India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கமல், ஷங்கர் கூட்டணியில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான படம் ‘இந்தியன் 2’. வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி NETFLIX ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக இருப்பதாக, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1996ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் தொடர்ச்சியாக, 28 ஆண்டுகளுக்குப்பின், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த இப்படம், எதிர்மறை விமர்சனங்களை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் தோல்வியடைந்தது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 24 தமிழர்கள் உயிரிழந்ததாக, சற்றுமுன் அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. வயநாட்டிற்கு பணி நிமித்தமாக சென்ற மூவர் உட்பட 24 பேர், இந்த இயற்கைச்சீற்றத்திற்கு பலியாகியுள்ளனர். மேலும், 25 தமிழர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
149 மொழிகளை தாய்மொழியாக கொண்ட மக்கள், தமிழகத்தில் வசிக்கின்றனர். 2011ஆம் ஆண்டு தமிழ் மொழி அட்லஸ் தரவுகளின் படி, தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை 6.37 கோடி (91.07% ). அதற்கு அடுத்து, தெலுங்கு 42 லட்சம் (6.05%), கன்னட மொழியை 12.8 லட்சம் (1.84% ), மலையாளம் 7.2 லட்சம் (1.04%), இந்தியை 3.9 லட்சம் பேர் பேசுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உங்களுக்கு எத்தனை மொழி பேசத் தெரியும்? என கமெண்ட் செய்யுங்க.
இந்தியாவில் பேசப்படும் 17 திராவிட மொழிகளில், 14 மொழிகள் தமிழகத்தில் பேசப்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மற்றும் குருக்/ ஓரான் போன்ற 6 முக்கிய திராவிட மொழிகள் பேசப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல், குடகு, கோண்டி, கோண்டு, கிஷான், கோண்டா, குய், மால்டோ, பர்ஜி ஆகிய திராவிட மொழிகளும் பேசப்பட்டு வருகின்றன.
சூர்யாவை வைத்து புறநானூறு படத்தை இயக்க, சுதா கொங்கரா முதலில் திட்டமிட்டிருந்தார். பிறகு அது கைவிடப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன் அதில் நடிக்கவுள்ளார். புறநானூறு படத்தின் கதையை கேட்காமலேயே, சுதா கொங்கராவுக்கு சிவகார்த்திகேயன் 6 மாதம் கால்ஷீட் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. புறநானூறு படத்தை சுதா கொங்கராவின் மீனாட்சி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
வயநாட்டில் மீட்புப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 206 பேரை இன்னும் காணவில்லை என கூறிய அவர், சாலியர் ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், இதுவரை 148 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 81 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் அறிவித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடும் போட்டியில், தங்கம் வெல்லும் வாய்ப்பை மனு பார்க்கர் தவற விட்டார். பிஸ்டல் சுடும் போட்டியில் ஏற்கெனவே 2 வெண்கலம் வென்றிருந்தார். இந்நிலையில், இன்று அவர் தங்கம் வென்று புதிய வரலாறு படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில், 4ஆவது இடமே வந்தார். இதனால், 3ஆவது பதக்கம் வெல்லும் வாய்ப்பையும், தங்கப்பதக்கத்தையும் தவறவிட்டார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 25 மீட்டர் பிஸ்டல் சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பார்க்கர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இந்தப் போட்டியில் அவர் இன்று பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதிமூச்சு வரை போராடிய மனு பார்க்கரால், 4ஆவது இடமே வர முடிந்தது. இதனால் மனு பார்க்கர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
விஜய், தான் ஆசையாக வாங்கிய ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காரை விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2012ல் பிரிட்டனிலிருந்து இதனை இறக்குமதி செய்த அவர், நுழைவுவரி செலுத்த மறுத்து நீதிமன்றத்தை நாடியிருந்தார். பல கார்களை வைத்திருந்தாலும், இந்த கார் மீது அவர் தனிப்பிரியம் வைத்திருந்தார். அப்படியிருக்க, சென்னையில் பழைய கார் விற்பனை ஷோரூமில் இந்த கார் ₹2.6 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 8 அதிவிரைவுச்சாலை வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன. ரூ.50,000 கோடியில் நிர்மாணிக்கப்படும் இந்த வழித்தடங்களுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 936 கி.மீ. தூரத்திற்கு, 4 வழி, 5 வழி, 6 வழிச்சாலைகளாக இவை அமைக்கப்படுகின்றன. இதன் மூலம், சரக்கு போக்குவரத்து, முக்கிய நகரங்களுக்கு இடையேயான இணைப்பு மேம்படும்.
Sorry, no posts matched your criteria.