India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். முன்னதாக, சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 26ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில், $3.47 பில்லியன் குறைந்து, $667.38 பில்லியனாக சரிந்தது. அதற்கு முந்தைய வாரத்தில் $4 பில்லியன் உயர்ந்து, $670.85 பில்லியனாக வரலாற்று உச்சத்தை எட்டியிருந்தது. தங்கம் இருப்பு $2.29 பில்லியன் குறைந்து, $57.69 பில்லியனாக சரிந்தது. SDR பொறுத்தமட்டில், $5 மில்லியன் குறைந்து, $18.20 பில்லியனாக சரிந்தது.
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் முன்பு, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உதயநிதி துணை முதல்வரானால் எதிர்க்கட்சிகள் விமர்சனத்துக்கு ஆளாக நேரிடலாம் என முதல்வர் கருதுவதாகவும், இதனால் துரைமுருகன் மற்றும் உதயநிதி ஆகியோரை துணை முதல்வராக்க ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்படி இரவு 7 மணி வரை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கோவை, தேனி, திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
விராட் கோலி உடனான நட்பு குறித்து முன்னாள் இந்திய கேப்டன் தோனி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், “நாங்கள் இருவரும் இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடியுள்ளோம் என்ற அவர், நாங்கள் ஒன்றாக பேட்டிங் செய்யும்போது வேடிக்கையாக இருக்கும். நாங்கள் பெரும்பாலும் 2 மற்றும் 3 ரன்கள் எடுத்துக்கொள்வோம்” என்றார். மேலும், வெளியே சந்தித்துக்கொள்வது அரிது என்றாலும், சந்திக்கும்போதெல்லாம் அதிகம் பேசுவோம் என்றார்.
இடுக்கியைச் சேர்ந்த பாவனா சஜின் என்பவர், வயநாடு நிலச்சரிவில் தாயை இழந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்ட தயார் என சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதையடுத்து வயநாட்டில் இருந்து அவரை தொடர்பு கொண்டவர்கள் உதவி கோரியுள்ளனர். 350km பயணித்து நிவாரண முகாமை அடைந்தபின் அவரை தொடர்புகொண்டவர்கள் அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை. இருப்பினும் பிறருக்கு உதவ இங்கேயே இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் பலியானதாக, உயிருடன் உள்ள இளைஞர் தீரஜ் என்பவர் படத்தை அங்குள்ளவர்கள் வைரலாக்கி வருகின்றனர். புதைந்த வீட்டில் எடுக்கப்பட்ட படத்தில் தீரஜ், 2 சகோதரிகளை கட்டியணைத்தபடி நிற்பார். இதை படம் எடுத்து சிலர் வைரலாக்க அதை கண்டு, தீரஜ்ஜை அவரது உறவினர்கள் தொடர்பு கொண்டனர். இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த அவர், தாமும், தனது தாயும் தப்பிவிட்டதாக கூறியுள்ளார்.
திமுக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து, ஆகஸ்ட் 6ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், தமிழக மீனவர்களின் நலனை முன்வைத்தும், மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. 2 நாள்களுக்கு முன், இலங்கை கடற்படை படகு மோதியதில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் அறிவிப்புகளை X பக்கங்கள் மூலமே பகிர்கின்றனர். அவர்கள் X பக்கங்களை காணலாம்.
* மோடி – https://x.com/narendramodi
*ராகுல் காந்தி – https://x.com/RahulGandhi
*ஸ்டாலின் – https://x.com/mkstalin
*இபிஎஸ் – https://x.com/epstamilnadu
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் 0.89% அதிகரித்து, ₹17,035.16 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு ₹16,884.29 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருவாய் 16.2% அதிகரித்து, ₹95,975.45 கோடியில் இருந்து ₹1,11,535.98 கோடியாக உயர்ந்துள்ளது. மோசமான கடன்கள் 2.21%ஆக குறைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.