India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘வீர தீர சூரன்’ படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ‘சேதுபதி’, ‘சித்தா’ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர் அருண்குமார். இவர் தற்போது விக்ரமின் 62ஆவது படமான ‘வீர தீர சூரன்’ படத்தை இயக்கி வருகிறார். எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தியாவில் வேலைதேட உதவும் இணையதளங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை தெரிந்து கொள்ளலாம்.
*https://www.naukri.com/
*https://www.foundit.in/
*https://www.shine.com/
*https://in.indeed.com/
*https://www.linkedin.com/jobs/
*https://www.freshersworld.com/
*https://www.timesjobs.com/
தமிழகத்தில் காங்கிரஸ் நன்றாக இருக்க, திமுகவுடன் கூட்டணி சேர்ந்திருக்க வேண்டுமென, ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுவது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், காங்கிரஸ் நன்றாக இருக்க வேண்டுமெனில், அதை திமுகவின் துணையோடுதான் செய்ய முடியும் என பதிலளித்தார். தாம் தூக்கிப்பிடிக்க வேண்டிய நிலையில் திமுக இல்லை என்றும் தெரிவித்தார்.
கோவை, நீலகிரி, காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில், இந்திய வீராங்கனை பஜன் கவுர் தோல்வியடைந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தோனேஷிய வீராங்கனை தியானந்தா சொய்ருனிசாவை எதிர்கொண்ட அவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், 6-5 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவியுள்ளார்.
ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதாக யூடியூபர் இர்பானுக்கு போக்குவரத்து போலீசார் ₹1,000 அபராதம் விதித்துள்ளனர். அத்துடன், சரியான நம்பர் பிளேட் இல்லாததற்கும் ₹500 அபராதம் விதித்துள்ளனர். அண்மையில், யூடியூப் பேட்டிக்காக நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதாக அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது, நெட்டிசன்கள் இர்பான் வீடியோவை பகிர்ந்து, அவருக்கு மட்டும் இச்சட்டம் பொருந்தாதா? என வினவினர்.
ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்லும் ரகசியத்தை ஆண்டவரே அறிவார் என, ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி, சென்னையிலுள்ள சிலைக்கு இன்று மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, “தொழிற்சாலைகளை ஈர்க்க வெளிநாடு செல்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஸ்டாலின் பயணத்தின் உண்மையான நோக்கமும், மறைமுக ரகசியமும் ஆண்டவருக்கே வெளிச்சம்” என்றார்.
தமிழகத்தில் சௌராஷ்ட்ர மொழி 2,38,556 பேர், படுக மொழியை 1,32,102 பேர் பேசுகின்றனர். மணிப்பூரி, திபெத்தன், லுஷாய் (அ) மிசோ, தடோ, போடோ, திமாஷா போன்ற 6 திபத்தோ – பர்மிய மொழிகளை 1,972 பேர் தமிழகத்தில் பேசி வருகின்றனர். இவற்றில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் மணிப்பூரி, போடோ மட்டுமே. மேலும், மிக குறைவாக பேசும் மொழிகளில் சந்தாலி மொழியை 156 நபர்கள் பேசுகின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனி வீராங்கனை மிக்சல் க்ரோப்பனை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அவர் அசத்தியுள்ளார். தொடர்ந்து, மகளிர் ஒற்றையர் வில்வித்தை காலிறுதி போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.
GOOGLE PAY உள்ளிட்ட யுபிஐயில் பரிவர்த்தனை செய்வோரிடம், குயிஷிங் எனும் புதிய முறையில் பணம் திருடப்படுவதும், இதற்கு க்யூ.ஆர்.கோடு பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, மர்ம நபர் அனுப்பும் க்யூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்ததும், சம்பந்தமில்லாத இணையதள பக்கத்திற்கு செல்வதும், பிறகு வங்கிப்பணம் திருடுபோவதும் உறுதியாகியுள்ளது. எனவே எச்சரிக்கையுடன் இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.