news

News August 2, 2024

மாணவர்களின் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்

image

டெல்லியில் பயிற்சி மையத்திற்குள் தண்ணீர் புகுந்ததில் UPSC மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவத்தின் தீவிர தன்மை மற்றும் அரசு ஊழியர்களின் ஊழல் சாத்தியக்கூறுகளால் இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட மூத்த அதிகாரியை நியமிக்குமாறு மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News August 2, 2024

நித்திலனை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி

image

‘மஹாராஜா’ பட இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனை நடிகர் ரஜினி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள நித்திலன், ரஜினி சாரை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்ததாகவும், வாழ்க்கையின் நாவலையும், அனுபவத்தையும் சிறந்த மனிதனிடம் இருந்து கேட்டு தெரிந்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அவரது பண்பும், பணிவும் பிரமிப்பு தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News August 2, 2024

Fact Check: வயநாட்டின் துயரத்தை சொல்லும் படம்?

image

‘வயநாடு நிலச்சரிவின் துயரம்’ என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் மேற்கண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை கண்ட பலரும், அவர்கள் மூவரும் இறந்துவிட்டதாக கருதி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், புகைப்படத்தில் இருக்கும் தீரஜ் முகாமில் தங்கியுள்ளார். அவருடைய சகோதரிகளில் ஒருவர் திருமணமாகி புல்பல்லியில் வசித்து வருகிறார். மற்றொருவர் திருவனந்தபுரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

News August 2, 2024

மத்திய குழுவுக்கு உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?

image

மாணவர்கள் பதிவு, தேர்வு மையங்களில் மாற்றம், வினாத்தாள் கசிவை தடுக்கும் வழிகள் உள்ளிட்டவை குறித்து, ஒரு செயல்திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. தேர்வு மையங்களில் CCTV, வினாத்தாளை பாதுகாப்பான வாகனங்களில் கொண்டுவருதல், தனிநபர் சுதந்திரம் பாதிக்காத வகையில், பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்துவது போன்ற ஆலோசனைகளையும் மத்திய அரசின் குழுவுக்கு நீதிமன்றம் அளித்துள்ளது.

News August 2, 2024

வயநாட்டுக்கு ₹20 லட்சம் வழங்கிய நயன்தாரா தம்பதி

image

வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக, நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் ₹20 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர். அவர்களது ‘ரவுடி பிக்சர்ஸ்’ சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “இந்த கடினமான சூழலில் ஒருவருக்கொருவர் துணையாக நிற்க வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து அனைத்தையும் மீண்டும் உருவாக்குவோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

News August 2, 2024

நீட் தேர்வை ஏன் ரத்து செய்யவில்லை: SC விளக்கம்

image

பாட்னா, ஹசாரிபாக் தவிர, நாடு முழுவதும் நீட் தேர்வில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லாத காரணத்தால், தேர்வை முழுமையாக ரத்து செய்ய உத்தரவிடவில்லை என, உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. மாணவர்களின் நலனுக்கு பொருந்தாத செயல்களை, NTA நிறுத்திக்கொள்ள அறிவுறுத்தியதுடன், குளறுபடிகளை தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து, செப்.30க்குள் அறிக்கை தரவும், மத்திய அரசின் ஆய்வுக்குழுவுக்கு உத்தரவிட்டது.

News August 2, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

News August 2, 2024

மியூச்சுவல் ஃபண்டுகளில் இந்த தவறுகளை செய்யாதீர்..!

image

மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டில், 5 தவறுகளை செய்யக்கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். *ஃபண்டு திட்டங்களை அடிக்கடி மாற்றக்கூடாது. *சந்தை இறங்கும் போது பயத்தில் யூனிட்களை விற்கக்கூடாது. *தெரிந்தவர்கள் கூறுவதற்காக அதிக ஃபண்டுகளில் முதலீடு செய்யக்கூடாது. *சந்தை இறங்கட்டும் பிறகு முதலீடு செய்யலாம் என காலம், நேரம் பார்க்க கூடாது. *அதேபோல, எந்தவித குறிக்கோள்களும் இல்லாமல் முதலீடு செய்யக் கூடாது.

News August 2, 2024

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்: கைது செய்ய ஆணை

image

2019 நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தவர்களை சிபிஐ உதவியுடன் கைது செய்ய, சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளிமாநிலங்களில் இருப்பதால், சிபிஐ உதவியுடன் அவர்களை கைது செய்யவும், 4 மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிமன்றம், சிபிசிஐடிக்கு தேவையான ஆவணங்களை NTA வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

News August 2, 2024

காங்கிரஸ் சார்பில் 100 வீடுகள் கட்டித் தர முடிவு

image

வயநாட்டில் நிலச்சரிவால் வீடுகளை இழந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, காங்கிரஸ் சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவெடுத்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் இப்படியொரு சோகத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றார். பாதிப்புகள் குறித்து ஊராட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும், வீடுகள் கட்டித் தர முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.

error: Content is protected !!