India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயப்படுத்தியுள்ளதாக, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து தெரிவித்துள்ளார். உண்மை என்ற சூரியனை, பொய் மேகங்கள் சிறிதுநேரம் மறைக்கலாம் என்றும், ஆனால், உண்மையே எப்போதும் வெல்லும் எனவும், தனது X தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில், இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இன்று நடைபெற்ற குரூப் போட்டியில், ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம், 1972ஆம் ஆண்டுக்கு பிறகு, ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி தனது வெற்றியை பெற்றுள்ளது.
வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32ஆவது சர்வதேச மாநாட்டை, பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். ‘நிலையான வேளாண் உணவு முறைகளை நோக்கிய மாற்றம்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில், 75 நாடுகளைச்சேர்ந்த 1000 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த சர்வதேச மாநாடு, 65 ஆண்டுகளுக்குப்பிறகு டெல்லியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களே இலங்கை அணி எடுத்துள்ளது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா, பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரரான நிசங்கா, நிதானமாக விளையாடி 56 ரன்கள் எடுத்தபோதும், மற்ற வீரர்கள் தடுமாறினர். பின்னர் வெல்லலகே 66 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் சிராஜ், அர்ஷ்தீப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
செந்தில் பாலாஜிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவதிப்படுவதாக, புழல் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணைக்காக காணொலி காட்சி மூலம், படுத்த படுக்கையாக அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதுகுறித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கேள்வி எழுப்பியபோது, அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், புழல் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்தது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தை காலிறுதி போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில், ஸ்பெயின் அணியை, இந்திய அணி எதிர்கொண்டது. இந்திய அணியில் திராஜ் மற்றும் அங்கிதாவும், ஸ்பெயின் அணியில் எலியா மற்றும் பாப்லோ களமிறங்கினர். இதில், முதல் 2 செட்டில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த இந்திய அணி, இறுதி வரை சிறப்பாக விளையாடி, 5-3 என்ற செட் கணக்கில் அரையிறுதிக்கு முன்னேறியது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ₹1,800 கோடி மதிப்பீட்டில் மதர்சன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கவுள்ளது. 67 ஏக்கரில் அமையவுள்ள இந்த ஆலை கட்டுமான பணிகளின் போது 200 பேருக்கும், தொழிற்சாலை செயல்பட தொடங்கும்போது 3,500 பேருக்கும் வேலை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதேபோல, வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் 7.28 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 7.5% அதிகமாகும். சுமார் 5.27 கோடி பேர் புதிய வருமான வரி விகித முறையிலும், 2.01 கோடி பேர் பழைய வருமான வரி முறையிலும் ஐடி தாக்கல் செய்துள்ளனர். மொத்தமாக 72% பேர் புதிய வருமான வரி விகித முறைக்கு மாறியுள்ளனர். 58.57 லட்சம் பேர் முதல்முறையாக ஐடி தாக்கல் செய்துள்ளனர்.
வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக நீலகிரி, திண்டுக்கல் உள்பட 8 மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், மழை நாள்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், அவசர தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், மழை நேரத்தில் வருவாய்துறை, பேரிடர் மேலாண்மை துறை இணைந்து செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலச்சரிவு தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) கேள்வி எழுப்பியுள்ளது. வயநாடு நிலச்சரிவு தொடர்பான வழக்கில், கேரள அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நீலகிரி, கோவை ஆட்சியர்கள் மற்றும் தமிழக அரசின் தலைமை செயலாளர் பதிலளிக்கவும் ஆணையிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.