India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
SONY குழும சேனல்களை TATA PLAY நீக்கியுள்ளது. SONY குழுமத்தில் Sony Entertainment, Sony pix, Sony Max உள்ளிட்ட சேனல்கள் உள்ளன. அதை யாரும் பார்ப்பதில்லை எனக் கூறி, TATA நீக்கியுள்ளது. இதற்கு பதில், வேறு சேனலை தேர்வு செய்யலாம் என TATA தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள SONY குழுமம், வாடிக்கையாளர் தரவை தணிக்கை செய்யுமாறு கோரியதற்கு, பழிவாங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
வயநாட்டில் நிலச்சரிவு நிவாரணப்பணிகளுக்காக, மோகன்லால் ₹3 கோடி நிதி வழங்கியுள்ளார். ராணுவத்தின் கெளரவ லெப்டினன்ட் கர்னலான அவர், நிலச்சரிவு நேரிட்ட சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் ராணுவ உடையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, தனது விஸ்வசாந்தி அறக்கட்டளை மூலம் ₹3 கோடி நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்த அவர், நாடு இதுவரை கண்டிராத பெருந்துயரம் வயநாட்டில் நிகழ்ந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.
வயநாடு நிலச்சரிவில் 25 தமிழர்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை என, அதிகாரிகள் அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளனர். சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி பகுதிக்கு குடிபெயர்ந்தவர்களில் 22 பேரும், தமிழகத்திலிருந்து சென்ற 3 பேரும் மாயமாகியுள்ளனர். மோப்ப நாய் உதவியுடன் அவர்களை தேடும் பணியில் சிறப்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கி வீடுகளை இழந்த 130 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர்.
துருக்கியை சேர்ந்த ரும்ஸியா கெல்கியே உலகின் பெண் ஆவார். 2014இல் 18 வயது நிரம்பியபோது, 7.07 அடி உயரத்தில் இருந்தார். இதன்மூலம் உலகின் உயரமான பெண் என்ற சாதனையை புரிந்தார். வீவர் சின்ட்ரோம் என்ற அரிய நோயே, உயரமாக வளர காரணமாகக் கூறப்படும் நிலையில், அதிக தூரம் நடக்க முடியாமல் சிரமப்படும் அவர் வால்கருடன் நடந்துசெல்கிறார். அதேபோல், பிறக்கும்போதே அவர் 5.9 கிலோ எடை இருந்துள்ளார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஹரியானா DSPயுமான ஜோகிந்தர் ஷர்மா, தோனியை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு குறித்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த அவர், தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி மஹி என்றும், 12 ஆண்டுகளுக்குப்பிறகு நடந்த இச்சந்திப்பு வித்தியாசமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 2007 T20 WC-ஐ இந்தியாவுக்கு பெற்றுத்தந்ததில் இவர்கள் இருவரும் முக்கியப்பங்கு வகித்தனர்.
மயிலாடுதுறையில் தங்கள் ஊருக்கு தனி டாஸ்மாக் கடை கேட்டு, முதல்வர் தனிப்பிரிவில் மகளுடன் மது பிரியர் மனு கொடுத்ததை பார்த்து, அதிகாரிகள் ஆடிப்போயினர். குடியால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதாகவும், குறிப்பாக, தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பல இடங்களில் டாஸ்மாக் வேண்டாம் என மக்கள் போராடும் நிலையில், மதுபிரியரின் இந்த செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களில், வெயிலுக்கு 374 பேர் பலியாகியுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இதனை தெரிவித்த சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல், சுமார் 67,000 பேர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 52 பேர் இறந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
தனிநபர் வருமானத்தில் அமெரிக்காவின் 4இல் 1 பங்கை இந்தியா நெருங்கவே, இன்னும் 75 ஆண்டுகளாகும் என உலக வங்கி (WB) தெரிவித்துள்ளது. “உலக நாடுகளின் வளர்ச்சி 2024” என்ற பெயரில் அந்த வங்கி தயாரித்துள்ள அறிக்கையில், அமெரிக்காவின் 4இல் ஒரு பகுதியை நெருங்க சீனாவுக்கு 10 ஆண்டுகளாகும் என்றும், இந்தோனேசியா நாட்டுக்கு 70 ஆண்டுகளும், இந்தியாவுக்கு 75 ஆண்டுகளும் பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசு பஸ்களை வாடகைக்கு எடுப்பதற்கான மொபைல் எண்களை, விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அதிநவீன சொகுசு ஏசி பஸ்கள், படுக்கை வசதி பஸ்களை இயக்கி வருகிறது. இந்த பஸ்களை சுற்றுலா உள்ளிட்டவற்றுக்கு வாடகைக்கு, போக்குவரத்துக்கழகம் அளிக்கிறது. இதற்கு 9445014402, 9445014424, 94450 14463 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
சுதந்திரப்போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தீரன் சின்னமலையின் 219ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மரியாதை செலுத்தினர்.
Sorry, no posts matched your criteria.