India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தங்கம் விலை ஏற்ற, இறக்கம் காரணமாக நகை வாங்கும் பழக்கம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இளம் தலைமுறையினர், தங்கத்தை முதலீடு நோக்கத்திலேயே அணுகுவதால் காயின், தங்கக் கட்டி வாங்குவதாக கூறியுள்ளனர். அதனை பணத் தேவையின் போது சிறிதளவும் மதிப்பு குறையாமல் விற்பனை செய்யலாம். ஆனாலும், இப்படி செய்வதால் நகை செய்யும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
வரதட்சணையாக ₹50 லட்சமும், 100 பவுன் நகையும் பெற்றுக்கொண்டு கேரளாவின் ஷாகா குமாரியை (52) அருண் (27) 2020-ல் திருமணம் செய்கிறார். கல்யாண போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிடும் ஷாகா, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அருணை வற்புறுத்துகிறார். ஆனால், ந்த இரண்டுலுமே அருணுக்கு விருப்பமில்லை. இதனால், ஷாகாவை கரண்ட் ஷாக் வைத்து கொலை செய்த நிலையில், அவருக்கு தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு எதிரான போலி சான்றிதழ் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிட, போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்தார் என பாஜகவை சேர்ந்த திவாகர் நாத் திரிபாதி என்பவர் 2021-ல் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு பல்வேறு கட்டங்களை கடந்து வந்துள்ள நிலையில், மவுரியாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை மே 6-ல் அலகாபாத் ஐகோர்ட்டில் நடைபெறவுள்ளது.
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் ED சம்மன் அளித்திருந்த நிலையில், நடிகர் மகேஷ் பாபு ஆஜராகவில்லை. பணமோசடி தொடர்பாக, சாய் சூர்யா, சுரானா நிறுவனங்களில் ED சோதனை மேற்கொண்டது. அப்போது, மகேஷ் பாபுவின் வங்கிக் கணக்குக்கு அவற்றில் இருந்து ₹11.4 கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில், வேறொரு நாளில் விசாரணைக்கு ஆஜராக அனுமதி கோரி மகேஷ் பாபு ED-க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
பாக். மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவதற்கான நேரம் இதுவல்ல என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் வந்துவிட்டது என பதிவிட்டுள்ளார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, ஊடகங்களில் அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த விவாதங்களுக்கு பதிலாக, பாஜக ஆதாயம் அடையும்படியான செய்திகள் வெளியாகின்றன சாடியுள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். செந்தில் பாலாஜியின் வசம் இருந்த மின்சாரத்துறை சிவசங்கருக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. பொன்முடி வசமிருந்த வனத்துறை ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கேது பகவான், சிம்ம ராசிக்குள் நுழைவதால் 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 1)மேஷம்: பணியிடத்தில் வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும். வியாபாரிகள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். 2) கும்பம்: சில பணிகளில் தாமதம் ஏற்படலாம். பொருளாதார ரீதியாக செலவுகள் அதிகரிக்கலாம். 3) சிம்மம்: தனிப்பட்ட, தொழில் வாழ்க்கையில் பிரச்னை அதிகரிக்கும். மன ஆரோக்கியம் ஏற்ற இறக்கமாக இருக்குமாம்.
தமிழகம் முழுவதும் உள்ள குடும்பநல நீதிமன்றங்களுக்கு 15 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் வழக்கறிஞர்கள் சார்பில் கோடை விடுமுறை அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்ற சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அல்லி, மே 1 முதல் 15-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் உள்ள குடும்பநல கோர்ட்டுகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளார். இந்தத் தகவலை பகிருங்க.
பாகிஸ்தானை மேலும் 4 துண்டுகளாக உடைப்பதே நீண்டகால தீர்வென சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இதுகுறித்து X தளத்தில், பாக்.ஐ, பலுசிஸ்தான், சிந்து, பக்துனிஸ்தான், மேற்கு பஞ்சாப் என 4 நாடுகளாக உடைக்க வேண்டும். அதில், மேற்கு பஞ்சாப் தவிர மற்ற 3-யையும் இந்தியா சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்க வேண்டும்; இந்த 4 நாடுகளுக்கும் இந்திய ராணுவம் பாதுகாப்பளிக்க தயாராக இருக்க வேண்டுமென தெரிவித்தார்.
தமிழின் ட்ரெண்டிங் நடிகை கயாது லோஹர், சிம்புவின் 49-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அசாமில் பிறந்த இவர், ’டிராகன்’ படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்திருக்கிறார். இதற்கு முன் அவர் தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சிம்புவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியிருப்பது அவரது திரை வாழ்வில் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.