India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வயநாடு பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக, நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். ‘அந்தகன்’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எவ்வளவு ஆறுதல் கூறினாலும் ஈடு செய்ய முடியாது என்றார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை, முடிந்த அளவிற்கு செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னையில் இருந்து நாகர்கோவில், திருச்சிக்கு இன்று 2 சிறப்பு விரைவு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழும்பூரில் இருந்து இன்றிரவு 10.45 மணிக்கு புறப்படும் ரயில், நாகர்கோவிலுக்கு நாளை காலை 11 மணிக்கு செல்லும். தாம்பரத்தில் இருந்து இன்றிரவு 11 மணிக்கு திருச்சிக்கும், திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு நாளை இரவு 10.30 மணிக்கும் முன்பதிவில்லா ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய அவர், +2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், இந்தியாவில் உள்ள முதன்மை கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றில் சேரும்போது அவர்களுக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார்.
2023-24 ஆம் நிதியாண்டில் பியூச்சர் & ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் 92.5 லட்சம் முதலீட்டாளர்களுக்கு ₹52,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செபி தெரிவித்துள்ளது. அதன் புள்ளிவிவரத்தின்படி, NSEயில் 78.28 லட்சம் தனிநபர்கள் F & O வர்த்தகத்தில் ஈடுபட்டு இந்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதுபோல, 2022-23இல் தினசரி பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களில் 70% பேர் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட வேண்டும் என்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், துப்பாக்கிச்சூட்டை ஏற்க முடியாது என்றும், இதில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகள் பற்றி விசாரிக்கவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போது சொத்துகளைக் கணக்கிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்களின் படகின் மீது இலங்கைக் கடற்படையின் கப்பல் வேண்டுமென்றே மோதி மீனவர் மலைச்சாமி உயிரிழந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருவதாக விமர்சித்துள்ளார். இதில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டுள்ளார்.
UGC NET தேர்வுகள் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் 2 பிரிவுகளாக தேர்வு நடைபெறவுள்ளது. வினாத்தாள் கசிவு புகாரைத் தொடர்ந்து, கடந்த மாதம் நடந்த UGC NET தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு எம்ஜி வின்ட்சர் சொகுசு கார் பரிசு அளிக்கப்படுமென தொழிலதிபர் சஜன் ஜிண்டால் அறிவித்துள்ளார். ஒலிம்பிக்ஸில் இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இந்நிலையில் எக்ஸ் பக்க பதிவில், சுமார் ரூ.20 லட்சம் மதிப்பு கார் பரிசாக அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதை சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் பாராட்டி வருகின்றனர்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிருக்கு போராடிய, 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். படவேட்டு குன்னு என்ற இடத்தில் நிலச்சரிவில் சிக்கியிருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேரை, 3 நாள்களுக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் ராணுவம் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட 4 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இயற்கை பேரிடர் மேலாண்மைக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X பதிவில், “பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் நிதி வழங்க வேண்டும். அரசும், நிர்வாகமும் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட உதவிகளை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.