India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுப நிகழ்ச்சிகள், ஆன்மிகப் பயணங்கள் செல்ல, SETC பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. குறைந்த கட்டணத்தில் SETCயின் அனைத்து வகை பேருந்துகளையும் எடுத்துக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ள போக்குவரத்துக் கழகம், www.tnstc.in என்ற இணையதள முகவரி மற்றும் 94450 14402, 94450 14424, 94450 14463 என்ற எண்களில் அழைத்து விவரங்களை பெறலாம் எனக் கூறியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். சீன தைபே வீரர் தியென் சென் உடன் மோதிய அவர், முதல் செட்டை 19-21 என்ற புள்ளி கணக்கில் தோற்றார். அடுத்தடுத்த 2 செட்டில் சிறப்பாக விளையாடிய அவர், 2-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
2024-25 நிதியாண்டிற்கான முதல் காலாண்டு முடிவுகளை, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நாளை வெளியிட உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, ஒவ்வொரு நிதியாண்டிலும் 4 முறை அதன் நிதி முடிவுகளை வெளியிடும். அந்த வகையில் நாளை வெளியிடப்பட உள்ள முதல் காலாண்டு முடிவுகளை, வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள், https://www.sbi.co.in/ என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே மழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக கூடிய இந்த மேகங்கள், வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்னை நகருக்கு மழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-இலங்கை இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டையில் முடிந்தது. கொழும்புவில் நடைபெற்ற போட்டியில், முதலில் விளையாடிய SL, 230 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சிறப்பாக ஆடினாலும், மிடில் ஓவர்களில் இருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 47.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல்அவுட்டானதால், போட்டி டையில் முடிந்தது. 2ஆவது ODI ஆக.4இல் நடைபெற உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பகுஜன் சமாஜ் அறிவித்துள்ளது. BSP மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ஆம் தேதி வெட்டி கொல்லப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து ஆக.9, பிற்பகல் 2 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என BSP மாநிலத் தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை 4 முதல் 5.30 மணி வரை கடவுளை தரிசனம் செய்ய உகந்த நேரம் என்று மத அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். காலையிலேயே பூஜைகளுடன் நாளை தொடங்குவதால், அன்றைய தினம் முழுவதும் எதிர்மறை எண்ணங்கள் தோன்றாமல் இருக்கும், கடவுளின் அனுகிரஹம் முற்றிலுமாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. காலை வேளைகளில்தான் நமது மனது அலைபாயாமல் ஒருநிலைப்படும் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை புறநகரில் கனமழை பெய்வதால், ஆடிப்பெருக்கு விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர். இதேபோல, கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழை வெளுத்து வாங்குவதால், வாகன ஓட்டிகள் சற்று சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் தங்களை டிவி பார்க்கவும், செல்ஃபோன் உபயோகிக்கவும் அனுமதிப்பதில்லை என பெற்றோர் மீது பிள்ளைகள் வழக்கு தொடுத்துள்ளனர். அடிக்கடி அடிப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 2021ஆம் ஆண்டு 21 வயது மகளும், 8 வயது மகனும் இணைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்களது தந்தை பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஓலா எலக்ரிக் நிறுவனம் பொது பங்கு வெளியீடாக தனது பங்குகளை இந்திய பங்குச்சந்தையில் அறிமுகம் செய்கிறது. இதற்கான ஐபிஓ இன்று தொடங்கிய நிலையில், மொத்தமாக 0.38% சப்ஸ்கிரிப்சன் நடந்துள்ளது. சில்லறை முதலீட்டாளர்களுக்கான பங்கில் 1.7 மடங்கு சப்ஸ்கிரிப்சன் நடந்துள்ளது. ஒரு பங்கின் விலை ₹72 முதல் ₹76ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை வரை முதலீட்டாளர்கள் ஐபிஓவில் முதலீடு செய்ய முடியும்.
Sorry, no posts matched your criteria.