India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென OPS வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 80% பேர் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிவருவதாகக் கூறிய அவர், அந்த ஆசிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு அரசுப்பணியை திமுக அரசு உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
MBC 20% இடஒதுக்கீட்டில்தான் வன்னியர்களுக்கு அதிக பயன் கிடைப்பதாக RTI சட்டத்தின் கீழ் வெளியான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மாணவர் சேர்க்கை & அரசுப் பணி நியமனத்தில் வன்னியர் பெற்ற இட ஒதுக்கீட்டின் விவரம் *மருத்துவ பட்ட மேற்படிப்பு: 1,363இல் 940 பேர் (13%) BDS : 933இல் 437 பேர் (11%) *MDS: 137இல் 66 பேர் (11%) *குரூப்-4 தேர்வு: 26,784இல் 5,215 பேர் (19%) *குரூப்-2 தேர்வு: 366இல் 270 பேர் (11%).
மக்களின் வரவேற்பை பெற்று வரும் நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ‘ராயன்’ திரைப்படத்திற்கு ஆஸ்கார் அகாடமியின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது, ஆஸ்கார் விருதை வழங்கும் அகாடமியான ‘மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ்’ நிறுவனத்தின் நூலகத்தில் வைக்க, இப்படத்தின் திரைக்கதை புத்தகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை ராயன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
▶ஆகஸ்ட் – 13 ▶ ஆடி – 29 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: அமாவாசை ▶சந்திராஷ்டமம்: மூலம் ▶முகூர்த்தம்: இல்லை ▶யோகம்: சித்த யோகம் ▶பிறை: தேய்பிறை ▶ நட்சத்திரம்: பூரம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
ஸ்பின்னர்களை அதிரடியாக எதிர்கொள்ளக்கூடிய ஷிவம் துபேவை SL-க்கு எதிரான முதல் ODI போட்டியில் 8ஆவதாக களமிறக்கியது சரியான முடிவல்ல என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். 4ஆவது இடத்தில் களமிறங்கிய இடதுகை பேட்ஸ்மேன் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக துபே களமிறக்கப்பட்டிருக்க வேண்டுமெனக் கூறிய அவர், இந்த விஷயத்தில் கவுதம் கம்பீர் ஏதோ வித்தியாசமாக சிந்திப்பதாகத் தெரிகிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உறவுகள் பலவற்றிலும் மாசில்லாதது, எதையும் எதிர்பார்க்காதது, அளவின்றி அன்பு செய்யக்கூடியது, நம்பிக்கை கொடுப்பது, இன்பத்திலும், துன்பத்திலும் உடன் இருப்பது எது? அது தான் சாதி, மத, இன வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்ட உன்னதமான நட்பு எனும் உறவு. அந்த நட்பை கொண்டாடும் இந்த நாளில் நண்பர்களுடான நட்பை பலப்படுத்துவோம்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இன்று நடைபெறும் கோல்ப், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, பேட்மிண்டன், பாய்மரப்படகு, ஹாக்கி ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் லக்ஷயா சென் களமிறங்கவுள்ளார். பெண்களுக்கான குத்துச்சண்டை 75 கிலோ எடைப் பிரிவில் காலிறுதியில் இந்தியாவின் லவ்லினா சீனாவின் லி கியானோடு மோதவுள்ளார். <<-se>>#Olympics<<>>
‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் பட்டித்தொட்டி எங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இளைஞர்களைக் குத்தாட்டம் போட வைத்திருக்கும் இப்பாடலை எழுதிய வண்ணாரப்பேட்டை ‘கானா’ காதர். பெயிண்டரான அவரது வாழ்க்கையை இந்தப் பாடலின் வெற்றி ‘மஜா’வாங்கியுள்ளது. அடுத்ததாக அவர் மூன்று பெரிய படங்களுக்கு பாட்டு எழுதும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உணவு, சூழல், பொருளாதாரம் காரணமாக சில இளைஞர்கள் இளமையிலேயே வாத நோய்களால் பாதிக்கப்பட்டு, முதியவர்கள்போல தோற்றமளிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ‘காயகற்ப மூலிகை’ என சித்த மருத்துவம் கொண்டாடும் மூக்கிரட்டையை நீரில் போட்டு லேசாகக் கொதிக்க வைத்து, குடிநீராக 48 நாட்கள் குடித்துவந்தால், ரத்தத்தில் உள்ள யூரியா, கிரியேட்டினின் அளவு குறைவதோடு தேகம் பொலிவும், புத்துணர்ச்சியும் பெரும்.
இந்தியாவின் நீதிமன்ற நடைமுறைகளால் ஏழை எளிய மக்கள் மனம் தளர்ந்துவிடுவதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த சிறப்பு லோக் அதாலத் தொடக்க நிகழ்வில் பேசிய அவர், பொதுமக்களின் வீடுகளுக்கே நீதியை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே லோக் அதாலத்தின் நோக்கம். பிரச்னைகளுக்கான தீர்வையே மக்கள் தேடுகின்றனர். அதனை தாமதிக்காமல் வழங்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.