news

News August 2, 2024

செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு

image

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டு பதிவை, தள்ளி வைக்கக்கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை முதன்மை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ED இன்று குற்றச்சாட்டு பதிவு செய்வதாக இருந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி குற்றச்சாட்டு பதிவை வரும் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

News August 2, 2024

அரை சதம் விளாசினார் ரோஹித் ஷர்மா

image

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா அரை சதம் விளாசியுள்ளார். கொழும்பு மைதானத்தில் நடைபெறும் போட்டியில் 231 ரன்கள் இலக்கை IND அணி, துரத்தி வருகிறது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டும் ரோஹித் 41 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 55 ரன்கள் எடுத்துள்ளனர். IND அணி தற்போதுவரை, 13 ஓவர்களில் 78/1 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

News August 2, 2024

₹1.25 லட்சம் கோடி மதிப்பை இழந்த டாப் 10 நிறுவனங்கள்

image

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி நேற்று 25,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்த நிலையில், இன்று 293 புள்ளிகள் சரிந்து, 24,717 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இதனால், டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ₹1.25 லட்சம் கோடி சரிந்தது. அதிகபட்சமாக TCS மதிப்பு ₹41,438 கோடி சரிந்து, ₹15.67 லட்சம் கோடியாக குறைந்தது. அதேபோல, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல்&டி உள்ளிட்ட பங்குகளின் மதிப்பும் சரிந்தன.

News August 2, 2024

துருக்கியில் இன்ஸ்டாகிராம் சேவை முடக்கம்

image

துருக்கி நாட்டில் இன்ஸ்டாகிராம் சேவையை அந்நாட்டு அரசு திடீரென முடக்கியுள்ளது. எவ்வளவு காலத்திற்கு முடக்கம், ஏன் முடக்கம் என்று எந்த காரணத்தையும் அரசு கூறாததால் மக்கள் கோபத்தில் உள்ளனர். ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயிலுக்கு துருக்கி மக்கள் பலர் இன்ஸ்டாகிராமில் இரங்கல் தெரிவித்ததால், அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 2, 2024

கேப்டன் ரோஹித் ஷர்மா புதிய சாதனை

image

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி 15,000 ரன்களை கடந்து சாதனை படைத்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா. முன்னதாக, சச்சின் மற்றும் சேவாக் மட்டுமே இந்தியாவில் இருந்து இந்த சாதனையை செய்திருந்தனர். குறிப்பாக, தொடக்க வீரராக அதிவேகமாக 15,000 ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு (331 இன்னிங்ஸ்) அடுத்த இடத்தில் ரோஹித் (352 இன்னிங்ஸ்) இருக்கிறார்.

News August 2, 2024

ஆடிப்பெருக்கன்று மாங்கல்யம் மாற்றும் நேரம்

image

தமிழகத்தில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. புதுமணப் பெண்கள், சுமங்கலிகள் இந்த நாளில், புதிய தாலி கயிறை தங்களது கணவன் கையால் கட்டிக்கொள்வது ஐதீகம். இந்த சம்பிரதாயத்தை, நாளை காலை 7.35-8.50 மணி, காலை 10.35-11.55 மணிக்குள் ஆறுகள், நதிகளில் நீராடிய பிறகு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே நீராடியபின், அம்மனுக்கு பூஜை செய்தால் மாங்கல்ய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

News August 2, 2024

சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மறுப்பு

image

தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு, நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை அளித்தது குறித்து, சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட, உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தற்போதுள்ள சட்டவிதிகளின் படி, மனுதாரருக்கு தீர்வு கிடைக்கவில்லை எனில், அதன் பிறகு உயர்நீதிமன்றத்தையோ, உச்ச நீதிமன்றத்தையோ நாடலாம் என்றும் கூறியது. கடந்த பிப்ரவரியில் தேர்தல் பத்திரங்களை, உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

News August 2, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

News August 2, 2024

வயநாடு நிலச்சரிவில் இதுவரை 340 பேர் பலி

image

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில், இதுவரை 340 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 29ஆம் தேதி நிகழ்ந்த கோர சம்பவத்தில், பலர் தங்களது உடைமை, உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், 4ஆவது நாளாக மீட்புப்பணிகள் தொடரும் சூழலில், மண்ணுக்குள் யாரேனும் புதைந்துள்ளார்களா என்பதை, தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

News August 2, 2024

தலைமுடி வேகமாக வளர…

image

தலைமுடி வேகமாக வளரவில்லை என சிலர் கவலையுடன் இருப்பர். இப்பிரச்னைக்கு தீர்வு காண மருத்துவ நிபுணர்கள் சில ஆலோசனைகளைப் பரிந்துரைக்கின்றனர். அதாவது, எண்ணெய்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள் இருப்பதாகவும், ஆதலால் அதைக் கொண்டு, மசாஜ் செய்தால், முடி நன்கு வளரும் என கூறுகின்றனர். நல்ல தரமான ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்தி குளிப்பது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!