news

News August 3, 2024

நாட்டு மக்களுக்கு அமித் ஷா அழைப்பு

image

மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில், தேசியக் கொடியை ஏற்றுமாறு, அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 78ஆவது சுதந்திர தினம், வரும் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மூவர்ணக் கொடியை, ஆகஸ்ட் 9-15 வரை அனைவரது வீடுகளிலும் ஏற்றுமாறு அழைப்பு விடுத்துள்ள அவர், தேசியக் கொடி முன்பு செல்ஃபி எடுத்து அதனை <>இந்த <<>>இணையதளத்தில் பதிவேற்றுமாறு வலியுறுத்தியுள்ளார்.

News August 3, 2024

அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த GBU படக்குழு

image

நடிகர் அஜித் சினிமா துறைக்கு வந்து 32 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில், இன்று காலை ‘விடாமுயற்சி’ படக்குழு வாழ்த்து தெரிவித்து போஸ்டரை வெளியிட்டிருந்தது. தற்போது ‘குட் பேட் அக்லி’ படக்குழுவும் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், “32 ஆண்டுகள் மன உறுதி மற்றும் ஒழுக்கம்” என குறிப்பிட்டு மேலும் பல வெற்றிகள் பெற GBU படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

News August 3, 2024

ஆக.20 முதல் பாஜக உண்ணாவிரதம்

image

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்தி, ஆக.20 முதல் பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். இத்திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தேதியை மாற்றி மாற்றி குறிப்பிட்டுவருவதாக குற்றஞ்சாட்டிய அவர், ஆக.20 முதல் நடைபெறும் போராட்டத்தில் பாஜக விவசாய அணி தலைவர்களுடன் தானும் பங்கேற்பதாக உள்ளதாகக் கூறியுள்ளார்.

News August 3, 2024

ராகுல் டிராவிட் மீது கவனம் செலுத்தும் இங்கிலாந்து!

image

டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு, முன்னாள் பயிற்சியாளரான டிராவிட்டிற்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. புதிய ஒயிட்பால் பயிற்சியாளரைத் தேடும் இங்கிலாந்து வாரியத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் இயான் மோர்கன், டிராவிட், மெக்கல்லம் உள்பட நால்வரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளார். இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 பயிற்சியாளராக இருந்த மேத்யூ மோட் சமீபத்தில் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

News August 3, 2024

தீபிகா குமாரி அதிர்ச்சி தோல்வி

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் வில்வித்தை, காலிறுதிப் போட்டியின் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, கொரிய வீராங்கனை நாம் சு ஹியோனை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆட்ட நேர முடிவில், தீபிகா குமாரி 4-6 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். இதனால், அரையிறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

News August 3, 2024

உலகளவில் பிரபலமான தலைவர் மோடி: ஆய்வறிக்கை

image

உலகளவில் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். உலக தலைவர்களின் முக்கிய முடிவுகளை கண்காணிக்கும் மார்னிங் கன்சல்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், 69% மதிப்பீடுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் 63% மதிப்பீடுடன் 2ஆவது இடத்திலும், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே 60% மதிப்பீடுடன் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

News August 3, 2024

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 3,063ஆக உயர்வு

image

தமிழக வனப்பகுதிகளில் உள்ள யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2,761ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை தற்போது, 3,063ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. யானைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

News August 3, 2024

என்னை கண்டு நடுவர்களே ஆச்சரியப்படுவர்: யூசுஃப்

image

தான் ஒரு யதார்த்த வீரர் என பாரிஸ் ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், Casula ஆக வெள்ளிப்பதக்கம் வென்று கவனம் ஈர்த்த துருக்கி வீரர் யூசுஃப் டெயிக் கூறியுள்ளார். தனக்கு எப்போதும் பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்பட்டதில்லை என்றும், தான் துப்பாக்கியை கையாளும் விதம் உலகிலேயே மிகவும் அரிதானது எனவும் தெரிவித்துள்ளார். தான் கண்களை திறந்து கொண்டு சுடுவதை கண்டு நடுவர்களே ஆச்சரியப்படுவதாக கூறினார்.

News August 3, 2024

தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 5 ஆண்டு பணி நீட்டிப்பு

image

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 1,282 தற்காலிக ஆசிரியர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2011-12 கல்வியாண்டில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1,282 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இந்த தற்காலிக பணிக்கான தொடர் நீட்டிப்பு காலம் 2022 டிசம்பருடன் முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

News August 3, 2024

உணவு உபரி நாடானது இந்தியா: பிரதமர் மோடி

image

உணவு உபரி நாடாக இந்தியா மாறியுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். விவசாய நிபுணர்களின் சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், நாட்டின் பொருளாதார கொள்கைகளின் மையமாக விவசாயம் இருக்கிறது என்றார். மேலும் பால், பருப்பு வகைகள், மசாலா பொருள்கள் உற்பத்தியில் உலகளவில் முதல் நாடாகவும், உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், சர்க்கரை உற்பத்தியில் 2வது நாடாகவும் இந்திய திகழ்வதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!