India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆளுநர்கள் செயலற்றவர்களாக இருக்கின்றனர் என, உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா தெரிவித்துள்ளார். பெங்களுருவில் தேசிய சட்டப்பல்கலைக்கழக கருத்தரங்கில் பேசிய அவர், அரசியலமைப்பின் படி ஆளுநர்கள் செயல்பட வேண்டுமே தவிர, ஒருசார்பாக செயல்படக்கூடாது என்றார். ஆளுநர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவாவது கவலை அளிப்பதாக தெரிவித்த அவர், இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
‘வாழை’ படத்தின் 3ஆவது பாடலான ‘ஒத்தச்சட்டி சோறு’ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. மாரி செல்வராஜ் இந்த படத்தை தற்போது இயக்கி, தயாரித்து வருகிறார். நடிகர்கள் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற 23ஆம் தேதி ‘வாழை’ திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழக பாஜக தலைவராக வானதி சீனிவாசனை நியமிக்க, அக்கட்சியின் தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அண்ணாமலை படிப்புக்காக வெளிநாடு செல்ல உள்ளதால், பொறுப்புத்தலைவர் நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது. இதனிடையே, நயினார் நாகேந்திரன் பெயரும் தலைவர் பதவிக்கு அடிபட்டது. இதனால், தலைவர் மாற்றம் என்பது உறுதியாகிவிட்டதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இன்னும் சற்றுநேரத்தில் இந்திய அணி பந்துவீச உள்ளது. முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், எஞ்சிய இரு போட்டியிலும் வெற்றிபெறும் அணியே தொடரை வெல்லும் என்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக தீவிரமாக போராடும். இன்று எந்த அணி வெற்றிபெறும் என கமெண்ட் பண்ணுங்க?
2029ஆம் ஆண்டும் பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்று பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். சண்டிகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், மத்திய பாஜக கூட்டணி அரசு முழு காலமும் ஆட்சியில் நீடிக்காது என எதிர்க்கட்சிகள் கூறுவதாகவும், ஆனால் பாஜக கூட்டணி அரசு இந்த ஆட்சியை முழுமை செய்வதோடு மட்டுமல்லாமல் அடுத்தும் மத்தியில் ஆட்சியமைக்கும் என்றார்.
ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால், பாவங்கள் நீங்கி அவர்களது ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது ஐதீகம். பிடித்தவருக்கு தர்ப்பணம் கொடுக்கலாம், இதற்கு எந்த தடையும் இல்லை. இதில், பெண்களும் தங்களுடைய தந்தைக்கு, தாராளமாக தர்ப்பணம் கொடுக்கலாம், திருமணம் முடிந்தால் கொடுக்கக்கூடாது என்பார்கள், அப்படி எதுவும் கிடையாது. கணவருடைய ஆயுட்காலம் எதுவும் குறையாது.
பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அலுவலகத்திற்கு அல்கொய்தா அமைப்பின் பெயரில் மிரட்டல் வந்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், “முதல்வர் அலுவலகம் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படும், அதை சிறப்புப்படை போலீசாராலும் தடுக்க முடியாது” என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாரும், தீவிரவாத தடுப்புப்படையினரும் விசாரிக்கின்றன.
* சைலேஷ் குமார் யாதவ் – தமிழ்நாடு வீட்டுவசதி கழக டிஜிபி * தினகரன் – சிலை கடத்தல் கூடுதல் டிஜிபி *செந்தில்குமார் – கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.* பாவனீஸ்வய் – டிஜிபி அலுவலக ஐ.ஜி.
*ரூபேஷ்குமார் மீனா – நெல்லை காவல் ஆணையர் * மகேந்தர் குமார் ரத்தோட் – சமூகநீதி, மனித உரிமைகள் ஐஜி *சாமுண்டீஸ்வரி – டிஜிபி அலுவலக ஐ.ஜி. * ராதிகா – சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர்
*செந்தில் குமாரி – சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி. *நஜ்முல் ஹூடா – டிஜிபி அலுவலக ஐ.ஜி. *மூர்த்தி – நெல்லை சரக டிஐஜி *பிரவேஷ் குமார் – சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் *அபிஷேக் திக்சித் – ரயில்வே டிஐஜி, சென்னை *அபினவ் குமார் – ராமநாதபுர சரக டிஐஜி * துரை – டிஜிபி அலுவலக டிஐஜி * தேவராணி – வேலூர் சரக டிஐஜி * சரோஜ் குமார் தாகூர் – சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையர்.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. நட்பை மையமாக வைத்து தமிழில் பல படங்கள் வெளியாகி வெற்றியும் பெற்றுள்ளன. நட்பை மையமாக வைத்து வெளியான தளபதி, பஞ்ச தந்திரம், ப்ரெண்ட்ஸ், சுப்ரமணியபுரம், நாடோடிகள், புன்னகை தேசம், பாய்ஸ், சென்னை 28, நண்பன், என்றென்றும் புன்னகை, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது?
Sorry, no posts matched your criteria.