர், முதலில் தனது தந்தையைப் போல் காவல்துறை அதிகாரியாக விரும்பியுள்ளார். அவரை இழந்து குடும்பச் சுமையை ஏற்ற பிறகு விருப்பத்தை கைவிட்டு கலைநிகழ்ச்சிகளில் நடிக்க வந்துள்ளார்.
நீட் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்வை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு பாட்னா மற்றும் ஹசாரிபாக்கில் உள்ள மையங்களில் மட்டுமே நடந்துள்ளதால், மொத்த தேர்வையும் ரத்து செய்வது சரியல்ல என்று கூறிய நீதிபதிகள் அமர்வு, எதிர்காலத்தில் முறைகேடுகளை தவிர்க்க மின்னணு கைரேகைகள், சைபர் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.
ராமர் வாழ்ந்ததற்கு எந்தவித வரலாறோ, ஆதாரமோ இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். அரியலூரில் நடந்த விழாவில் பேசிய அவர், “மாமன்னர் ராஜேந்திர சோழருக்கு 3,000 ஆண்டுகள் வரலாறு இருக்கிறது. அவரது ஆட்சியின் பொற்காலத்தை ஆதாரமாகக் கொண்டு, அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறோம். அவரை கொண்டாடவில்லை என்றால், வரலாறு இல்லாதவர்களை நம் தலையில் சிலர் கட்டிவிடுவார்கள்” என்று கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.