news

News August 3, 2024

தங்கம் விலை குறைந்தது

image

கடந்த சில நாள்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 குறைந்து ₹51,600க்கும், கிராமுக்கு ₹10 குறைந்து ₹6,450க்கும் விற்பனையாகிறது. ₹54,680ஆக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை, இறக்குமதி வரி குறைப்பால் ₹52,000க்குள் வந்தது. தொடர்ந்து, சவரன் ₹50,000க்குள் வரும் என நடுத்தர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

News August 3, 2024

APPLY: அரசு வங்கிகளில் வேலை

image

அரசு வங்கிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் IBPS அமைப்பு, 896 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளது. இதற்கு கல்வித்தகுதி, பி.இ, பி.டெக்., எல்.எல்.பி., எம்பிஏ, இளங்கலை பட்டப்படிப்பு ஆகும். வயது வரம்பு 20-30 வரை ஆகும். முதல்நிலைத் தேர்வு உள்பட 3 கட்ட தேர்வு நடத்தப்படும். https://www.ibps.in/index.php/specialist-officers/ தளத்தில் 21ஆம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

News August 3, 2024

BSNL வாடிக்கையாளர்களுக்கு ALERT

image

BSNL சிம்களை 4Gக்கு மேம்படுத்துமாறு பயனர்களை, அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 4G அறிமுகமான பின்பும் சிலர் 2G, 3G சேவையை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால், அவர்களுக்கு நெட்வொர்க் பிரச்னை ஏற்படுவதாகவும் கூறியுள்ளது. இதனால், அருகிலுள்ள BSNL அலுவலகம்/சில்லறை விற்பனையாளரிடம் அடையாள சான்றுகளை வழங்கி புதிய சிம்களை இலவசமாக பெறலாம். நீங்கள் பயன்படுத்தும் சிம் வகையை அறிய, 54040க்கு ‘SIM’ என SMS அனுப்பவும்.

News August 3, 2024

1,369 பேருக்கு எலிக்காய்ச்சல்

image

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் 1,369 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் 1,046 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், 2022ஆம் ஆண்டில் 2,612, 2023ஆம் ஆண்டில் 3,002 பேர் பாதிக்கப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தாண்டில் எலிக்காய்ச்சல் கண்டயறிப்பட்ட 1,369 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

News August 3, 2024

திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

image

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக விவசாய அணியை சேர்ந்த சுந்தரபாண்டியனை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். விதிகளை மீறி செயல்பட்டதன் காரணமாக அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவருடன் நிர்வாகிகள் யாரும் தொடர்பில் இருக்கக்கூடாது எனவும் தலைமை உத்தரவிட்டுள்ளது.

News August 3, 2024

ஹமாஸ் தலைவர் உடல் கத்தாரில் அடக்கம்

image

ஈரானில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே உடல் கத்தாரில் அடக்கம் செய்யப்பட்டது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் புதன்கிழமை அவர் கொல்லப்பட்டார். இதையடுத்து அவர் வசித்து வந்த கத்தாருக்கு உடல் கொண்டு வரப்பட்டு, டோஹா அருகே லூசாயில் உள்ள மிகப்பெரிய மசூதியில் வைத்து சிறப்புத்தொழுகை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மரியாதை செலுத்தியபிறகு, உடல் அடக்கம் செய்யப்பட்டது.

News August 3, 2024

டவர் கவரேஜ் விவரத்தை வெளியிட உத்தரவு

image

கவரேஜ் எங்கெங்கு உள்ளன என்பது குறித்த வரைபடத்தை, அக். 1 முதல் இணையதளத்தில் வெளியிடும்படி, பிராட்பேண்ட் சேவை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, TRAI உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி என தனியாக எங்கெங்கு டவர்கள் கவரேஜ் உள்ளன என்பதை பட்டியலிட வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது. தரமான, வெளிப்படையான சேவை கிடைப்பதை உறுதி செய்ய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News August 3, 2024

அம்பானி பயன்படுத்தும் போன் தெரியுமா?

image

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராவார். அவர் என்ன செல்போன் பயன்படுத்துகிறார் என அறிய ஆவல் இருக்கும். அவர் ஆப்பிள் நிறுவன iphone 15 Pro Max போனை பயன்படுத்துகிறார். iphone மாடல் போன்களில் இது மிகவும் அதிக விலை கொண்டதாகும். 1 டிபி சேமிப்பு திறனுள்ள இந்த போன் ₹2 லட்சம் ஆகும். 256 ஜிபி போன் ₹1.50 லட்சம். ஒரு 48 எம்பி, தலா மூன்று 12 எம்பி கேமராக்கள் கொண்டதாகும்.

News August 3, 2024

வயநாடு : பாட்டி, பேத்தியை பாதுகாத்த யானைகள்

image

வயநாடு பெருந்துயரத்திலும், பாட்டி, பேத்தியை யானைகள் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிலச்சரிவில் தப்பிய “நான், பேத்தியுடன் தேயிலைத்தோட்டத்திற்குள் சென்றேன். அங்கு 3 யானைகள் நிற்க, அதிர்ச்சியில் எதுவும் செய்துவிடாதே என கெஞ்சினேன். அப்போது யானை கண்களில் கண்ணீர் வழிய, இருவரும் அதன் காலடியில் அமர்ந்தோம். மீட்புக்குழு வரும்வரை யானைகள் எங்களை பாதுகாத்தன” என சுஜாதா உருக்கமாக கூறினார்.

News August 3, 2024

ஆளுநர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

image

மத்திய அரசையும், மாநில அரசையும் இணைக்கும் பாலமாக ஆளுநர்கள் இருக்க வேண்டுமென்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். டெல்லியில் 2 நாள் ஆளுநர் மாநாடு நடைபெறுகிறது. இதை குடியரசுத் தலைவர் முர்மு தொடங்கி வைத்தார். மாநாட்டில் பேசிய மோடி, ஆளுநர் பதவி மிகவும் முக்கிய பதவி என்றும், அரசியலமைப்பு வரையறைக்கு உட்பட்டு அடித்தட்டு மக்கள் நலனுக்கு ஆளுநர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

error: Content is protected !!