news

News August 2, 2024

வாகன ஓட்டிகளுக்கு நடிகர் பிரசாந்த் வேண்டுகோள்

image

இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என நடிகர் பிரசாந்த் வலியுறுத்தியுள்ளார். பணி நிமித்தமாக செல்பவர்கள், 5 நிமிடத்திற்கு முன்னதாகவே புறப்பட அறிவுறுத்திய அவர், வேகமாக வாகனம் ஓட்டக்கூடாது என வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக, தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த போது, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக நடிகர் பிரசாந்துக்கு நேற்று ₹2000 அபராதம் விதிக்கப்பட்டது.

News August 2, 2024

இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மனு பாக்கர்

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஏற்கெனவே, மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தனியாகவும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் அணி பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்தும், 2 வெண்கலப்பதக்கங்களை வென்ற அவர், 3ஆவது பதக்கத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளார். இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது.

News August 2, 2024

ஆட்டிறைச்சி சாப்பிட்ட 4 பேர் பலி

image

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் இருந்து வாங்கிவந்த இறைச்சியை குடும்பமாக சேர்ந்து அவர்கள் சமைத்து உண்டனர். சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், போகும் வழியிலேயே அனைவரும் உயிரிழந்தனர்.

News August 2, 2024

வருமான வரி பிடிக்காமல் இருக்க… (1/2)

image

அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியரின் மாத ஊதியம் ஆண்டு அடிப்படையில் கணக்கிட்டு, அது வகுக்கப்பட்டு வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கென ஒரு குறிப்பிட்ட தொகை மாத ஊதியத்தில் கழிக்கப்படுவதால் சிலர் சிரமத்தை எதிர்கொள்வர். அத்தகைய நபர்கள், சில வழிகளை கையாண்டால் வருமான வரி பிடித்தத்தில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும். அதுகுறித்து பொருளாதார ஆலோசகர்கள் தெரிவிக்கும் வழிகளை இங்கு காணலாம்.

News August 2, 2024

வருமான வரி பிடிக்காமல் இருக்க…(2/2)

image

பிபிஎப், தேசிய ஓய்வூதியத் திட்டம், ஆயுள் காப்பீடு, தேசிய சேமிப்பு பத்திரம், ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு, வீட்டுக் கடன், 5 ஆண்டு கால நிரந்தர வைப்புத் தொகை, சுகன்யா சம்ரிதி ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். இதில் ஆகும் செலவை கணக்கு காட்டி வருமான வரி செலுத்துவதை தவிர்க்க முடியும். இதேபோல், குழந்தைகளுக்கான கல்வி கட்டணச் செலவுகளை கணக்கு காட்டியும் வருமான வரி பிடித்தத்தை தவிர்க்க முடியும்.

News August 2, 2024

60 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

image

சென்னை விமான நிலையப் பகுதியில் 60 நாட்களுக்கு கிளைடர், ட்ரோன், ஏர் பலூன்கள் பறக்க விடத் தடை விதித்து பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு வெளியிட்டுள்ளார். அதில், 1973 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144 பிரிவின்கீழ் சென்னை விமான நிலைய வான் பகுதியில் ஆக. 1 முதல் செப். 29 வரை லேசர் பீம் லைட் அடிப்பது, இலகுரக சாதனங்களை பறக்க விடத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

News August 2, 2024

34 ஆண்டுகள் பின்னுக்கு சென்ற ஜப்பான் பங்குச்சந்தை

image

ஜப்பான் பங்குச்சந்தை நிக்கெய், இன்று ஒரே நாளில் 2,200 புள்ளிகளை இழந்து அதள பாதாளத்திற்கு (35,900) சென்றுள்ளது. அதாவது, 1990ஆம் ஆண்டை விட குறைவான மதிப்பிற்கு ஜப்பான் பங்குச்சந்தை சென்றதால், அதில் முதலீடு செய்தோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 1990ஆம் ஆண்டு 37,000 புள்ளிகளை தொட்ட நிக்கெய், அதன்பின் கடும் சரிவை சந்தித்து இந்தாண்டு பிப்ரவரியில்தான் மீண்டும் 37,000 புள்ளிகளை தொட்டது.

News August 2, 2024

மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கேள்வி

image

எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் நட்டா அளித்த பதிலில் மதுரை எய்ம்ஸ் பற்றி எந்த விவரமும் இல்லையென எம்.பி சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட காரணம் என்ன?
என கேள்வி எழுப்பியுள்ளார்.

News August 2, 2024

ரிசர்வ் வங்கியில் பணிபுரிய விருப்பமா?

image

ரிசர்வ் வங்கியில் கிரேட் ‘பி’ பிரிவு அதிகாரிகள் பதவிக்கான 94 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் <>opportunities.rbi.org.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அடிப்படை ஊதியமாக ₹55,220 முதல் ₹99,750 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். கூடுதலாக அகவிலைப்படி, இதர கொடுப்பனவு சேர்த்து சுமார் ₹1.22 லட்சம் வரை மாத சம்பளமாக கிடைக்கும்.

News August 2, 2024

சென்னையின் பெரும்பகுதி கடலில் மூழ்கும் அபாயம்

image

2040ஆம் ஆண்டு சென்னை நகரின் 7% நிலப்பகுதி கடலில் மூழ்கும் என்று CSTEP எச்சரித்துள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக கடல் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், கரையோர நகரான சென்னையின் பல தாழ்வான பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, தீவுத்திடல், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆகியவை பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

error: Content is protected !!