India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் 400 கிலோவிற்கு அதிகமான போதைப்பொருட்களை கடத்திய இந்தியர்களை போலீஸார் கைது செய்தனர். அதன் மதிப்பு ₹80 கோடியாகும். சிம்ரஞ்சித் சிங் (28), குசிம்ரத் சிங் (19) ஆகியோர் பாஸ்டன் நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அமெரிக்க சட்டத்தின் படி, இருவருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
➤வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக நீலகிரி, திண்டுக்கல் உள்பட 8 மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ➤பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில், 1972-க்கு பிறகு ஆஸி.,-யை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. ➤வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 340 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ➤இந்தியா-இலங்கை இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டையில் முடிந்தது.
தருமபுரி அருகே முகமது ஆசிக் கொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித் தனத்தை மிக வன்மையாக கண்டிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆதிக்க சாதியவாதக் கும்பலின் இந்த ‘பித்துநிலை உளவியல்’ தற்போது தலித்துகளிடையேயும் பரவுவதாகவும், மத்திய, மாநில அரசுகள் ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்றவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ₹25 லட்சம் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்பது தற்கொலைக்கு சமம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு கர்நாடகா ஒத்துழைக்காது எனவும், உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு சென்றால் 2 ஆண்டுகள் காலதாமதமாகும் எனவும் கூறியுள்ளார். மேலும், நீதிமன்றத்தில் பேசி தீர்த்துக் கொள்கிறோம் என கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்ட பிறகு, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு கர்நாடகா அழைக்காது என தெரிவித்துள்ளார்.
இன்ஃபோஸிஸ் நிறுவனம் ₹32,403 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வழங்கப்பட்ட நோட்டீஸை கர்நாடகா மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் திரும்ப பெற்றனர். இது குறித்து மத்திய ஜிஎஸ்டி புலனாய்வுத்துறையிடம் அந்நிறுவனம் விளக்கம் அளிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். முன்னதாக 2017 ஜூலை – 2022 மார்ச் வரையில், அந்நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைகளில் இருந்து பெற்ற ஐடி சேவைகளுக்காக வரி செலுத்தவில்லை என நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
▶ஆகஸ்ட் – 3 | ▶ஆடி – 18 ▶கிழமை: சனி ▶திதி: சதுர்தசி ▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 04:45 PM – 05:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:15 AM & 09:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM >▶குளிகை: 06:00 AM – 07:30 AM ▶சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
இலங்கை கடற்படையின் கப்பல் மோதி, தமிழக மீனவர் உயிரிழந்த விவகாரத்தை கொலை வழக்காக பதிவு செய்ய முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 4 பேர் சிறிய படகில் சென்று ஒரு கப்பற்படையிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கூறுவது அபத்தம் எனவும், இலங்கை தமிழ் மீனவர்களை, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக முன்னிறுத்துவது இலங்கையின் சூழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு முழுமையான தீர்வு காண வலியுறுத்தியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் ஒரு அழகான பயணம், ஆனால் கடினமான இழப்பு என பி.வி.சிந்து பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்த இழப்பு தனது வாழ்வில் கடினமான ஒன்றாகும் எனவும், இதை ஏற்றுக் கொள்ள சிறிது காலம் பிடித்தாலும், வாழ்க்கையில் முன்னேறி செல்லும் போது அதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மனதுக்கு ஓய்வு அவசியம் என்பதால், சிறிய இடைவெளிக்கு பின் தொடர்ந்து விளையாடுவேன் என கூறியுள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரியாத உடல்கள் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது மேப்படி கிராமத்தில் 74 அடையாளம் தெரியாத உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இதற்காக கல்பெட்டா, வைத்திரி, முட்டில், கணியம்பட்டா, பாடிஞ்சதாரா, தொண்டர்நாடு, எடவாகா, முள்ளங்கொள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள மயானங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
➤பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கைகள் புனிதமானவை. ➤அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும். ➤எந்தவொரு மகிழ்ச்சியும் மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடாகாது. ➤நல்ல நடத்தையே கல்வியறிவு பெற்றவரின் அடையாளம். ➤எல்லாச் செயல்களும் எண்ணத்தின் விளைவுகளே, எனவே எண்ணங்களே முக்கியமானது. ➤நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதையே நீங்கள் அறுவடை செய்வீர்கள்.
Sorry, no posts matched your criteria.