India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் அஜித் சினிமா துறைக்கு வந்து 32 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில், விடாமுயற்சி படக்குழு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், “32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும்….யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி” என்றும் குறிப்பிட்டுள்ளது. அவரது ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில், #32YearsOfAjithism என்ற ஹேஷ் டேக்கையும் டிரெண்ட் செய்து இந்நாளை கொண்டாடி வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க சென்ற மாணவர் அடித்துக்கொடூரமாக கொல்லப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடி பெருக்கையொட்டி, காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராடி வரும் நிலையில், வேடிக்கை பார்ப்பதில் ஏற்பட்ட மோதலில், இக்கொலை அரங்கேறியுள்ளது. தமிழகத்தில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து கொலைகள் நடப்பதால், போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பட்டியலின உள்இடஒதுக்கீடு செல்லும் என, உச்சநீதிமன்றம் வரலாற்றுத்தீர்ப்பை வழங்கியுள்ளதாக, இபிஎஸ் வரவேற்பு அளித்துள்ளார். “2020இல் அதிமுக ஆட்சியில் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்புதான் இதற்கு முக்கிய காரணம். இவ்வழக்கில் அதிமுக எடுத்த முயற்சிகள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. இத்தீர்ப்பை பெறுவதற்கு உறுதியாக இருந்த சட்ட வல்லுநர்களுக்கு நன்றி” என தெரிவித்தார்.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவ- ஓமியோபதி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அரசு, சுயநிதி மருத்துவ, ஓமியோபதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்கு <
பூமியில் இருந்து நிலவு விலகிச்செல்வதாக அமெரிக்காவின் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலை ஆய்வாளர் குழு அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது. பூமியிலிருந்து நிலவு ஆண்டுதோறும் 3.8 செ.மீ. அளவிற்கு விலகிச்செல்கிறது. இதனால் பூமியில் நாட்களின் நேரம் மாறுபடலாம். அதாவது இதே வேகத்தில் நிலவு விலகிச்சென்றால், அடுத்த 20 கோடி ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் என்றும் எச்சரித்துள்ளனர்.
கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயக்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியளிப்பதாக, அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். ” தேசிய கட்சியின் மாநில தலைவர் முதல் சாதாரண மக்கள் வரை யார் உயிருக்கும் உத்தரவாதமில்லை. அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. ஆனால், காவல்துறையை தனது கையில் வைத்திருக்கும் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” என விமர்சித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற அசத்திய மனு பாக்கர், 3ஆவது பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன், இன்று நடைபெறவுள்ள 25 மீ பிஸ்டல் பிரிவில் பங்கேற்கிறார். இதனால், அவரின் பிராண்ட் மதிப்பு 6 முதல் 7 மடங்கு வரை அதிகரித்துள்ளது. அதாவது, தற்போதைய பிராண்ட் மதிப்பு ₹1 கோடியில் இருந்து ₹1.5 கோடியாக உயர்ந்துள்ளது. அவரை ஒப்பந்தம் செய்ய 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அணுகியுள்ளன.
SFIO எனப்படும் தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகம், 43 காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூடுதல் இயக்குனர், இணை இயக்குனர், துணை இயக்குனர் உள்ளிட்ட பதவிகளுக்கு, டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத்தில் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்ய இருப்பதாகவும், விவரங்களுக்கு sfio.gov.in அல்லது www.mcs.gov.in இணையதளத்தை பார்க்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.
வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 388 ஆக உயர்ந்துள்ளது. மீட்புக்குழுவினர் 5ஆவது நாளாக பாதிக்கப்பட்ட இடங்களில், தெர்மல் ஸ்கேனரை பயன்படுத்தி, யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டலாம் என கேரள அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் ஆக.7ஆம் தேதி முதல் காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்கு பள்ளிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணைப்படி, காலை 9.15 -9.30 வரை வழிபாடு, 9.30 – மதியம் 12.25 வரை 3 பாடவேளைகள் நடக்கும். காலை 11 – 11.10 வரை இடைவேளை, பகல் 12.40 – 1.30 வரை மதிய உணவு இடைவேளை விடப்படும். மதியம் 1.30 – மாலை 4.20 வரை பாடவேளைகள், மதியம் 2.50 – 3 மணி வரை இடைவேளை விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.