India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
BSF தலைவர் நிதின் அகர்வால், துணைத் தலைவர் குரானியா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 1989 கேரள கேடர் அதிகாரி அகர்வால், BSF தலைவராக 2023 ஜூனில் பதவியேற்றார். இந்நிலையில் அவரை நீக்கியும், மாநில பணிக்கு அனுப்பியும் நியமனங்களுக்கான கேபினட் குழு ஆணையிட்டுள்ளது. எல்லையில் தீவிரவாதிகளின் தொடர் ஊடுருவல்கள், ஒருங்கிணைப்பின்மையே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
BSF தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் நீக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். BSF தலைவர் நிதின் அகர்வால், துணைத் தலைவர் குரானியா நேற்று திடீர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதன்பின்னணியில், எல்லையில் ஊடுருவல்கள் மற்றும் தீவிரவாதத்தாக்குதல் அதிகரித்ததே காரணமாகக் கூறப்படுகிறது. 2019 புல்வாமா தாக்குதலின்போது கூட, இதுபோல நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வலுவான தரைக்காற்று மணிக்கு 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னை நகர் பகுதிகளில் இடியுடன் லேசான மழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.
ODI கிரிக்கெட் ரன்குவிப்பில் டிராவிட் சாதனையை முறியடிப்பதை 1 ரன்னில் ரோஹித் தவறவிட்டார். இந்திய அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தோர் பட்டியலில் 10,768 ரன்களுடன் டிராவிட் 4ஆவது இடத்தில் உள்ளார். நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் 58 ரன்னுடன் ரோஹித் ஆட்டமிழந்த நிலையில், அந்த சாதனையை முறியடிப்பதை 1 ரன்னில் தவறவிட்டார். மேலும் 2 ரன் சேர்த்திருந்தால் அதை முந்தியிருப்பார்.
ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ மற்றும் ‘டி’ பதவிக்கு மொத்தம் 2006 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கிரேடு ‘சி’-க்கு 18-30, கிரேடு ‘டி’ 18-27 வயதிற்குள் இருக்க வேண்டும். +2 படித்தவர்கள், https://ssc.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 17க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நடப்பு கல்வியாண்டில் பல சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால், இன்று பள்ளிகள் இயங்குமா என கேள்வி எழுந்த நிலையில், ஆடி 18 என்பதால் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி, திருப்பூர், ஈரோடு, வல்வில் ஓரி விழாவையொட்டி நாமக்கல், கோட்டை மாரியம்மன் திருவிழாவையொட்டி சேலத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் தண்டவாள பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளதால், தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் ஆக.5ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை-ராமநாதபுரம் ரயில் 5, 6,8,9,11 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை – குருவாயூர் ரயில் 4,5,8,10 தேதிகளில் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை- செங்கோட்டை ரயில் 8ம் தேதி மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் பிரான்ஸ் மீண்டும் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 13 தங்கத்துடன் சீனா முதலிடத்தில் நீடிக்கிறது. நேற்று 2ம் இடத்தில் இருந்த அமெரிக்கா (9 தங்கம் ) இன்று நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பிரான்ஸ் 2ம் இடத்திற்கும் (11 தங்கம் ), ஆஸ்திரேலியா 3ம் இடத்திற்கும் (11 தங்கம் ) முன்னேறியுள்ளன. இந்தியா 3 வெண்கலப்பதக்கங்களுடன் பட்டியலில் 48வது இடத்தில் உள்ளது.
காப்பீடு ப்ரீமியத்துக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க GST குழுத்தலைவரும், நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமனுக்கு, மேற்குவங்க முதல்வர் மம்தா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், காப்பீடு பிரீமியம் மீது வரி விதிப்பது, மக்கள் விரோத செயல் என்றும், சாமானிய மக்களின் நிதிச்சுமையை அதிகரிக்கும் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆயுள், மருத்துவ காப்பீடு பிரீமியம் மீது 18% GST வரி விதிக்கப்படுகிறது.
கடந்தாண்டு இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் நேற்று சென்னை புழல் சிறைக்கு சென்று, அவரை கைது செய்ததற்கான ஆவணங்களை காட்டி, பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து சென்றனர். தொடர்ந்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.