India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இளம் தலைமுறையினரின் காதல், நட்பு ஆகியவற்றை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கி வரும் ‘2k லவ் ஸ்டோரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. புதுமுகம் ஜெகவீர் நாயகனாகவும், மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாகவும் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். வெட்டிங் போட்டோகிராபி எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய 18 வயதில் ஐபிஎல் இல்லை, ஆனால் தற்போதைய வீரர்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். தான் 270 பந்துகளில் 300 ரன்கள் அடித்ததாகவும், ஆனால் இப்போது உள்ள வீரர்கள் அதே பந்துகளை எதிர்கொண்டால் 400 ரன்களை கூட அடிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் அட்டாக் செய்து ஆடும்போது வெற்றி வாய்ப்பு அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ராணுவத்தில் வேலை செய்த 8 இந்தியர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் கொல்லப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கிர்தி வர்தன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 12 பேர் ரஷ்ய ராணுவத்தில் இருந்து விலகி விட்டதாகவும், 63 பேர் விலக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அரசு நிவாரணம் அளிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
*1858 – இலங்கை ரயில் சேவையை ஆளுநர் சேர் என்றி ஜார்ஜ் வார்டு ஆரம்பித்து வைத்தார். *1975 – மொரோக்கோவில் தனியார் விமானம் ஒன்று மலையில் மோதியதில் 188 பேர் உயிரிழந்தனர். *1976 – காந்திகிராம் கிராமியப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.*1990 – கிழக்கு இலங்கையில் காத்தான்குடியில் பள்ளிவாசலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
‘ஜெய் பீம்’ படத்தின் இயக்குநர் என்பதால் ‘வேட்டையன்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். ரஜினியின் மனைவியாக நடிப்பதை விடவும், ஞானவேல் என்ற இயக்குநரின் படத்தில் நடிக்கிறேன் என்ற பொறுப்பு தான் மனதில் ஓடிக்கொண்டிருந்ததாகவும், முதலில் இந்த படத்தில் ரஜினி நடிப்பது தனக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், படம் நிச்சயம் பலருக்கும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.
TNPL 2ஆவது தகுதி சுற்றில் திருப்பூரை வீழ்த்தி திண்டுக்கல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில், தொடக்க வீரராக களமிறங்கிய திண்டுக்கல் கேப்டன் அஸ்வின், 5ஆவது ஓவரில் 15 ரன்களையும், 8ஆவது ஓவரில் 13 ரன்களையும் விளாசி 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். புவனேஷ்வரன் வீசிய 11ஆவது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு வெற்றி இலக்கை எட்டினார். இறுதியாக 30 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார்.
வயநாட்டில் நடந்தது ஒரு சோகம் அல்ல, குற்றச்செயல் முன்னாள் மத்திய பாஜக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நிலச்சரிவிற்கும், அதனை தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும் கேரளாவை 2009 முதல் ஆட்சி செய்து வந்த மாநில அரசுகளே காரணம் எனவும், அங்கு அலட்சியம் நடந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இதற்கு பொறுப்பானவர்களை நாம் மறந்துவிடக்கூடாது என கூறியுள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶குறள் எண்: 11 ▶குறள்: வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. ▶பொருள்: மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
இஸ்ரேலில் வசித்து வரும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளதால் தேவையில்லாத பயணங்களை தவிர்க்குமாறும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், +972-547520711 மற்றும் +972-543278392 ஆகிய தொலைபேசி எண்களிலும் அல்லது cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
52 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் ஆஸி.,-யை இந்தியா வீழ்த்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் அஜித் பால் சிங், ஹாக்கியை எப்படி விளையாட வேண்டும் என ஆஸி.,-க்கு இந்தியா பாடம் கற்பித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நம்மால் எந்த அணியையும் வெல்ல முடியும் எனவும், பதக்கத்தை வெல்லவே பாரிஸ் வந்திருக்கிறோம் என இந்தியா நிரூபித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.