news

News August 3, 2024

முதலீட்டாளர்களே கவனமாக செயல்படுங்கள்!

image

உலகளவில் நிகழும் பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலையால், வரும் வாரம் இந்திய பங்குச்சந்தை இறக்கத்தை சந்திக்க நேரிடலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்களின் முதல் காலாண்டு முடிவுகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளன. இதனால், நிஃப்டி 22,000 வரை கூட சரியலாம் என எச்சரிக்கின்றனர். எனவே, முதலீட்டாளர்கள் கவனமாக முதலீடுகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

News August 3, 2024

சர்க்கரை குறித்த 3 கட்டுக்கதைகள்..!

image

சர்க்கரை குறித்த கட்டுக்கதைகள் மக்களிடத்தில் நிறைந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். *சர்க்கரையை உட்கொள்வதால் நீரிழிவு நோய் ஏற்படும் என்பது பொதுவான கட்டுக்கதை. *செயற்கை இனிப்புகள் ஆரோக்கியமானது என்பதும் பொய் என்கிறார்கள். இவை நீரிழிவு மற்றும் புற்றுநோயை உண்டாக்கலாம். *உடல் எடையை குறைக்க சிலர் சர்க்கரையை தவிக்கிறார்கள். ஆனால், சர்க்கரையை போதுமான அளவில் சாப்பிடாததும் பிரச்னை என்கிறார்கள்.

News August 3, 2024

முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் நன்றி

image

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ₹5 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இதற்கான காசோலையை அமைச்சர் எ.வ.வேலு, கேரள முதல்வரிடம் நேரில் வழங்கினார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு X தளத்தில் நன்றி தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், மக்களின் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புக்கு உங்கள் ஆதரவு பெரிதும் உதவும் என குறிப்பிட்டுள்ளார்.

News August 3, 2024

14 மாவட்டங்களில் மழை பெய்யும்

image

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகையில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 3, 2024

ALERT: கனமழை கொட்டி வருகிறது

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அந்த வகையில் கோவை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கொடைக்கானல் (திண்டுக்கல்), சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், வெப்பம் தணிந்ததாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 3, 2024

வயநாட்டில் 3 நாள்கள் இலவச சேவை: BSNL

image

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில், 3 நாள்களுக்கு இலவச சேவை வழங்குவதாக BSNL அறிவித்துள்ளது. கடந்த 29ஆம் தேதி நிகழ்ந்த பேரழிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அங்கு நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. இந்நிலையில், வயநாடு மாவட்டம், நிலம்பூர் தாலுகாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வரம்பற்ற இலவச அழைப்பு மற்றும் டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படும் என BSNL தெரிவித்துள்ளது.

News August 3, 2024

வினோதமான முறையில் உயிரிழந்த ராஜ நாகம்

image

மத்தியப் பிரதேச மாநிலம் பந்தெல்கண்ட் பகுதியில் சாகர் குராய் என்ற பாம்புப்பிடி வீரரை கடித்த ராஜநாகம் உயிரிழந்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜ நாகத்தை சாகர் பிடிக்க முயன்றபோது, அது அவரை 2 முறை கடித்தது. இருந்தும் அதனை பிடித்து பிளாஸ்டிக் பெட்டியில் அவர் அடைத்துள்ளார். அதனுள், காற்றோட்டம் இல்லாததால், ஆக்ஸிஜன் இல்லாமல் பாம்பு உயிரிழந்தது.

News August 3, 2024

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஓபனர்கள்

image

சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலைக் காணலாம். 19,298- ஜெயசூர்யா (இலங்கை), 18,867- கிறிஸ் கெயில் (வெ.இண்டீஸ்), 18,744- டேவிட் வார்னர் (ஆஸி), 16,950- கிரீம் ஸ்மித் (தெ.ஆ), 16,120- ஹெய்ன்ஸ் (வெ.இண்டீஸ்), 16,119- சேவாக் (இந்தியா), 15,335- சச்சின் (இந்தியா), 15,210- தமீம் இக்பால் (வ.தேசம்), 15,110- குக் (இங்கி.,), 15,039- ரோஹித் (இந்தியா)

News August 3, 2024

பயங்கரவாதிகள் தாக்கியதில் 32 பேர் பலி

image

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில், ஹோட்டல் ஒன்றில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஹோட்டலுக்குள் புகுந்த அல் ஷபாப், ஐஎஸ் பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். அங்கிருந்த பலரை பணய கைதியாகவும் பிடித்து வைத்திருந்தனர். பல மணி நேர போராட்டத்திற்குப் பின் பணய கைதிகள் அனைவரையும் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

News August 3, 2024

SBI வங்கியில் 1,040 வேலைவாய்ப்பு

image

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான SBI வங்கி, 1,040 “Specialist Cadre Officers” அதிகாரிகள் காலிப் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்கீழ், சென்ட்ரல் ரிசர்ச் குழு, ரிலேசன்ஷிப் மேனேஜர், இன்வெஸ்ட்மென்ட் ஸ்பெஷலிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விருப்பம் உள்ளோர், SBI வங்கியின் <>sbi.co.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆகஸ்ட் 8 கடைசி நாளாகும்.

error: Content is protected !!